SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, October 30, 2013

10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்



10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்
 


கடந்த இரண்டு ஆண்டுகளில் 10வது முறையாக தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா,
அமைச்சர் கே.சி.வீரமணியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். 
விராலிமலை எம்.எல்.ஏ, டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார். மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை அமைச்சராக நியமித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

புதிய அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நவம்பர் 1ஆம் தேதி பதவியேற்கிறார்

Tuesday, October 29, 2013

TEACHERS WORKING IN OFFICE DUE TO SHORTAGE OF OFFICE STAFF IN AEEO OFFICES

GRIEVANCE DAY ADJUSTED DUE TO DIWALI


koottani flex

--------


--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/balakoottani
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Sunday, October 27, 2013

பாடம் நடத்த முடியாமல் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், சைக்கிள், லேப்-டாப், காலணி, நோட்டு, புத்தகப்பை, ஜியாமென்டரி பாக்ஸ், அட்லஸ், கலர் பென்சில், கிரையான் என 14 விதமான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான நலத்தி ட்டங்களை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களுக்கு தனித்தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லேப்-டாப் என்று எடுத்து க்கொண்டால் அந்த பொறுப்பு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு எத்தனை லேப்-டாப் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது? யார் யாருக்கு கிடைக்கவில்லை? என அனைத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க வேண்டும். இதேநிலைதான் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும்.
பாதிக்கப்படும் படிப்பு
மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நலத்திட்டங்களுக்கான கணக்குகளைப் பார்த்து பராமரிக்கவே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது. கணக்கில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் அதிலேயே அவர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டியதுதான்.
நலத்திட்ட பணிகளை கண்காணிப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு ஆசிரியர்கள் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் சரியாக பாடம் நடத்த முடிவதில்லை.
இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி குறைந்தால் அதற்கும் ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
காலணிக்கு அளவு எடுக்கும் அவலம்
ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணி வழங்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பாத அளவை எடுக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காகவா ஆசிரியர் பயிற்சியும், பி.எட். படிப்பும் படித்துவிட்டு வந்தோம் என்று நொந்துகொள்கிறார்கள் ஆசிரி யர்கள் .
அனைத்து நலத்திட்ட பணிகள் தொடர்பான கணக்குகளை ஒருங்கிணைத்து கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபம். அவர்களால் பள்ளி நிர்வாக பணிகளை சரிவர கவனிக்க முடிவதில்லை.
“கல்வி அதிகாரிகள் அனுப்பும் இ-மெயில்களுக்கு பதில் அனுப்பி அனுப்பியே நேரம் எல்லாம் போய்விடுகிறது. பள்ளி நிர்வாகத்தை எப்படி கண்காணிக்க முடியும்” என்று சென்னையில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் வேதனையுடன் கூறினார்.
“மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க, அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
நலத்திட்டப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு பள்ளியிலும் தனியாக ஒரு அதிகாரியை நியமித்துவிட்டால், ஆசிரியர்கள் நிம்மதியாக பாடம் நடத்துவார்கள்” என்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன்.

அரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்!

அரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்!

சரா
COMMENT (37)   ·   PRINT   ·   T+  
  • நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம்.
    நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம்.
  • ஆசிரியை கிருஷ்ணவேணி தன் பள்ளி மாணவிகளை போட்டி ஒன்றுக்காக ஒடிசா அழைத்துச் சென்றபோது...
    ஆசிரியை கிருஷ்ணவேணி தன் பள்ளி மாணவிகளை போட்டி ஒன்றுக்காக ஒடிசா அழைத்துச் சென்றபோது...
'ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?'
பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.
சென்னை அருகே வண்டலூருக்குப் பக்கத்தில் உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென தனி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அவ்வப்போது அப்டேட் செய்து வரும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் பேசினேன்.
"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பலரும் மோசமாகவே பார்க்கிறார்கள். எங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள் என்றே சிலர் நினைக்கிறார்கள். இதை எனக்குத் தெரிந்தவர்களே என்னிடம் கலாய்த்தல் தொனியில் குத்திக்காட்டியிருக்கிறார்கள்.
அத்தகையோர் ஒவ்வொருவரிடமும் என்னால் விளக்கத்தை அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்குப் புரியவைப்பதும் கடினம். அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையையும், எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவு செய்தேன்.
அதன்படி, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்த மிகச் சில நண்பர்களிடம் விருப்பம் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்துக்கு இப்போது லைக்குகள் 500-ஐ தாண்டியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் எதிர்வினைகள் ஊக்கத்தை அளிக்கிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
தமிழகத்தில் முப்பருவ முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வளரறி மதிப்பீடு பிரிவின் மதிப்பெண்களை அள்ளுவதற்காக மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைக்கொண்டு விதவிதமான புராஜெக்ட்டுகளை செய்து, தங்கள் ஆசிரியர்களிடம் அசத்தி வருகிறார்கள். இந்த மதிப்பீட்டு முறை, இந்தக் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் படைப்பாற்றல் வியக்கத்தக்கது. தங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான புராஜக்ட்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த விவரம் அனைத்தும் இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகள்தான் இந்தப் பக்கத்தின் ஹைலைட்.
"எங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை, உலகுக்கு ஆதாரங்களுடன் உரைப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கம் துணைபுரிகிறது. எங்கள் பள்ளியில் கொண்டாடும் 'ஜாய் ஆஃப் கிவிங்', 'ஆசிரியர் தினம்' உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறோம்.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே ஏழ்மையின் பின்னணி கொண்டவர்கள். இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கு, இளைஞர்கள் பலரும் முன்வந்திருக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவதற்கும் சிலர் உறுதி அளித்திருக்கிறார்கள். என் கோபத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், இப்போது என்னையும், சக ஆசிரியர் நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தளமாகவே மாறிவிட்டது.
எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்புக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவருமே காரணமானவர்கள். அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்கள் பகுதியில் இப்பள்ளிக்கு நன்மதிப்பு கூடியிருக்கிறது" என்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி.
சமீபத்தில்கூட தன் மாணவர்கள் போட்டி ஒன்றுக்காக செய்த புராஜெக்டை, யூடியூபில் பதிவேற்றி, அதற்கு இணையவாசிகளின் ஆதரவையும் நாடினார். அந்தப் புராஜெக்ட்டைப் பார்க்கhttp://youtu.be/HioD6RKgPe4
ஃபேஸ்புக் என்பது ’பொழுது போக்கு’ அல்ல... ’பொழுது ஆக்கம்’மும் கூட, என்பதை உணர்த்தும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம், இப்போதெல்லாம் யாராவது அவரது பணி மற்றும் பள்ளியைப் பற்றி கிண்டல்செய்தால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் ஃபேஸ்புக் பக்க முகவரிhttps://www.facebook.com/nallambakkampums
சரா, தொடர்புக்கு siravanan@gmail.com

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா? தமிழ் தொலைகிறதா? - பதறுகிறார் தங்கர் பச்சான்

COMMENT   ·   PRINT   ·   T+  
?
தங்கர் பச்சான் (கோப்புப் படம்)
தங்கர் பச்சான் (கோப்புப் படம்)
அரசுத் தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியின் துவக்க ஆண்டுகளை ஆங்கிலம் வழியாகத் தொடங்குகிறார்கள். அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கான கல்வியில் முன்பை விட அதிகமாக கவனம் செலுத்துவதாகத் தோன்றினாலும், ஆங்கிலக் கல்வி ஒன்றுதான் அந்தத் தரத்தைக் கொடுக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. விளைவு, தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கி அனைவரும் படையெடுத்தனர். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைத் தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளிலேயே பயிற்று மொழியை, ஆங்கிலமாக மாற்ற அரசு முடிவெடுத்தது. இதற்கு தமிழ் மீதும், தமிழ் வழிக் கல்வி மீதும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட கல்வியாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களிடமிருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு, முதலாம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவல் , கடந்த ஞாயிற்றுக் கிழமை 'தி இந்து' இதழில் வெளியான செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பதற்றத்துடன் நம்மைத் தொடர்புகொண்டார், தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான தங்கர்பச்சான். உடனே அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.
தமிழ்வழிக் கல்வி வகுப்பில் மாணவர்கள் சேரவில்லை என்ற செய்தி குறித்து இத்தனை பதற்றம் ஏன்?
வெளிநாடு சென்றிருந்த நான் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். கடலூர் மாவட்டப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற செய்தியைப் படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. புகைப்படத்தில் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளி என்பதை பாத்தபோது மேலும் அதிர்ந்தேன். காரணம் அது நான் படித்த பள்ளி. அந்தப் பள்ளியின் அரசமர நிழலில் 'அ' என்ற எழுத்தை எழுதி எனது கல்வியைத் தொடங்கினேன். ஆலமர இலைகளைத் தைத்து அதில் மதிய உணவுடன் கல்வியையும் சேர்த்து உண்டு வளர்ந்தவன் நான். அந்த சாதாரணப் பள்ளியில் பயின்று தான் நான் ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளேன். எனது முதல் படமான 'அழகி', சமூகத்தில் முன்னேறியுள்ள பலர் தாங்கள் படித்த பள்ளிகள் குறித்த நினைவுகளையும் அவற்றை தரமுயர்த்த தங்களாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்த 'பள்ளிக்கூடம்' என்ற படத்தை இயக்க எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பள்ளிதான். இன்றுள்ள சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் இதுபோன்ற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் தான். மொத்தமே 3,000 பேர் இருக்கும் பத்திரக்கோட்டையில், ஒருவர் கூட தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லையே என்பது தான் என் பதற்றதுக்குக் காரணம்.
காரணம் ஒரு மொழியை ஒருவனிடமிருந்து பிடுங்குவது என்பது அவனது சிந்தனையைப் பிடுங்குவதற்கு சமம். மானம் என்பது ஆடையுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஆடையை இழந்தால் கூட, கந்தல் துணியை வைத்து மானத்தை மறைத்துக் கொள்ளலாம். மொழியை இழந்தால் எதைக் கொண்டும் அதை சரி செய்ய முடியாது. இப்போது தமிழர்கள் மானமிழந்து நிற்கிறார்கள்.தமிழ் இனமே இனத்தையே வேரறுந்துவிட்டது . தமிழர்களை, அவர்களது குழந்தைகளைப் பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டது. ஏற்கனவே நாம் சிந்திக்க மறந்துவிட்டோம். தேர்தல் அரசியல் என்ற சூதாட்டத்தில் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருப்பது மக்கள்தானே. இப்போது நாம் யாரிடம் சென்று முறையிடப் போகிறோம்?
உயர் வகுப்புகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களைப் படிப்பதிலும், ஆங்கிலம் வழியாக நடத்தப்படும் பாடங்களுடன் ஒன்றுவதிலும் தமிழ் மாணவர்களுக்கு சிக்கல் உள்ளது. இளம் பருவத்திலேயே ஆங்கில அறிவுடன் கல்வியைத் தொடங்கினால் மேல்படிப்பில் உதவிகரமாக இருக்கும் அல்லவா?
நான் பல நாடுகளுக்குச் சென்று வந்தவன். கிராமத்தில் நான் வாழ்ந்த என் வாழ்க்கையும் நான் கற்றக் கல்வியும் தான் என்னை உருவாக்கியவை. நமது சிந்தனை தாய்மொழியில் இருந்தால் தான் அது செழுமையானதாக இருக்கும். மொழி மூலம் தான் அது கிடைக்கும். இப்போது அந்த ஊற்றுக் கண்ணே அடைக்கப்பட்டுவிட்டது. உலகின் பல நாடுகள் தாய் மொழியைப் பாதுகாக்கின்றன. சீனாவைப் பாருங்கள். அத்தனை பெரிய நாடு. அங்கு தாய்மொழிக் கல்வி இல்லையா? ஆங்கிலேயர்கள் வசிக்கும் பிரிட்டனுக்கு அருகில் தான் மற்ற ஐரோப்பிய நாடுகளும் உள்ளன. அந்த நாட்டு மக்கள் பேசும் மொழியில் ஆங்கிலக் கலப்பே இருக்காது. இவ்வளவு ஏன்? உலக சினிமாக்கள் பார்க்கிறோமே. பிரெஞ்ச், ஜப்பான், கொரியா என்று எத்தனை மொழிப் படங்கள் பார்க்கிறோம். இரண்டரை மணி நேரம் ஓடும் படங்களில் ஒரு காட்சியில் கூட அவர்கள் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதே இல்லை. அதை அவர்கள் திட்டமிட்டும் செய்வதில்லை. இயல்பாக வருவது அது. நம் படங்களைப் பாருங்கள், தமிழ் சொற்களைத் தேடவேண்டும். தமிழில் தலைப்பு வைக்கவே போராட்டமாக இருக்கிறதே! நாமெல்லாம் திருவள்ளுவரைக் கொண்டாடவே அருகதையற்றவர்கள். ஒருபக்கம் அவரைக் கொண்டாடிக்கொண்டே மறுபக்கம் தமிழ் தொடர்பான அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம். மொழியைப் பிடுங்குவது சிந்தனையைப் பிடுங்குவதற்குச் சமம். மொழியைக் கடன் வாங்கியா சிந்தனையை வளர்க்க முடியும்? சொந்த மொழியில் சிந்திப்பவனுக்கும் அவனுக்கும் வேறுபாடு இல்லையா? 11-ம் வகுப்பு வரை வேறு எந்த மொழிப் பாடமும் தேவை இல்லை. கிராமப்புற மாணவர்களில் பாதிபேர் ஆங்கில பாடத்தில் தானே தோல்வியடைகிறார்கள்?
குழந்தைகள் எந்த மொழியையும் கற்கும் திறன் பெற்றவர்கள். தொடக்கத்திலேயே அவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வது அவர்களின் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் இல்லையா?
சரி நான் கேட்கிறேன். மேற்படிப்புப் படித்து நீங்கள் எல்லோரும் என்ன செய்துவிட்டீர்கள்? இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. பாட்டிலில் அல்லவா தண்ணீர் விற்கப்படுகிறது? இந்த நிலை மாற நாம் என்ன செய்துவிட்டோம். மேல்படிப்பு படித்ததால் நீங்கள் அடைந்த பயன் என்ன? நம்மிடம் நம் தொழில் இருக்கிறதா? அறிவியல், மருத்துவம் இருக்கிறதா? வாழ்க்கை இருக்கிறதா? முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவற்றில் எதை நாம் பாதுகாத்து வைத்திருக்கிறோம்? மேல்படிப்பை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? பெரியாரும் காமராஜரும் வெறும் மூன்றாம் வகுப்பு தான் படித்தார்கள். அவர்களின் சிந்தனைக்கு இணையாக யார் இருக்கிறார்கள்? முளையிலேயே விதை வெளிவராமல் கிள்ளிப் போடுவது தானே இங்கே பிரச்சினை? என் கோரிக்கை இது தான். ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்றுக்கொடுங்கள். உயர்கல்விக்கு நீங்கள் ஆங்கிலம் பயன்படுத்துங்கள். தொடக்கத்தில் இருந்தே ஆங்கிலம் தான் என்று முடிவு செய்தால், சட்டமன்றக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி ஒரு தீர்மானம் கொண்டுவாருங்கள் . தமிழில் ஒருவன் பேசினால் தானே அது தமிழ்நாடு? தமிழர்கள் ஒரு நிமிடம் வேறுமொழி கலக்காமல் தொடர்ந்து தமிழில் பேசவே திணறுகிறார்கள். அப்புறம் எதற்கு தமிழ்நாடு என்ற பெயர்?
தங்கள் குழந்தைகள் ஆங்கிலக் கல்வி பெறவேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும் பெற்றோர்களை, அரசுப் பள்ளிகளை நோக்கி திரும்பச் செய்வது தான், அரசின் இந்த புதிய உத்தரவின் நோக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே?
இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஆங்கிலப் பாடத்திட்டத்தை வைத்து மக்களை ஈர்க்கும் தனியார் பள்ளிகளும், இனி தமிழில் தான் பாடம் நடத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினால் இந்தப் பிரச்சினையே தீர்ந்துவிடுமே? தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலப்படம் என்று கொண்டு வருவது எப்படி சரியான தீர்வாகும் என்று தெரியவில்லை. பள்ளிகளுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குடித்துவிட்டு தள்ளாடி வருபவர்களை காண நேரும் இளம் மாணவர்கள் மனதில் பாதிப்பு ஏற்படாதா? முதலில் இதுபோன்ற விஷயங்களைத் தான் சரிசெய்ய வேண்டும். இந்தியர்கள் பிச்சை எடுக்கவில்லை. தெளிவுடன் இருந்திருக்கிறார்கள். ஆங்கிலக் கல்வி கொடுத்து தான் அவர்களை ஈர்க்க வேண்டும் என்று மெக்காலே பிரபு எழுதி வைத்திருக்கிறார். நான் இன்று இருக்கும் அரசை மட்டும் குறை சொல்லவில்லை. கடந்த 45 ஆண்டுகளாக நம் மண்ணை ஆண்ட கட்சிகள் தான் இவற்றுக்குப் பொறுப்பு. அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தாய்மொழி குறித்த அக்கறை மற்ற தலைவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை. மேல்படிப்பு படித்தவர்கள் அனைவரையும் நான் குறை சொல்லவில்லை. என்றாலும் கல்வியறிவு அதிகம் உள்ள சமூகம் என்று சொல்லப்படுபவர்களால் தான் இயற்கை வளங்கள் அழிந்தன. இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தவர்களிடம் போய், படித்தவர்கள் உரங்களை பயன்படுத்த அறிவுரை சொன்னார்கள். இப்போது நிலைமை என்ன? உரங்கள் என்ற பெயரில் நிலங்கள் அனைத்தும் விஷமேறி கிடக்கும் நேரத்தில் அதே விவசாயியிடம் போய் ''இயற்கை விவசாயம் செய்யுங்கள் , ஆர்கானிக் முறையில் பயிர் செய்யுங்கள்" என்று பாடம் எடுக்கிறார்கள். இதைத் தான் நான் இப்போதும் சொல்கிறேன். இப்போது ஆங்கிலக் கல்வி வேண்டும் என்று சொல்பவர்கள் இன்னும் சில ஆண்டுகளில், எல்லாம் சீரழிந்த பிறகு, தமிழில் தான் கல்வி வேண்டும் என்று சொல்வார்கள். அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.
இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசியிருக்கிறீர்களா?
நான் மிகவும் மதிக்கும் அறிஞர் அருளியார், கி.த. பச்சையப்பன் போன்ற பலரிடம் பேசியிருக்கிறேன். பொதுவாக கல்வியாளர்கள், ஆரம்பக் கல்வியில் ஆங்கிலம் திணிக்கப் படுவதை ஏற்கவில்லை. தமிழ் வழியில் படித்து அப்துல் கலாம் முதல் மயில்சாமி அண்ணாத்துரை வரை எவ்வளவோ உதாரணங்களை என்னால் காட்டமுடியும். ஏனென்றால் தாய்மொழியில் கல்வி பயில்பவர்களால் தான் சிறப்பாக சிந்திக்க முடியும். ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களிடம் முதலில் பொது அறிவு இருக்குமா என்று சோதித்துப் பாருங்கள். படைப்புத்திறனோ, மற்ற திறன்களோ சுத்தமாக இவர்களிடம் இல்லை என்ற உண்மை உங்களுக்குப் புரியும்.
இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கவில்லை என்கிறீர்களா?
அப்படித்தான் சொல்ல வேண்டும். இன்று இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று போராடும் அமைப்புகள் தாய் மொழிக்கு எதிரான அரசின் முடிவை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு எதிராக மக்கள் நேரடியாகப் போராடாததைக் குறிப்பிட விரும்புகிறேன். பிரபாகரன் இறந்த செய்தி வெளியான அன்று தமிழகத்தில் மக்கள் யாரும் போராட்டத்தில் இறங்கவில்லை. தொலைகாட்சி தொடர்களில் தான் அவர்கள் மூழ்கியிருந்தனர். அமைப்புகளும், கட்சிகளும் தான் போராடின. காரணம், தமிழ் என்ற உணர்வை மக்களிடம் விதைக்கத் தவறிவிட்டோம். அப்படி நடந்திருந்தால் மக்களே நேரடியாக போராடியிருப்பார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் நம் மொழி மீது நமக்கு அக்கறை இல்லை என்பது தான். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அரசு திட்டமிட்டோ அல்லது அறியாமலோ செய்யும் இந்தத் தவறால் நம் வருங்காலத் தலைமுறையினர் பாதிப்படைவது மட்டும் நிச்சயம். இதுபோன்ற கொள்கை முடிவுகளை எடுக்கும் உயரதிகாரிகள் தமிழர்களாக இருப்பார்களா என்ற சந்தேகம்கூட உள்ளது. நம் அரசு திருவள்ளுவரின் ஆட்சி குறித்து எழுதிய அதிகாரத்தை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஆங்கில கல்வி முறை குறித்த என் கருத்து கோபவசத்தால் எழுந்ததல்ல, தமிழினத்தை அடகுவைக்கும் இந்தப் போக்கு மாற நாம் அனைவருமே குரல்கொடுக்கவேண்டும். சரியான முடிவை எடுக்க அரசுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.
தங்கர்பச்சானின் இந்தக் குமுறல் ஒற்றைக் குரலல்ல. பலர் மனதில் உறைந்திருக்கும் விஷயம் தான். தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதால், தமிழ் மீதான ஆர்வம் இளம் தலைமுறையினருக்கு இல்லாமல் போய்விடும் என்று கருதுபவர்களும், ஆங்கிலம் கற்பதால் பல நன்மைகள் உண்டு என்ற கருத்து உள்ளவர்களும் நம்மிடையே உள்ளனர். வாசகர்கள் இந்த விஷயம் மீதான தங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்பலாம். இதை ஒரு விவாதமாகத் தொடர 'தி இந்து' தயாராக உள்ளது.

STUDENTS TURNING WILD

PG BOTANY CALLED FOR CV

தினமலர் சார்பில் 25 பேருக்கு "லட்சிய ஆசிரியர் - 2013" விருது


அக்டோபர் 27,2013,07:13 IST


கோவை: "ஆசிரியர் தினம்" முன்னிட்டு, "தினமலர்" நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட, "நான் ஒரு லட்சிய ஆசிரியர்" கட்டுரைப் போட்டியில் தேர்வு பெற்ற, 25 ஆசிரியர்களுக்கு, "லட்சிய ஆசிரியர் -2013" விருது, கோவையில் நேற்று வழங்கப்பட்டது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மிகுந்த ஆர்வமுடன் கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். அவற்றில், 25 சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசளிப்பு விழா, கோவை, காந்திபுரம், ராம்நகரிலுள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, சிறந்த கட்டுரையாளர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது: அனைவரிடமும் திறமை உண்டு. அந்த திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே, அதனை மேம்படுத்த முடியும். பாராட்டு, குழந்தைகள் முதல் அனைவரையும் மகிழ்விக்கிறது. ஆசிரியர்களின் திறமைகளை கண்டறிந்து பாராட்டும் "தினமலர்" நாளிதழுக்கு நன்றி.
துறைகள் எதுவாக இருந்தாலும், குறைகளை சுட்டிக்காட்டும் "தினமலர்" நாளிதழின் நோக்கம் வரவேற்கத்தக்கது. மாணவர்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களின் மனதைத் தொடும் விதத்தில், ஆசிரியர்களின் செயல்பாடு அமையவேண்டும். பிற பணிகளை போன்றதல்ல, ஆசிரியர் பணி. மனதளவில் ஒன்றுதலோடு பணியாற்றினால் மட்டுமே, சிறப்பாக செய்ய முடியும்.
அழகிய சிற்பங்களை உயிரோட்டத்துடன் எதிர்கால சமூகத்திற்கு கொடுக்கவேண்டியது, ஆசிரியர்களின் தலையாய கடமை. அதை உணர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு, ஞானகவுரி பேசினார். "லட்சிய ஆசிரியர் - 2013" விருது பெற்ற ஆசிரியர்கள் கூறுகையில், "இன்றைய தினம், எங்களது வாழ்நாளில் மறக்க முடியாத, இனிமையான நாள். முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய எங்களைப்போன்ற ஆசிரியர்களை கவுரவித்ததன் மூலமாக, தினமலர் நாளிதழ், ஆசிரியர்களின் கல்விச்சேவைக்கு பக்க பலமாக நிற்கிறது" என்றனர்.
மதுரை: ""நல்ல சமுதாயத்தை உருவாக்கும் களமாக ஒவ்வொரு ஆசிரியர்களும் திகழ வேண்டும்,'' என, மதுரையில் தினமலர் நாளிதழ் நடத்திய "லட்சிய ஆசிரியர்' கட்டுரை போட்டியில், பரிசு பெற்றவர்களை வாழ்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி பேசினார்.

தினமலர் நாளிதழ் நடத்திய "லட்சிய ஆசிரியர்- 2013' கட்டுரைப் போட்டியில், வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி, அவர் பேசியதாவது: கட்டுரை போட்டி மூலம் லட்சிய ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களை வெளிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள, "தினமலர்' நாளிதழுக்கு முதலில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் விரும்பி ஏற்கும் பணியாக, ஆசிரியர் பணியை ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும். இப்போது, ஆசிரியர்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் பதிவாகின்றன. நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கும் உன்னத பொறுப்பு, ஆசிரியர்களுக்குள்ளது. பள்ளி சென்ற பின், ஆசிரியர்கள் சொல்வதுதான் ஒவ்வொரு மாணவர்களுக்கு வேத வாக்கு. புத்தகத்தில் உள்ளதை மட்டும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல், சிந்திக்கும் திறனையும் வளர்க்க செய்ய வேண்டும். அனைத்து ஆற்றலும் நிறைந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும். ஒருவரின் சிந்தனை அடிப்படையில் தான் செயல்பாடு அமையும். எனவே, சமுதாயத்தில் பொறுப்புள்ள ஆசிரியர்களுக்கு, "பாசிட்டிவ்' சிந்தனை அவசியம். புதிய விஷயங்களை தாங்கள் கற்றுக்கொண்டு, மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர் சமுதாயம் இல்லை என்றால், ஆசிரியர் சமுதாயம் இல்லை. இன்றைக்கு ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்கேற்ப அவர்களின் அர்ப்பணிப்பு பணியும் அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் செயல் வடிவம் தான் ஆசிரியர்கள். நல்ல சமூகத்தை உருவாக்கும் களமாக பள்ளி வளாகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க உறுதியேற்க வேண்டும். "லட்சிய ஆசிரியர்' விருது பெற்ற நீங்கள் எழுத்தில் (கட்டுரையில்) தெரிவித்துள்ளது போல், செயலிலும் ஈடுபட்டு, நல்ல மாணவர்களை உருவாக்க பாடுபட வேண்டும், என்றார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 33 ஆசிரியர்களுக்கு "தினமலர்' கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற ஆசிரியர்கள்:

ரா. திரேசா, ஆர்.சி., ஆரம்ப பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை, எல்.சாய்கீதா, பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளி, மதுரை, எஸ்.உமாமகேஸ், இதயம் ராஜேந்திரன் உறைவிட மேல்நிலைப் பள்ளி, மதுரை, த.சார்லஸ் வேளாங்கண்ணி, செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, மகபூப்பாளையம், மதுரை, பீ. பாத்திமா ரம்யா, டால்பின் பள்ளி, மதுரை, கே. அமுதா, அரசு மேல் நிலைப் பள்ளி, உசிலம்பட்டி, ஆர்.ராமகிருஷ்ணன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ச.ந.சந்திரசேகரன், அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, உத்தங்குடி, பொ.காசிராஜன், சத்தியநாடார்கள் உயர்நிலைப் பள்ளி, சாத்தங்குடி, தா.காட்வின் வேதநாயகம் ராஜ் குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர், மு.ராமாத்தாள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தும்பலப்பட்டி, கா.மகமூதா, அரசு மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு, மு.பாலாஜி, அரசு மேல் நிலைப் பள்ளி, கோம்பைப்பட்டி, டி.ஜான்சன், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, விருப்பாச்சி, தீ.சித்ராதேவி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சித்தரேவு, கே.மணிமாலா, முத்தையா ஆரம்பப்பள்ளி, அல்லி நகரம், தேனி, ப. கார்மல் மேரி, தி ஹைரெஞ் பள்ளி, மாட்டுப்பட்டி, மூணாறு, எஸ்.அனிதா, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி, ஜி.வாசகர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கோணாம்பட்டி, மா.ஈஸ்வரன், அரசு மேல் நிலைப் பள்ளி, பூதிப்புரம், போ. பாண்டீஸ்வரி, ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கமுதி, பி.மகாதேவன், வ.உ.சி., மெட்ரிக் பள்ளி, பரமக்குடி, மா. விமலாதேவி, ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி, ஏ.ராபியாபேகம், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி, கீழக்கரை, ஆர்.வெங்கடேசன், அரசு மேல் நிலைப் பள்ளி, அழகன்குளம், வ.தெய்வானை, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளி, கீழச்சிவல்பட்டி, ச.சசிகலா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, டி.நடுவி கோட்டை, லோ. மங்கையர்க்கரசி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருமலை, இ.பெஞ்சமின், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மரக்காத்தூர், சி.சாமிநாதன், மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு, தி.சசிப்ரியா, கலை மகள் மேல்நிலைப் பள்ளி, திருத்தங்கல், எம்.சைனாராணி சாவித்ரி, எஸ்.எச்.என்., எட்வர்ட் நடுநிலைப் பள்ளி, சாத்தூர், பெ.மாரியப்பன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பந்தல்குடி, அருப்புக்கோட்டை, ச.மரிய சின்னம்மாள் பிரவீனா, தெலுங்கு குலாலர் ஸ்ரீசூளை விநாயகர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆ.டேவிட், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி

Friday, October 25, 2013

தொடக்கப் பள்ளிகளில் தடுமாறும் தமிழ்வழிக் கல்வி

பத்திரக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் (உள்படம்) தலைமை ஆசிரியர் டி.நாகராஜ்.
பத்திரக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் (உள்படம்) தலைமை ஆசிரியர் டி.நாகராஜ்.
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற அரசு, நடப்பு கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விளைவு கடலூர் மாவட்ட அரசு தொடக்கப் பள்ளிக ளில் இந்த ஆண்டு, முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட தமிழ் வகுப்பில் சேரவில்லை.
தனது பிள்ளையும் ஆங்கிலம் படித்து பட்டணத்துக்குச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் என்று நம்புகிற பெற்றோர்களும், கல்வி கடைகளைத் திறந்து கல்லா கட்ட நினைக்கும் கல்வி தந்தைகளின் மனப்போக்கும்தான் இந்த இழிநிலைக்குக் காரணம்.
தொடக்கப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்துள்ளதன் விளைவாக - கடலூர் மாவட்டத்தில் உள்ள 161 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 12 நடுநிலைப் பள்ளிகளிலும் முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 109 மாணவ, மாணவியர்கள் ஆங்கில வழி முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மேற்கண்ட 161 தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆங்கில வழிக் கல்விக்கென கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை எனபதும், மேலும் தமிழ் வழிப் பள்ளிகளில் படிப்பவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகையும் ஆங்கில வழி மாணவர்களுக்கும் என்பதும்தான்.
"தமிழ் மொழிக்கான அபாய அறிகுறி இது. தொடக்கப் பள்ளிக ளால் ஆங்கில வழிக் கல்வி வழியை புகுத்தியிருப்பது பண்பாட்டுச் சீரழி வாகும்" என்கிறார் கல்வியாளரும் பேராசிரியருமான பிரபா கல்விமணி.
பத்திரக்கோட்டை அரசு தொடக் கப் பள்ளித் தலைமையாசிரியர் நாகராஜ், "எங்கள் பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பில் தமிழ் வழி யில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. ஆங்கில வழி முதல் வகுப்புக்கு 23 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி களை மேம்படுத்தி, தனியார் பள்ளி களுக்கு இணையாக விதிமுறைக ளைப் பின்பற்றினால் மாற்றம் பெற வாய்ப்புள்ளது’’ என்றார்.
தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழி சேர்க்கை குறைந்தது பற்றி கடலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசும்போது, "ஆங்கில வழி சேர்க் கைக்கு இணையாக தமிழ் வழியிலும் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், வருகிற பெற்றோர்கள் ஆங்கில் வழியில்தான் சேர்க்க விரும்புகின்றனர்’’ என்றார்.
தாய் மொழியைத் தவிர்த்து பிற மொழியில் கல்வி கற்கும்போது அந்தக் குழந்தைக்கு புரிதல் தன்மையில் குறைபாடு ஏற்படும் என்பது பெற்றோர்கள் உணரும்போதுதான் தமிழ் வழிக் கல்விக்கு எதிர்காலம்

B.Ed students reluctant to undergo teaching practice in rural schools

PROMOTION DEMAND FOR VOCATIONAL TEACHERS

INSUFFICIENT OFFICE STAFF IN NAGAPATTINAM AEEO OFFICE

NOVEMBER 1ST FOR DIWALI EVE HOLIDAY

NAGAPATTINAM DEEO HAS ACCEPTED TO DECLARE HOLIDAY FOR PRIMARY AND MIDDLE SCHOOLS IN NAGAPATTINAM DISTRICT ON NOVEMBER 1ST FOR DIWALI EVE ON THE REQUEST OF KOOTTANI .THANK YOU

Tuesday, October 22, 2013

பஸ் வசதி கேட்டு அரியலூர் கலெக்டரிடம் பள்ளி குழந்தைகள் மனு

தமிழகத்தில் இன்று நடக்கும் முதுநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவு வெளியிட தடை






மதுரை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ஜோதி ஆபிரகாம் (45) ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஜூலை 21ல் நடந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) தேர்வு எழுதினேன். தேர்வில் 111 மதிப்பெண் பெற்றேன். வரலாறு பிரிவில் 173 பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. என்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை. ஆனால் என்னைப்போல் 111 மதிப்பெண் பெற்ற வேறு நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டாக காத்திருக்கிறேன். பி.எட் படித்துள்ளேன். இதற்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருந்தால் 115 மதிப்பெண் பெற்று இருப்பேன். எனக்கு 43 வயதாகிறது. இது கடைசி வாய்ப்பு. எனவே, என்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதேபோல், விலங்கியல் பிரிவில் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படாத முதுகுளத்தூரை சேர்ந்த சந்தானகுமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்து, ‘2270 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் கடைசி கட்&ஆப் மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்களுக்கு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே பணி நியமனம் வழங்கப்படும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள், கடைசி கட்&ஆப் மதிப்பெண் பெற்றவர்களின் விபரங்களை கோர்ட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிடக்கூடாதுÕ என உத்தரவிட்டார்.

14 மையங்களில் நடக்கிறது
தமிழ் பாடத்திற்கான 605 பணியிடங்கள் தவிர பிற பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றும், நாளையும் கன்னியாகுமரி,  சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கோவை, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென் னை, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் நடக்கிறது.ஆங்கிலம் & 343, கணிதம் & 288, இயற்பியல் & 228, வேதியியல் & 220, உயிரியல் & 193, விலங்கியல் & 181, வரலாறு & 173,  புவியியல் & 21, பொருளியல் & 257, வணிகவியல் & 300, மனையியல் & 1, உடற்கல்வி இயக்குநர் நிலை (1) & 17, நுண்ணுயிரியல் &  30, உயிர் வேதியியல் & 16, தெலுங்கு & 2 என அந்தந்த பாடங்களின் காலியிடங்களுக்கு தகுந்தவாறு 1:1 விகிதாசார அடிப்படையில்  2,270 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளன
ர்

Sunday, October 20, 2013

பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம்



அக்டோபர் 20,2013,11:40 IST

நாமக்கல்:
 "ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையம் மூலம், இப்பயிற்சி வழங்கி வருகிறது.
தமிழகத்தில் 385 வட்டார வளமையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், ஒவ்வொரு யூனியன்களிலும் குறைந்தது ஆறு குறுவள மையங்கள் செயல்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வரை மாதத்துக்கு ஒரு நாள் என பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பத்து நாட்களும் பள்ளி வேலை நாட்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது, மூன்று பருவத்துக்கும் தலா ஒரு பயிற்சி வீதம் மூன்று நாட்கள் மட்டுமே வழங்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
மேலும், வட்டார வளமையம் மூலம் ஆண்டுக்கு 20 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பயிற்சியானது, வெறும் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டது. இப்பயிற்சியில், 40 சதவீதம் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கவும் 60 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
தற்போது, முதல் பருவத்துக்கு ஒரு குறுவளமைய பயிற்சியும், ஒரு வட்டார வளமையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சி நடந்த இரண்டு நாட்களும் 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும் 60 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கும் சென்றனர். இந்நிலையில், குறுவளமையம் நடக்கும் மூன்று நாட்களையும், பள்ளி வேலை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், வட்டார வள மையத்தில் வழங்கப்படும் பயிற்சி நாள், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள் பள்ளி வேலை நாளாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள், பள்ளி விடுமுறை எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியரை குழப்பம் அடையச் செய்துள்ளது.
தற்போது, சனிக்கிழமை சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும், 60 சதவீத ஆசிரியர்கள் விடுமுறையிலும் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை பயிற்சி வழங்குவதை எஸ்.எஸ்.ஏ., மறுபரிசீலனை செய்து பள்ளி வேலைநாட்களில் இதுபோன்ற பயிற்சியை வழங்க வேண்டும்.
மேலும், விடுமுறை தினமாக சனிக்கிழமை அன்று பயிற்சியில் கலந்து கொள்ளும் 40 சதவீத ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

AIDED SCHOOL TEACHERS CAN JOIN GOVERNMENT SERVICE

ON SET TEACHERS

OFFICERS SHOULD MONITOR THE MAINTENANCE OF SCHOOL BUILDINGS : EM

41 c for schools: CM

வாழ்க்கையை தொலைத்த 30 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள்: மாத சம்பளம் வெறும் 100 ரூபாய் பெறும் அவலம்

என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் ஆகும்; அப்போது கணிசமாக சம்பளம் கிடைக்கும்; வாழ்க்கையை நன்றாக நகர்த்தலாம்' என்ற, கனவுகளுடன், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், தற்காலிக அடிப்படையில், துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த, 30 ஆயிரம் பேர், வாழ்க்கையை தொலைத்து விட்டு, அல்லல்படுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, தொடர்ந்து, மாதம், வெறும், 100 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.
கனவு:


'கழுதை மேய்த்தாலும், கவர்மென்ட் வேலையாக இருக்க வேண்டும்' என, கிராமங்களில் கூறுவது உண்டு. பணி பாதுகாப்பும், பல்வேறு சலுகைகளும் கிடைப்பது தான், அரசு வேலையின் சிறப்பு அம்சம். இதனால், ஒவ்வொருவரும், அரசுப் பணிக்கு, கனவு காண்கின்றனர். இதில், தற்காலிக வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என, தலையை கொடுத்துவிட்டு, பணி நிரந்தரம் ஆகும்... ஆகும்... என, ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, கடைசியில், வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இந்த வரிசையில், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும், 30 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர், பெண்கள். பெயர் மட்டும் தான், துப்புரவு பணியாளர்... ஆனால், காலையில், பள்ளியை திறப்பது, தலைமை ஆசிரியர் அறை முதல், மாணவர் வகுப்பறை வரை, அனைத்து அறைகளையும் பெருக்கி சுத்தம் செய்வது, ஆசிரியர்களுக்கு, குடிநீர் பிடித்து வைப்பது, அவ்வப்போது, டீ வாங்கி தருவது, மாணவர்கள், மதிய உணவை முடித்த பின், அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது, பள்ளி முடிந்த பின், வகுப்பறைகளை பூட்டுவது, பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பது என, இவ்வளவு பணிகளையும், துப்புரவு பணியாளர்கள் செய்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன், பணியில் சேர்ந்து, இன்று வரை, மாதம் வெறும், 100 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், சில ஆண்டுகளுக்கு முன் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, கால முறை ஊதியம் பெறுகின்றனர்.

கண்ணீர்:


ஆனால், அதே கல்வித் துறையில், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மட்டும், தற்போது வரை, அரசு கண்டுகொள்ளவில்லை என, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமரன், 36, கண்ணீர் சிந்துகிறார். அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் உள்ள, அன்ராயநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில், துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறேன். 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். அரசு வேலையாச்சே; என்றாவது ஒருநாள், பணி நிரந்தரம் ஆகிவிடும் என, சேர்ந்தேன்; பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

முரண்பாடு:


மாத சம்பளம், 10 ரூபாயில் துவங்கி, தற்போது, 100 ரூபாய் வரை வந்துள்ளது. இந்த காலத்தில், 100 ரூபாயை வைத்துக் கொண்டு, என்ன செய்ய முடியும்? விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், 2,000 பேர், வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பிரச்னையைத் தீர்க்க, முதல்வர் முன்வர வேண்டும். இவ்வாறு, முத்துகுமரன் தெரிவித்தார். ஒரே துறையில், குறிப்பிட்ட பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, ஒரு சம்பளம், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு சம்பளம் என இருப்பது, முரண்பாடாக உள்ளது. தமிழக அரசு, கல்வித் துறைக்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது. இதில், சிறிய தொகையை, அடிமட்டத் தொழிலாளர்களுக்கும் ஒதுக்கினால், அவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்!

தெரியாமல் போனது எப்படி?


கல்வித் துறையில், 'மீட்டிங்'குகளுக்கு, பஞ்சமே கிடையாது. மாதத்திற்கு, குறைந்தது, 20 கூட்டங்களாவது நடக்கின்றன. அமைச்சர் முதல், மாவட்ட கல்வி அலுவலர் வரை, பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால், அடிமட்டத்தில் உள்ள ஊழியர்கள் பிரச்னைகள் தெரியாமல் போவது ஏன் என்பது தான் புதிராக உள்ளது. பிரச்னைகளைப் பற்றி அறிய, கீழ்நிலை அலுவலர்களையும், கூட்டங்களில் பேச அனுமதிக்க வேண்டும். அப்போது தான், உண்மை நிலையை, உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும்; பிரச்னைகளை தீர்க்க முடியும். இது போன்ற நிலை வராதவரை, முத்துகுமரன் போன்றோர், எங்கோ ஒரு மூலையில், அல்லாடிக்கொண்டிருக்க வேண்டியது தான்!