SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, June 29, 2013

koottani nagai district office building upcoming

GOVERNMENT MUST WITHDRAW G.O.252-EDUCATIONISTS

ஆசிரியர் நியமனம் :  அரசாணை 252ஐ திரும்பப் பெறவேண்டும்

ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதியை நிர்ணயிக்கும் அரசாணை 252ஐ திரும்பப் பெறவேண்டும் எனக் கல்வியாளர்கள் கோருகிறார்கள்

த்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET)தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

கடந்த ஆண்டு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது வரும் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் மீண்டும் TETதேர்வு நடைபெறும் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள கடந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் TET தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டு முதல், பணி நியமன முறையில் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. முதலில் TET  தேர்வு நடத்தப்பட்டு அதில் 60 சதவீதமும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்போது, TET  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது தகுதித் தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணியைப் பொருத்தவரை (ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு), பிளஸ் டூ மதிப்பெண்கள், ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ பட்டம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை, பிளஸ் டூ மதிப்பெண், பட்டப் படிப்பு மதிப்பெண், பிஎட் மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி), பழங்குடியின வகுப்பினர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பணி நியமனம் வழங்கலாம் என்று ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் (NCTE) கூறியிருக்கிறது. ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழக அரசு மதிப்பெண் தளர்வு வழங்காதது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் காலிப் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதியை நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆண்டு (2012) அக்டோபர் 5-ஆம் தேதி அரசாணை எண்.252-ஐ வெளியிட்டது. இந்த அரசாணையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. அதனால், இந்த அரசாணை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் சமீபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

“மத்திய அரசு தனது அலுவலகக் குறிப்புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வழிகாட்டுதலைக் கொடுத்திருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களின் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்பதே அது. அவற்றிலிருந்து மாநில அரசுகள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதாவது, அவற்றைவிட அதிகமான சலுகைகளை வழங்கலாமே தவிர, சலுகைகளை மறுப்பதற்கு மாநிலங்களுக்கு உரிமையில்லை. அரசாணை எண்.252 இடஒதுக்கீட்டை மறுத்து, ‘தரத்தை’ப் பற்றி மட்டுமே பேசுகிறது. இது சரியல்ல” என்கிறார், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திருத்தி அமைக்கவேண்டும். எஸ்.டி., எஸ்.சி. பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் மதிப்பெண்களிலும் அவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும். மிகவும் பிற்பட்ட பகுதிகளிலும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனம் அளிக்க வேண்டும்” என்கிறார், இந்திய அரசின் முன்னாள் செயலர் பி.எஸ்.கிருஷ்ணன்.

தகுதியும், இடஒதுக்கீடும் என்றுமே முரணாக இருந்ததில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவமே இடஒதுக்கீடு ஆகும். உரிய சூழலும், தகுந்த பயிற்சியும் வழங்கப்பட்டால் யார் வேண்டுமானாலும் தகுதி உடையவர் ஆகலாம். ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதன் அடிப்படையிலான பணி நியமனத்திலும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மதிப்பெண் தளர்வு வழங்கவேண்டும். சமூக நீதியைக் காக்கும் பொருட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையும், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

“அரசாணை எண்.252 திரும்பப் பெறப்பட்டு, உரிய திருத்தங்களுடன் புதிய அரசாணை வழங்கப்படவேண்டும். ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைப்பிடிக்கவேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிப்பது என்பது தரத்தில் பின்தங்கியது ஆகாது” என்கிறார், கல்வியாளர் வி.வசந்திதேவி.

அரசாணை எண்.252 தீர்மானித்துள்ள தகுதியின் அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் பின்பற்றப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு வழிமுறை தன்னிச்சையானது என்பதே ஒட்டுமொத்தக் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பின்பற்றுவது போல இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தங்களது கோரிக்கைகளையும், தீர்மானத்தையும் வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனுவும் அளித்திருக்கிறார்கள்.

HOW TO CURB PRIVATE SCHOOL LOOTING?

    பள்ளிக் கொள்ளையை எதிர்ப்பது எப்படி?
    Posted Date : 13:06 (27/06/2013)Last updated : 13:06 (27/06/2013)
    - பாரதி தம்பி
    ஓவியம்: ஹாசிப்கான்

    து ஒரு பள்ளிக்கூட வகுப்பறை. ஐந்தாம் வகுப்பு. சுமார் 60 மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகக் கட்டாத நான்கு பேர் மட்டும் வகுப்பறையின் ஓரமாகத் தனித்து அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர், திருத்திய விடைத்தாள்களை எல்லோருக்கும் தருகிறார்; அவர்களுக்கு மட்டும் தரவில்லை. வருகைப் பதிவேட்டுக்காக ஒவ்வொருவரின் பெயராக அழைக்கிறார். ''பிரசன்ட் சார்'' என்று சொல்லக் காத்திருந்த அந்த நால்வரின் பெயர்கள் மட்டும் இறுதிவரையிலும் அழைக்கப்படவில்லை. நடத்திய பாடத்தில் இருந்து எல்லா மாணவர்களிடமும் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த நால்வரிடமும் மட்டும் எதுவும் கேட்கப்படவில்லை. வழக்கமாக பள்ளி முடியும் நேரம் 4.30 மணி என்றால், அந்த நான்கு பேர் மட்டும் 3.30 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

    - இங்கு ஒரு பள்ளி வகுப்பறை சேரி ஆகிறது.

    எல்.கே.ஜி. சீட்டுக்கு 50 ஆயிரம் கொடுத்தாலும் அனுமதி கிடைக்காத புகழ்பெற்ற பள்ளி அது. போட்டி போட்டுக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்த்தனர். பள்ளியின் கொள்ளளவைவிட மூன்று மடங்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஒரே நேரத்தில் எல்லா மாணவர் களையும் அமரவைத்து வகுப்பெடுக்க வகுப்பறைகள் போதாது. என்ன செய்யலாம்? காலை 8 மணிக்கு துவங்கி ஒரு ஷிஃப்ட்; 11 மணிக்கு துவங்கி ஒரு ஷிஃப்ட் என பள்ளிக்கூட நேரம் பிரிக்கப்பட்டது.

    -  இங்கு பள்ளிக்கூட வகுப்பறை, ஒரு தொழிற் சாலை ஆகிறது.


    முந்தையது நடந்தது கடலூர் மாவட்டத்தில். பிந்தையது நடப்பது சென்னை நகரத்தில். ஒரு பள்ளி மாணவனை வகுப்பறையிலேயே ஒதுக்கிவைத்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இத்தகைய தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்குத்தான், பெற்றோர்கள் தவமாய் தவமிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையின் உதிரி பாகத்தைப் போலக் குழந்தைகளை வைத்து ஷிஃப்ட் முறையில் சம்பாதிக்கும் இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கத்தான் உயிரைக் கொடுத்து உழைக்கிறது நடுத்தர வர்க்கம். ஆசை ஆசையாகப் பெற்று வளர்த்து, பள்ளிக்கு அனுப்பி, குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் அடகுவைத்துப் பணம் கட்டினால், இவர்கள் நம் பிள்ளைகளைப் பணயக் கைதிகளைப் போலப் பிடித்து வைத்துக்கொண்டு பணம் பறிக்கிறார்கள்.

    ''தனியார் பள்ளிகளில் இன்ன வகுப்புக்கு இவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதியரசர் சிங்காரவேலர் கமிட்டி ஒரு வரையறை வகுத்துள்ளது. ஆனால், அதைத் தனியார் பள்ளிகள் கழிவறை காகிதமாகக்கூட மதிப்பது இல்லை. எல்.கே.ஜி-க்கு பில் போட்டு 6 ஆயிரம் என்றால், பில் போடாமல் இன்னொரு 6 ஆயிரம் கொடுத்தால்தான் சீட் கிடைக் கும். 'அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்கு’ என்று சொன்னால், 'அரசுக் கட்ட ணம்னா, அரசாங்க ஸ்கூலுக்குப் போ’ என்று திமிராகப் பதில் சொல்கிறார்கள்.

    எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், யாருக்கும் அச்சப்படாமல் பகல்கொள்ளை அடிக்கிறார்கள். கண்காணித்து, தண்டித்து, முறைப்படுத்த வேண்டிய அரசாங்கமோ இந்த கல்விக் கொள்ளையர்களைக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், நாங்கள் அப்படிச் சும்மா விடுவதாக இல்லை. இடைவிடாமல் போராடுவோம். அப்படிப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறோம்'' என்கிறார் வெங்கடேசன். கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிவரும் 'மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின்’ கடலூர் மாவட்டத் தலைவர் இவர்.

    'அரசுக் கட்டணத்தைத்தான் செலுத்துவோம்’ என இவர்கள் நடத்திய பல போராட்டங்கள் மூலமாக, இன்று அந்தப் பகுதிகளில் பல பள்ளிகள் வேறுவழியே இல்லாமல் அரசுக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கின்றன. ஆனால், அவை வெகு சில பள்ளிகள்தான். இன்னும் பல நூறு பள்ளிக்கூடங்களில் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. ஓர் உதாரணத்துக்கு திருச்சி நகரில் உள்ள ஒரு சுமாரான பள்ளியில் 2,500 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒரு மாணவனுக்கு மிகக் குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் சுமார் 2.75 கோடி ரூபாய் வருகிறது. எனில் அந்த நகரில் உள்ள மொத்தப் பள்ளிகளையும் கணக்கிட்டால் எவ்வளவு வரும்? ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கோடி? சென்னையில் எவ்வளவு? மொத்தத் தமிழ்நாட்டிலும் ஒரு ஆண்டில் புழங்கும் பணம் எவ்வளவு? ஸ்பெக்ட்ரம்ஊழ லுக்கு நிகரான கொள்ளையல்லவா இது!  

    ''தனியார் பள்ளி முதலாளிகள் முதலீடு போட்டுத் துவங்கியிருக்கும் தொழில் இது. பெற்றோர்களாகிய நீங்கள், பணம் கொடுத்து அவர்களிடம் ஒரு சேவையைப் பெறுகிறீர்கள். வாடிக்கையாளராகிய உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டியது அவர்களது கடமை. ரெண்டு ரூபாய்க்குப் பச்சைமிளகாய் வாங்கினாலும் மளிகைக் கடை அண்ணாச்சி மரியாதையாகத் தான் நடத்துகிறார். நீங்கள் மட்டும் 50 ஆயிரத் தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு ஏன் பிரின்சிபல் ரூம் வாசலில் கூனிக் குறுகி நிற்க வேண்டும்? எதிர்த்துக் கேள்வி கேளுங்கள். 'படிப்பு விஷயம் சார்... நாம ஏதாச்சும் எதிர்த்துப் பேசி, பசங்களோட எதிர்காலம் ஸ்பாயில் ஆயிடக்கூடாதுல்ல.?’ என்று இதற்குப் பதில் சொல்வார்கள். என்றால், உங்கள் பிள்ளைகள் என்ன பணயக் கைதிகளா? இப்படிப்பட்ட அடிப் படை ஒழுக்கத்தைப் பின்பற்றாத பள்ளியில் படித்தால்தான் உங்கள் பிள்ளையின் எதிர்காலம் கெட்டுப்போகும். மாணவர்களுக்காகத்தான் பள்ளிக்கூடமே தவிர, பள்ளிக்கூடத்துக்காக மாணவர்கள் இல்லை.
    முதலில் ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் என்பதைப் பள்ளிக் கூடங் களின் நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்ட வேண்டும். இது அரசு விதி. ஆனால் 'ஒட்ட முடியாது’ என்று திமிராகச் சொல்கிறார்கள். வாங்கும் காசுக்கு ரசீது தர வேண்டும். இதுவும் விதி. ஆனால், இவை எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை. பல பள்ளிகளின் தாளாளர்களுக்கு அரசியல் பின்புலம் இருப் பதால் தனியரு பெற்றோராக அவர்களை எதிர்ப்பது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் சங்கமாக ஒன்று சேர்ந்து போராடினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப் போராடாமல் இவர்களை எதுவும் செய்ய முடியாது. வேறு எதற்கும் இவர்கள் அஞ்சவும் மாட்டார்கள். பெற்றோர்களாகிய நாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் திரண்டு பள்ளிக்கூடம் முன்பு உட்கார்ந்தால் அதிகாரிகள் தேடி வருவார்கள்; வர வைக்க வேண்டும். மற்றபடி மனு கொடுத்தோ, வழக்குப் போட்டோ இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது!'' என்கிறார் இந்த சங்கத்தின் ஆலோசகரான வழக்கறிஞர் ராஜூ.

    பல பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை மட்டுமே செலுத்திய மாணவர்கள் டி.சி. கொடுத்து அனுப்பப்படுகின்றனர். யாரிடம் இதற்கு முறையிடுவது என்றுகூடப் பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு போடலாம்; சிங்காரவேலர் கமிட்டியிடம் முறையிடலாம்; நீதிமன்றத்துக்குப் போகலாம்... இதெல்லாம் இருக்கும் வாய்ப்புகள். ஆனால், தனியரு பெற்றோருக்கு இது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. பெற்றோர்கள் கூட்டாகத் திரண்டுவந்து தட்டிக் கேட்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக்கூட உரிமை யாளர்கள், 'பெயர் கெட்டுப்போய்விடும்’ என்று பயப்படுவார்கள். 'பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது’ என்ற அவர்களின் அச்சம்தான் பெற்றோர்கள் சுதாரிக்க வேண்டிய இடம். 'இந்தப் பள்ளியின் உண்மையான கட்டணம் இவ்வளவுதான்’ எனப் பெற்றோர் சங்கம், போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இப்படிச் செயல்பட்டால் கொடுத்த டி.சி-யைத் தானாகவே வாங்கி பள்ளியில் சேர்ப்பார்கள். இப்படிப் பல இடங்களில் நடக்கவும் செய்திருக்கிறது. முக்கிய மானது, இதைத் தனி ஒருவரால் செய்ய முடியாது. சங்கமாகத் திரண்டால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்!
    - ஆனந்த விகடன்

WE ARE ALSO SMART STUDENTS


Tuesday, June 25, 2013

TEACHING - A DIFFERENT APPROACH

கனவு ஆசிரியர் - கற்றலை இனிமையாக்கும் ஆனந்தி டீச்சர்!
Posted Date : 10:06 (19/06/2013)Last updated : 10:06 (19/06/2013)
தமிழகத்தில் சி.சி.இ. மதிப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்த பிறகு, பள்ளி மாணவர் களிடையே கற்றல் இனிமையாகி இருக்கிறது. இனிமையான சூழலுடன் மாணவர்கள் பாடங்களைச் சுமையின்றிக் கற்கிறார்கள்.

ஆனால், கும்பகோணம் அருகே முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஊராட்சி ஓன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்,  ஆனந்தி டீச்சர் ஆசிரியையாக வந்ததிலிருந்தே கடந்த பல ஆண்டுகளாக  கற்பதை இனிமையாகக் கொண்டாடிவருகின்றனர்.

ஆனந்தி டீச்சர் 1999-ல் ஆசிரியர் பயிற்சிக்குச் சென்றபோது, மாணவர்களுக்கு ஃப்ளாஷ் கார்டுகளைப் பயன்படுத்திப் பாடம் நடத்துவதன் அவசியம் சொல்லித்தரப்பட்டது. அப்போது கார்டுகளை உருவாக்கத் தொடங்கி, இன்று வரை சுமார் 30,000 ஃப்ளாஷ் கார்டுகள் வைத்துள்ளார்.

ஆனந்தி டீச்சரைச் சந்திக்கச் சென்றபோது, 'தன்னானன்னே தன்னானே... தன்னானன்னே தன்னானே...'' என மெட்டு அமைத்து, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் பெயர்களையும் பாடலாகப் பாடி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

'ஒன்று... யாவர்க்கும் தலை ஒன்று. இரண்டு... முகத்தில் கண்கள் இரண்டு. இப்படித்தான் நான் ஒன்று, இரண்டு கற்றேன். அதே வழிமுறையில்தான் 32 மாவட்டங்கள், இந்திய மாநிலங்கள், தலைநகர் என அனைத்தையும் பாடல்களாகச் சொல்லித் தருகிறேன்'' என்கிறார்.


அறிவியலில் கோள்கள், பிளாஸ்டிக்கின் தீமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு... என 150 தலைப்புகளில் மாணவர்களுக்குப் பாடல்கள் எழுதிவைத்திருக்கிறார் ஆனந்தி டீச்சர். ''இதற்கு பாடல் திறமை அவசியம் இல்லை. மாணவர்களுக்குப் புரியும்படி இருந்தாலே போதும். இப்படிப் பாடம் நடத்தும்போது அவர்கள் மனதில் நன்றாகப் பதியும்'' என்றவரிடம் ஃப்ளாஷ் கார்டு பயன்படுத்துவது பற்றி கேட்டோம்.


''ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஃப்ளாஷ் கார்டு மூலம் சொல்லித்தரும் பழக்கம் இருந்தது. இப்போது சமச்சீர்க் கல்வி முறையால், என்னுடைய ஃப்ளாஷ் கார்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆசிரியர் விருப்பத்தோடு வகுப்பில் பாடம் நடத்தும்போதுதான், அது மாணவர்களிடம் கற்றலில் விருப்பத்தை உண்டாக்கும். நான் படிக்கும்போது தங்கம் என்றொரு டீச்சர் இருந்தார். அவர்தான் என்னுடைய கனவு ஆசிரியர். 'நான் ஆசிரியரானால் இவர் போலத்தான் இருக்கணும்’ என நினைத்தேன். அந்தக் கனவு பலித்திருப்பதாக நினைக்கிறேன்'' என்கிறார் பூரிப்புடன்.

ஆனந்தி டீச்சர்

ஆனந்தி டீச்சரின் வித்தியாசமான கற்பித்தல் முறையைக் கண்டு, குஜராத்தில் உள்ள ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனமும், ரத்தன் டாடா அறக்கட்டளையும் இணைந்து, 2005-ம் ஆண்டு 'இன்னோவேட்டிவ் டீச்சர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்து இருக்கின்றன.

''மாணவர்களுக்கு நிறைய புதுப் புதுத் தகவல்களைக் கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் வேலை. அதனால், தினம் தினம் ஆசிரியரும் புதிய அறிவைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் அறிவை வளர்க்க முடியும்' என்கிறார் ஆனந்தி டீச்சர்.

- மா.நந்தினி 
படங்கள்: ர.அருண் பாண்டியன்

PARENT COMPLAINS ABOUT COLLECTION OF FEES IN GOVERNMENT SCHOOL

BRIBE FOR SANITATION CERTIFICATE FOR SCHOOLS-HEALTH DEPARTMENT OFFICIAL ARRESTED

MEMO ISSUED TO LATE COMERS