SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, June 30, 2012

DRESS CODE FOR ELEMENTARY SCHOOL TEACHERS

ஆசிரிய ஆசிரியைகள் கண்ணியமாக உடை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

Friday, June 29, 2012

JUNE 23 CRC ABSENTEES DATA COLLECTED BY SSA


முப்பருவ கல்விமுறை பயிற்சி: ஆப்சென்ட் ஆசிரியர் விவரம் சேகரிப்பு-29-06-2012


சென்னை: முப்பருவக் கல்வி முறை பயிற்சி வகுப்புகளில், "ஆப்சென்ட்&'ஆன ஆசிரியர்கள் குறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், விவரம் சேகரித்து வருகின்றனர். இதனால், "ஆப்சென்ட்&' ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டில் முப்பருவக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, கற்றலின் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன.
கடந்த வாரம் (ஜூலை 23) சனிக்கிழமை குறுவள மையம் அளவில், 6, 7, 8ம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பில், மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர் "ஆப்சென்ட்&' ஆகினர். இதனால், அதிர்ச்சியுற்ற எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், "ஆப்சென்ட்&' தகவலை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள், முப்பருவக் கல்வி முறையை, மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் கற்பிக்க முடியும்? "ஆப்சென்ட்&' ஆனவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் முகமது அஸ்லம், முப்பருவக் கல்வி முறையில், கற்றலில் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்பு, மாநில அளவில் நடக்கின்றன. இதில், ஆசிரியர்கள் பலர், "ஆப்சென்ட்&' ஆகியுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மற்றும் "ஆப்சென்ட்&' ஆசிரியர்கள் விவரங்கள் சேகரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

CRAZE GOES DOWN FOR TEACHER TRAINING EDUCATION


ஆசிரியர் பயிற்சிக்கு குறைகிறது மவுசு: நாளை தரவரிசைப் பட்டியல்-29-06-2012




ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.
சென்னை: ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக்கு, 4,100 விண்ணப்பங்கள் விற்பனையானது. 3,864 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினர்.
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 2,970 இடங்களும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,758 இடங்களும் உள்ளன. இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலேயே இடம் கிடைக்கும். விண்ணப்பித்த மாணவர்களின், தரவரிசை பட்டியலை, நாளை இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிட, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக, திருச்சி நகரில், மூன்று இடங்களில் கலந்தாய்வு நடக்கும். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே விண்ணப்பித்து இருப்பதால், திருச்சி பிராட்டியூர் மேற்கில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் மட்டும், கலந்தாய்வு நடக்கிறது.
ஜூலை 5ம் தேதி துவங்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதங்களை, 2, 3 ஆகிய தேதிகளில், விண்ணப்பங்களை ஒப்படைத்த மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்; அதற்கு முன்னதாகவே இணையதளத்திலும், "ஹால் டிக்கெட்&' வெளியிடப்படும்.
விண்ணப்பித்த மாணவர்களில், 5 சதவீதம் பேர் வரை, வராமல் போகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, June 28, 2012

ON june 29 transferred &promoted teachers should join in new schools

கலந்தாய்வில் ஆணை பெற்ற ஆசிரியர்கள் உடனே பணியில் சேர உத்தரவு-30-06-2012


சேலம்: தொடக்கக் கல்வித் துறை நடத்திய பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வில் ஆணை பெற்ற ஆசிரியர்களை, நேற்று மாலைக்குள் புதிய இடத்தில் பொறுப்பேற்க, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதனால், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
தமிழக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு, அந்தந்த மாவட்டங்களில், ஜூன் 27ம் தேதி துவங்கியது.அன்று காலை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வும்; மதியம், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் இருந்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஜூன் 28ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலும், மதியம், இடைநிலை ஆசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வும்; நேற்று காலை, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல், மதியம், இடைநிலை ஆசிரியர்களில் இருந்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு, பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை பெற்ற ஆசிரியர்கள், ஜூன் 29ம் தேதி மாலைக்குள், பழைய பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. நேற்று, இம்மாதத்தின் கடைசி வேலை நாள் மற்றும் சம்பள விவகாரத்தில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, இந்த உத்தரவு வெளியிட்டிருப்பதாக கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை வரை கலந்தாய்வு நடந்ததால், அதில் ஆணை பெற்ற தலைமை ஆசிரியர்கள், உடனடியாக பள்ளிக்குச் சென்று, புதிய பணியிடத்தை ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

JULY 2 LOCAL HOLIDAY FOR NAGAI BLOCK SCHOOLS


நாகை பள்ளிகளுக்கு ஜூலை 2-ல் விடுமுறை



நாகப்பட்டினம், ஜூன் 27: நாகையை அடுத்த நாகூரில் உள்ள நாகநாதசுவாமி திருக்கோவில் தேர் திருவிழாவையொட்டி, நாகை நகரம் மற்றும் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை, ஜூலை 14-ம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SEXUALLY HARASSING TEACHERS SHOULD NOT CONTINUE IN SERVICE -CM


பாலியல் குற்றவாளிகள் ஆசிரியர்களாக நீடிக்கக்கூடாது: முதல்வர்-28-06-2012




சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பள்ளி மாணவ-மாணவியர், ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது, நெடுங்காலமாக நடந்துவரும் விஷயமாக இருந்தாலும், சமீப ஆண்டுகளாக அந்த கொடுமையான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முதல்வர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முதல்வரின் இந்த உத்தரவையடுத்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, அரசாணை ஒன்றை வெளியிட்டு, அது அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த புதிய அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சமூகத்திற்கு முன்னோடியாக விளங்க வேண்டிய ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்கள் புரிவதால், மாணவர்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அரசுக்கு அதிக புகார்கள் வந்துகொண்டுள்ளன.
இந்த மோசமான சூழலை நீக்கி, ஆசிரியர் - மாணவர் என்ற புனிதமான உறவை ஒழுங்கமைக்கவும், தங்கள் பணியின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்படவும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஒழுங்கு நடவடிக்கை
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு, பணி நீக்கம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) பொருந்தும். இந்த விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளில் ஒன்றை வழங்கலாம் என தமிழ்நாடு குடிமைப்பணி விதி 8ல் கூறப்பட்டுள்ளது.
குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

Wednesday, June 27, 2012

PROCEEDING FOR DOUBLE DEGREE REGARDING

G.O FOR HOLIDAY ON JULY 12 TET EXAM

6 crores for benefit for 260 primary hms 1.6.1988





260 ஆசிரியர்களுக்கு ரூ.6 கோடி பணப்பயன்
சென்னை:தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்ற, தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த, 260 ஆசிரியருக்கு, ஆறு கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.கடந்த, 1988 ஜூன் 1ம் தேதிக்கு முன்வரை, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியரின் சம்பளம் ஒரே நிலையில் இருந்தது. இந்த தேதிக்குப் பின், இரண்டு ஆசிரியர்களுக்கும் தனித்தனியே சம்பள விகிதம் மாற்றப்பட்டது. இதையடுத்து, 1988, ஜூன் 1ம் தேதிக்கு முன்வரை பணியாற்றிய காலத்தை, புதிய சம்பள விகிதப்படி கணக்கிட்டு வழங்கக்கோரி, இடைநிலை ஆசிரியர் மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் 65 பேர், தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். இவர்களுக்கு, புதிய விகிதத்தில் சம்பளம் கணக்கிட்டு வழங்க உத்தரவிடப்பட்டது. இவர்களை பின்பற்றி, மேலும், 195 பேர் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்றனர்.அதன்படி, 260 பேருக்கும், ஆறு கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, 260 ஆசிரியரில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம், 1.75 லட்ச ரூபாயும், அதிகபட்சமாக, மூன்று லட்சத்து 7,500 ரூபாயும் பெறுவர்.

CERTIFICATE VERIFICATION FOR BT ASSISTANTS IN TRB


பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு




சென்னை, ஜூன் 27: பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
 வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.
 இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

CCE TRAINING CAMP FOR TEACHERS


ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி



விருதுநகர், ஜூன் 27: விருதுநகரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சார்பில் உயர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதி்ப்பீட்டு முகாம் பயிற்சி 27.06.12 நடைபெற்றது.

இந்தப்பயிற்சி முகாமிற்கு உதவி திட்ட அலுவலர் மாடசாமி தலைமை வகித்து பயிற்சி வகுப்பையும் தொடங்கி வைத்தார். இதில், ஆசிரியர் மதிப்பீடு படிவம், மாணவர் திறன் பதிவேடு, கல்வி இணைச்செயல்பாடுகள் பதிவேடு குறித்து வட்டார வளமையத்தின் ஆசிரியர் பயிற்றுநர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பயிற்றுநர்களாக வினிதா, அமுதா, செல்வி, கவிதா, கலா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

மேலும், இப்பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் கல்வி அலுவலர்(பொறுப்பு) த.பகவதி பார்வையிட்டு ஆய்வு செய்து முப்பருவ கல்வி முறை குறித்தும் தொடர் மற்றும் மதிப்பீட்டு முகாம் குறித்தும் உயர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொன்.மாரியப்பன் செய்திருந்தார்.  
 

10+2+3 and 11+1+3 clarifications

Tuesday, June 26, 2012

TC CAN BE CORRECTED ACCORDING TO BIRTH CERTIFICATE


பிறப்புச் சான்றிதழில் குளறுபடி: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு-26-06-2012




விருதுநகர்: பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி குளறுபடிகளை, தலைமை ஆசிரியர்கள் சரி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் 5 வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்கின்றனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளி சான்றுகளில் வேறுபாடு ஏற்படுகிறது. இக்குளறுபடிகளால் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதும்போது சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன்படி நடவடிக்கை எடுத்துள்ள கல்வித்துறை, உள்ளாட்சிகளில் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்படி, பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் செய்யலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

13 JDS SUPERVISING COUNSELLING STATEWIDE


விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்
https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XMXh2SkxyWGQzMGM

https://docs.google.com/viewer?pid=explorer&srcid=0B2SoP8lxbo1XMXh2SkxyWGQzMGM&docid=72f3e5a05ff42f7af1a19a9c431f2fa6%7Cfea0e7dffcfd956fb53b604f2edf526e&a=bi&pagenumber=1&w=138

https://docs.google.com/viewer?pid=explorer&srcid=0B2SoP8lxbo1XMXh2SkxyWGQzMGM&docid=72f3e5a05ff42f7af1a19a9c431f2fa6%7Cfea0e7dffcfd956fb53b604f2edf526e&a=bi&pagenumber=2&w=138


Monday, June 25, 2012

ELEMENTARY EDUCATION COUNSELLING SCHEDULE &CENTRES

TIPS FOR TET EXAM IN www.testfnagai.blogspot.in


ஆசிரியர் தகுதித் தேர்வை அணுகுவது எப்படி?-



தமிழக அரசு நடத்தும் 2012ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்விற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இந்த நேரத்தில், நீங்கள், குறைந்தபட்சம் அடிப்படை தயார்படுத்தலையாவது முடித்திருக்க வேண்டும்(அதாவது தேர்வுக்குப் படித்தல்).
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தை பெறுவது எப்படி என்பதை அறிதல் வேண்டும். தேர்வுக்கான கேள்வித்தாள் எவ்வாறு இருக்கும்? என்னால், 150 கேள்விகளுக்கு வெறும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியுமா? Multiple choice கேள்விகள் தேர்வுகளுக்காக நான் பயிற்சி எடுக்க வேண்டுமா?
மாதிரி பேப்பர்களைக் கொண்டு வீட்டில் பயிற்சி செய்தால், நிஜ தேர்வுக்கான சரியான பயிற்சியை என்னால் பெற முடியுமா? நான் பலவீனமாக இருக்கக்கூடிய அல்லது நன்றாக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? என்னுடைய புலமையை அளவிடுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.
தேர்வு எழுதுவதற்கான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நீங்கள் எளிதாகப் பெற வேண்டுமெனில், அதற்கு மாதிரி தேர்வே(model or mock test) ஒரு சிறந்த வழியாகும். இதுபோன்ற தேர்வுகளை எழுத, பிரிண்ட் செய்யப்பட்ட படிவங்கள் answer key -யுடன் கிடைக்கின்றன. இதுபோன்ற மாதிரி தேர்வுகளை எழுதும்போது, உண்மையான தேர்வு சூழல் போன்ற ஒன்றை உருவாக்கி எழுதிப் பார்க்க வேண்டும்.
மேலும், நிபுணர்களால் வழங்கப்படும் மாதிரித் தேர்வுகளை நீங்கள் எழுதிப் பார்ப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில், அந்த நிபுணர்களுக்கு, உங்களின் தேர்வை பகுப்பாய்வு செய்த அனுபவம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற மதிப்பெண் பற்றிய தங்களின் மதிப்பீட்டை அவர்கள் வழங்குவதோடு, நீங்கள் எதில் பலவீனமாக இருக்கிறீர்கள் மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் எவை போன்றவை பற்றிய ஆலோசனைகளையும் அவர்கள் தருகிறார்கள்.
நீங்கள் மாதிரி தேர்வை எப்போது எழுதலாம் என்ற கேள்வி எழலாம்? உங்களின் அடிப்படை தயார்செய்தலை முடித்தப் பின்னரே, மாதிரி தேர்வை எழுத வேண்டும். மேலும், நிஜ தேர்வுக்கு, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் மாதிரித் தேர்வை எழுதுதல் சிறந்தது. இதன்மூலம் உங்களின் நிலைப் பற்றிய சிறந்த மதிப்பீட்டை நீங்கள் பெறுவீர்கள்.
இந்த 15 நாட்களில், குறைந்தபட்சம், 2 முதல் 3 மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதலாம். ஒவ்வொரு தேர்வின் முடிவிலும், உங்களின் முன்னேற்றம் மற்றும் பலவீனங்களை ஆய்ந்து, அதன்மூலம் நிஜ தேர்வுக்கு உங்களை சிறப்பாக தயார்செய்து கொள்ளலாம்.
மாதிரித் தேர்வுகள் என்பவை, உங்களின் பலவீனங்களை அறிந்து, அதன்மூலம் உங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பெரிதும் பயன்படுபவை. நீங்கள் செய்த பிழைகளுக்கான காரணத்தை நீங்கள் கண்டுபிடித்து, அதை களையலாம். இத்தகைய தேர்வுகளின் மூலமாக, நீங்கள் அடிக்கடி மற்றும் ஒரே ஒருமுறை மட்டுமே செய்த தவறுகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
தயாராதலை அப்போதுதான் முடித்திருக்கும் ஆசிரியர்கள், முழு அளவிலான மாதிரி தேர்வுகளை எழுதுதல் நலம். இதன்மூலம், நிஜ தேர்வு நாளில் எவ்வாறு எழுதலாம் என்ற ஐடியா கிடைக்கும்.
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

Sunday, June 24, 2012

113 AEEOs have got transferred in counselling


உதவி தொடக்கக்கல்வி அலுவலர் 113 பேருக்கு பணியிட மாறுதல்-24-06-2012


சென்னை: தமிழகத்தில், 113 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பணியிட மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது. பணியிட மாறுதல் கேட்டு, 227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 113 பேர், விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.
இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும், பணியிட மாறுதலுக்கான உத்தரவுகளை, இயக்குனர் ராமேஸ்வர முருகன் வழங்கினார். துறையில், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம், 34 பேர் நேரடியாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. மீதியுள்ள இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

Saturday, June 23, 2012

JULY 7 SATURDAY SCHOOLS HOLIDAY FOR TNPSC EXAM


TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஏதுவாக ஜூலை 5 & 6அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது 

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்


https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XNlVfOUdxN2hFRnM

CHESS GAME TRAINING FOR ALL TEACHERS ON JULY 16-17

அனைத்து ஆசிரியர்களுக்கும் சதுரங்க விளையாட்டுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஜூலை 5 & 6 மாவட்ட அளவிலான பயிற்சி ஜூலை 16&17 ஒன்றிய அளவிலான பயிற்சி-- 



விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XTVNNWWswYWxDZEk

Friday, June 22, 2012

SCIENCE MANUAL;FOR UPPER PRIMARY TEACHERS

6,7 & 8 வகுப்புகளுக்கு உண்டான அறிவியல் கையேடு

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XYk8zMDlfc3Fod3c

RIGHT TO EDUCATION TRAINING FOR NGOS


கட்டாய கல்வி உரிமை சட்டம்: தன்னார்வ குழுக்களுக்கு பயிற்சி-22-06-2012


தேனி : கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள தன்னார்வ குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 பிப்.,24 ல் அமல்படுத்தப்பட்டது. 6 முதல் 14 வயதுள்ள சிறுவர்கள், வறுமை உள்ளிட்ட காரணங்களால் வேலைக்கு செல்வதை தடுப்பதற்காக, கல்வி பெறுவது உரிமையாக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி 7 வயது சிறுவன் பள்ளி செல்லாமல் இருந்தால், அந்த சிறுவனின் வயதுக்கு ஏற்ப மூன்றாம் வகுப்பில் சேர்த்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும், எளிய நடைமுறையில் சேர்த்துக் கொள்ளவும், இந்த சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமம் முதல் நகரங்களிலும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஆசிரிய பயிற்றுனர்கள் 5 பேர் தலைமையில் 30 பேர் கொண்ட தன்னார்வ குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு இந்த சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 413 ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 30 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 390 தன்னார்வ குழு உறுப்பினர்களுக்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் பயிற்சி அளித்து, விழிப்புணர்வுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க உள்ளனர். அதன்பின், இவர்கள் அனைத்து தரப்பினருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.