SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, June 24, 2014

NAGAI DINAMALAR NEWS ABOUT COUNSELLING PROBLEM



தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் சர்ச்சை; போராட்டம்

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் சர்ச்சை; போராட்டம்

First Published : 24 June 2014 12:58 AM IST
நாகையில் நடைபெற்ற தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில், ஒரு பள்ளியின் காலிப் பணியிடம் குறிப்பிடப்படாததைக் கண்டித்து ஆசிரியர்கள் திங்கள்கிழமை கலந்தாய்வு மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரும் கலந்தாய்வு மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கோரும் கலந்தாய்வு ஆகியன திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி தலைமையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரும் கலந்தாய்வு திங்கள்கிழமை காலை நடைபெற்றது. மயிலாடுதுறை தவிர அனைத்து ஒன்றியங்களுக்கும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட நிலையில், இறுதியாக மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டது.
அப்போது, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தமல்லி, ஆத்தூர், வடவஞ்சார், வேப்பங்குளம், சோழியங்கோட்டகம், ஐவநல்லூர், திருமேனியார்கோவில், வரதம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது.
இதில், மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட பொட்டவெளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், அந்தப் பணியிடம் கலந்தாய்வில் மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், நேர்மையான கலந்தாய்வை உறுதி செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பியவாறு, ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் வெளியேறினர்.
இதனால், மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பொட்டவெளி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் கலந்தாய்வில் சேர்க்கப்படாத வரை, கலந்தாய்வை நடத்த அனுமதிக்க முடியாது எனக் கூறி ஆசிரியர்கள் தொடர்ந்து கலந்தாய்வு மையத்தில் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அங்கு தொடர்ந்து கூச்சல் குழப்பம் நீடித்தது.
இது குறித்துத் தகவலறிந்த நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பொட்டவெளி பள்ளிக்கான பணியிடமும் கலந்தாய்வில் சேர்க்கப்படும் என உறுதியளித்தார். இதனால், ஆசிரியர்கள் அமைதியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு மீண்டும் தொடங்கப்பட்டது. அதில், பொட்டவெளி பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடமும் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

Monday, June 23, 2014

கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு

கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு

பதிவு செய்த நாள்

23ஜூன்
2014 
13:54
நாகப்பட்டனம்: நாகை மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், நாகை, அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இதில், முறைகேடுகள் நடப்பதாக கூறி, 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Saturday, June 21, 2014

குழந்தைகளின் கூட்டாளிகள் !

குழந்தைகளின் கூட்டாளிகள் !
Posted Date : 15:06 (03/06/2014)Last updated : 15:06 (03/06/2014)
வி.எஸ்.சரவணன்
 
''புத்தரிடம் வாழ்க்கையின் விளக்கம் தேடிவந்த ஒருவருக்கு, புத்தர் எவ்வளவு சொல்லியும் மனநிறைவு கிடைக்கவில்லையாம். அப்போது, குயில் கூவும் ஓசையும் குழந்தை அழுகிற சத்தமும் கேட்டது. அதில், பல செய்திகளை உணர்ந்து, மனநிறைவாக சென்றாரம். இந்தக் கதையை எங்களிடம் ஒரு சிறுவன் சொன்னான். இந்தக் கதையின் தாக்கத்தால், 'குக்கூ குழந்தைகள் வெளி’ என்று பெயர் வைத்தோம்'' என்கிறார்கள் குக்கூ குழுவினர்.
இந்த அமைப்பை 13 ஆண்டுகளுக்கு முன் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கினார்கள். ஊர் ஊராக சென்று, குழந்தைகளுக்கு கதைகள், விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுப்பது, பயணங்களுக்கு அழைத்துச்செல்வது இவர்களின் நோக்கம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் காட்டுக்குள்  சிறுவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
''அது, குழந்தைகளுக்கு உற்சாகமான புதிய உலகத்தைக் காட்டியது. ஜவ்வாது மலை வனச்சரகத்தில் நுழைந்ததும், பசுமையான காட்சிகள், பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று என வியந்து ரசித்தார்கள். ஒவ்வொரு இடமாகப் பார்த்து, இந்த மரத்தின் பெயர் என்ன? இந்தப் பூச்சி எப்படி கத்தும்? எனக் கேள்விகளை அடுக்க, நம்மாழ்வார் பதில் அளித்துக்கொண்டே வந்தார். நம் முன்னோர்கள் இயற்கையோடு எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையும் சொன்னார்'' என்று அந்த பசுமையான நினைவை அசைபோடுகிறார் குக்கூ அமைப்பைச் சேர்ந்த வினோத் பாலுசாமி.
சிறுவர்கள், காட்டில் தாங்கள் பார்த்த புதுபுது விதைகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். ஆலமர விழுதுகளில்  தொங்கி விளையாடினார்கள்.
''திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த நந்தகுமார் உதவியோடு, ஜவ்வாது மலையில் ஒரு நூலகம் அமைத்தோம். அங்கே குழந்தைகளுக்கான கதை, சுற்றுச்சூழல் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன'' என்கிறார் பீட்டர் ஜெயராஜ்.
வேலூர் மாவட்டம், பானாவரத்தில் இரண்டாவது நூலகத்தைத் திறந்தார்கள். இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோர், இலங்கையில் இருந்து வந்த குழந்தைகள். மூன்றாவது நூலகத்தை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அமைத்திருக்கிறார்கள்.
''ஊத்துக்குளியில் அமைத்திருக்கும் விதை நாற்றுப் பண்ணைக்கு அழைத்துச்சென்று ஒவ்வொரு விதைக்கும் ஒரு கதை சொல்வோம். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதைகள் தருவோம். அந்த விதைகளை தங்கள் வீட்டுப் பக்கத்தில் விதைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் எல்லோரும் சந்தித்து, தங்கள் செடி எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒரு நோட்டில் எழுத வேண்டும். பனையைத் தேடி நெடும்பயணம், பாரம்பரிய நெல் திருவிழா என்று இயற்கையோடு குழந்தைகளை இணைக்கிறோம்'' என்கிறார் அழகேஸ்வரி.
''சிறுவர் புத்தகங்களையும் அதை எழுதியவர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துகிறோம். சுட்டி விகடனில் அடிக்கடி கதைகள் எழுதும் ஓவியா, குக்கூ சிறுவர் குழுவில் இருக்கிறார். சிற்பம், ஓவியம், நாடகம், திரையிடுதல் உள்ளிட்டவற்றையும் செய்துவருகிறோம். குமார் அம்பாயிரம் போன்ற இசைக் கலைஞர்கள் பாராம்பரிய இசையைக் கற்றுத்தருகின்றனர். வேலு சரவணன் நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்கிறார் முத்துகிருஷ்ணன்.

தரையில் விரியும் வானவில் !

    தரையில் விரியும் வானவில் !
    Posted Date : 12:06 (16/06/2014)Last updated : 12:06 (16/06/2014)
    வி.எஸ்.சரவணன்
     ''அக்கா... ரொம்ப வெக்கையா இருக்கு... போய் குளிச்சிட்டு வந்துடுறேன்'' என்று சொல்லிவிட்டு ஓடுகிறான், குமார் என்கிற மாணவன். பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் ஐந்து நிமிடங்கள் குளித்துவிட்டு, தலையைத் துவட்டியவாறு வகுப்பில் அமர்கிறான்.
    நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலில் இருக்கும் வானவில் பள்ளி மிகவும் வித்தியாசமானது. மரங்கள், அருகிலேயே வயல், குளங்கள் என்று அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது. மாணவர்கள், கற்றல்  சுமையே தெரியாமல் மகிழ்ச்சியோடு படிக்கின்றனர். ஆசிரியர்களை அண்ணன், அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். இது உண்டு உறைவிடப் பள்ளி.
    இங்கே படிக்கும் மாணவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் வீட்டுக் குழந்தைகள். பெற்றோர்களில் ஒரு சிலரைத் தவிர யாருமே கல்வி கற்காதவர்கள்.
    ''எங்க அப்பா, அம்மா படிக்காததுக்கும் சேர்த்து நாங்க படிப்போம்'' என்கிற இவர்கள், விளையாட்டோடு கற்று வருகின்றனர்.
    ''மாட்டுப் பொங்கல் அன்று மாட்டின் கழுத்தில் நெட்டிமாலை போடுவாங்க. அந்த மாலையில் இருந்த ஒரு நெட்டியில், சூப்பரான மனித பொம்மை செய்திருக்கிறான், நான்காம் வகுப்புப் படிக்கும் பாபு'' என்று பெருமையோடு சொல்கிறார் ஆசிரியை கௌதமி.
    இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர்,  ஆசிரியர் என்கிற வித்தியாசம் கிடையாது. எல்லோரும் சமம்தான். மதியம் சாப்பிடும்போது,  மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆசிரியை மீனாட்சியின் தட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு பொரியலை, மாணவி அஞ்சலைதேவி எடுத்துச் சாப்பிடுகிறாள்.
    ''தெய்வானை என்கிற மாணவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா... இங்கு தளிர், துளிர் வகுப்புகளும் உண்டு. அந்த சின்னக் குழந்தைகளும் இங்கேதான் தங்கிப் படிக்கிறாங்க. அதில், ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லாதபோது, தெய்வானை அந்தக் குழந்தையை ஒரு அம்மா போல கவனிச்சுக்கிட்டா'' என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் ஆசிரியை வாசுகி.
    ''என் வகுப்பில் ஒரு பையன் படிக்கிறான். அவனை ஆடு, மாடு மேய்க்க அப்பா வித்துட்டார். அவனை விற்ற இடத்தில் சரியாகச் சாப்பாடு போடாமல் கொடுமை செய்திருக்காங்க. எப்படியோ... அங்கே இருந்து ஓடி வந்துட்டான். இப்போ இங்கே, படிப்பில் பிரமாதப்படுத்துறான்'' என்கிறார் ஆசிரியை மீனாட்சி.
    ஆசிரியர்கள் ஷாலினி, யாஸ்மின் பர்வீன், சந்திரன், சுரேந்தர்  ஆகியோர் தங்கள் மாணவர்களைப் பற்றி வித்தியாசமான அனுபவங்களைச் சொல்கிறார்கள். ''இங்கே வேலை செய்வது, மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது'' என்கிறார்கள்.
    வகுப்பறைகளில் விதவிதமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ''அங்கிள், இது நான் வரைஞ்சது...'' ''இது என்னோடது...'' என்று உற்சாகத்துடன் தங்கள் படைப்புகளைக் காட்டுகிறார்கள்.
    வானவில் பள்ளியை நடத்தும் பிரேமா ரேவதி ஓர் எழுத்தாளர், நாடங்களில் நடிப்பவர். ''சுனாமியின் பாதிப்பில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கலாம் என்றுதான் இங்கே வந்தேன். பல நடைமுறை சிக்கல்களைத் தாண்டித்தான் இந்தப் பள்ளியை நடத்துகிறோம். முதல் தலைமுறையாகப் படிக்க வந்திருக்கும் இந்தக் குழந்தைகள், வருங்காலத்தில் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும்'' என்கிறார்.
    ''அக்கா... என்னை சிவா தள்ளிவிட்டுட்டான்'' என்று ஒரு குட்டிப் பெண் சொல்ல, அவளைச் சமாதானப்படுத்தியவாறு அழைத்துச் செல்கிறார் பிரேமா ரேவதி.
    அந்தப் பசுமையான சூழலில் ஆட்டம் ஆடியவாறு, பாட்டுப் பாடியவாறு, பாடங்களைப் படிக்கும் மாணவர்களின் குரல், உற்சாகமாக காற்றில் ஒலிக்கிறது.

samacheer kalvi to be reframed

Sunday, June 15, 2014

தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!- தங்கர் பச்சான் நேர்காணல்

தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!- தங்கர் பச்சான் நேர்காணல்தங்கர் பச்சான்

தொடர்ச்சியான உங்களது பேச்சுகளில் தமிழர்கள் குறித்த அவநம்பிக்கை அதிகமாக வெளிப்படுகிறதே?
இவர்களை எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம் கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத்தெரியவில்லை. வெட்கமில்லாமல் வேறுமொழி கலந்து இன்னொரு தமிழனிடம், அரைவேக்காட்டு ஆங்கிலம் பேசும் சூப்பர் தமிழனாகிவிட்டாய். மொழிக்கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமையோடு மிதப்பில் அலைகிறாய்.
 எதைவைத்து உன்னை நீ தமிழன் எனச் சொல்கிறாய்? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கிறாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்றவுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் வாழலாமே!
 தமிழா.. உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? திரைப் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது மட்டுமே நமது பெரும்சாதனையாக இருக்கிறது. உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றையாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய்போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.

TWO TEACHERS NINE STUDENTS


imggallery

ESWARAN MAALIGAI SNAPS









--