SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, October 31, 2012

RAIN HOLIDAYS: SCHOOL FORCED TO WORK ON SATURDAYS



சென்னை: நீலம் புயல் இன்று கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: சனிக்கிழமைகளில் நடக்குமா?-31-10-2012

அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதால், கல்வித்துறை நிர்ணயித்தபடி, நவம்பருக்குள், அரையாண்டு பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும் எனில், இனி, சனிக்கிழமைதோறும் பள்ளிகளை நடத்தினால் தான் முடியும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இம்மாதம், 2ம் தேதி, காந்தி ஜெயந்தி, 23ல் ஆயுத பூஜை, 24ல் விஜயதசமி, 27ல் பக்ரீத் என, நான்கு நாள், அரசு விடுமுறை விடப்பட்டது. கடந்த சில தினங்களாக, தொடர்ந்து பெய்து வரும் மழையால், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, சில மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல், கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஒன்பது மாவட்டங்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால், கல்வித்துறை நிர்ணயித்த காலத்திற்குள், பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரையாண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களை, நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக, டிசம்பர் முதல் வாரம் வரை, கால அவகாசம் வழங்கப்படுகிறது. மழையால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது.
இந்த நாட்களை, ஈடு செய்ய வேண்டும் எனில், அரையாண்டு தேர்வு வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும், பள்ளிகளை நடத்துவதைத் தவிர, வேறு வழியில்லை. சனிக்கிழமைகளில், பள்ளியை நடத்த வேண்டும் என, இதுவரை, கல்வித்துறை எவ்வித உத்தரவையும் வழங்கவில்லை.
எனினும், பாடத்திட்டங்களை முடிக்க, பள்ளி நிர்வாகங்களே, சனிக்கிழமையும், அரை நாள் பள்ளியை நடத்தலாம். அதன்படி, சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தி, பாடத்திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

.OLD AEROPLANE CONVERTED INTO SCHOOL:GEORGIA


விமானத்தில் பள்ளிக்கூடம்: ஜார்ஜியா ஆசிரியர் புதுமை-31-10-2012


திபிலிசி: ஜார்ஜியா நாட்டு ஆசிரியர் ஒருவர், பழைய விமானத்தை விலைக்கு வாங்கி, அதை, பள்ளிக் கூடமாக மாற்றி உள்ளார்.
ஜார்ஜியாவின், ரஸ்தாவி நகரை சேர்ந்தவர் காரி சாப்பிட்சி. இவர், பாலர் பள்ளியை நடத்துவதற்காக, ஜார்ஜியா நாட்டு ஏர்லைன்சிடம இருந்து, பழைய விமானம் ஒன்றை, விலை கொடுத்து வாங்கினார். விமானி அறையை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார்.
பயணிகள் அமரும் பகுதியை பள்ளியாக மாற்றினார். மழலையர்கள் பைலட்டாகும் கனவுடன், இந்தப் பள்ளிக் கூடத்துக்கு உற்சாகமாக வருகின்றனர். பைலட் அறையில் உள்ள கருவிகளை இயக்கி பார்த்து மகிழ்கின்றனர். இந்த பள்ளியில் படிக்க, மாதக் கட்டணம், 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

VIRUDHUNAGAR:9 STANDARD STABBED HIS TEACHER


ஆசிரியரை கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன்-31-10-2012


விருதுநகர்: விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான்.
விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை சேர்ந்த ராஜேஷ், 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ஒரு வாரமாக ராஜேஷ், பள்ளிக்கு செல்லவில்லை; கணக்கு பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெற்றான்.
நேற்று முன்தினம், பள்ளிக்கு வந்த ராஜேஷை, கணித ஆசிரியர் பாண்டியராஜன், வகுப்பறையின் வெளியே நிற்க வைத்தார். நேற்று பிற்பகல், 12:00 மணிக்கு, ஆசிரியர் பாண்டியராஜன், வகுப்பறை போர்டில் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது ராஜேஷ், ஆசிரியரின் இடுப்புக்கு கீழ் பகுதியில், கத்தியால் குத்தி தப்பி ஓடினான். லேசான காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து, போலீசில் புகார் தரப்படவில்லை.
ஆசிரியர் பாண்டியராஜன் கூறுகையில், ""பள்ளிக்கு தொடந்து வராமலும், அன்று தாமதமாக வந்ததாலும், வகுப்புக்கு வெளியில் நிற்க வைத்தேன். நேற்று, வகுப்புக்கு சென்ற போது, அவனாகவே வெளியில் நின்று கொண்டிருந்தான். நான் எழுதிக் கொண்டிருந்த போது, கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டான்,&'&' என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி கூறுகையில், ""பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,&'&' என்றார்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு பேராசிரியர் வெ.ராமானுஜம் கூறுகையில், வகுப்பறையில் அனைத்து மாணவர்களுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்.
திட்டினாலோ, அடித்தாலோ உடனடியாக ஏதாவது செய்துவிடுவர். மற்ற மாணவர்கள் முன்னிலையில், ஒரு மாணவனை மட்டும் விமர்சிக்கும் போது, தனது சுயமதிப்பீடு பாதிப்பதாக நினைப்பது உண்டு. வளரும் சூழ்நிலை, பெற்றோர் வளர்ப்பைப் பொறுத்து, இது மாறுபடும். சினிமாவை, இதற்கு காரணமாக சொல்லலாம்.
ஆசிரியர்கள் இத்தகைய மாணவர்களை தனியாக பிரிக்க முடியும். அவர்களை, பெற்றோருக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். உளவியல் ரீதியாக மட்டுமே, இவர்களை சரிசெய்ய முடியும்.

NMMS SCHOLARSHIP EXAM FOR 8TH STUDENTS


மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

First Published : 30 October 2012 01:07 PM IST
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுண்டு.
அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2011-12ஆம் கல்வியாண்டில் 7-ம் வகுப்பு பயின்று முழுஆண்டுத் தேர்வில் எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர் 50 சதவீத மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
என்.எம்.எம்.எஸ். தேர்வு முறையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் 1.11.12 முதல் 9.11.12 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி 9.11.12-க்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாள் 30.12.12.
தேர்வு முறை:
இத்தேர்வு இரு பகுதிகளை கொண்டது. பகுதி 1 மனத்திறன் தேர்வும், பகுதி 2 படிப்பறிவுத் தேர்வும் கொண்டது. ஒவ்வொரு தேர்வும் தலா 90 நிமிடங்கள் நடக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
பாடத் திட்டம்:
படிப்பறிவுத் தேர்வுப் பகுதியில், இக்கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பில், முதல் மற்றும் 2-ம் பருவத்துக்கான பாடப் பகுதியில் மற்றும் இரண்டாம் பருவத்துக்கான பாடப் பகுதியிலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும்.
இப்பகுதியில் அறிவியல் 35, கணிதம் 20, சமூக அறிவியல் 35 ஆக 90 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டு (2013-14) முதல் மாதம்தோறும் ரூ.500 படிப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

CHENNAI MAYOR INSISTS ON STUDENTS ADMISSION


மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை

First Published : 30 October 2012 03:06 PM IST
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் ஓராண்டு பணிகளை விளக்கி தயாரிக்கப்பட்ட 120 பக்க புத்தகத்தை மேயர் முழுவதுமாக படித்தார்.
அப்போது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மன்றக் கூட்டத்தில் மேயர் கூறியது:
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதற்கு ஆங்கில வழிக் கல்வி இல்லாதது ஒரு காரணம். மேலும், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் காரணமாக பலர் புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியுடன் ஆங்கில வழிக் கல்வியும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மேயர்.

Monday, October 29, 2012

CONTRACTORS SCARE OF SCHOOL BUILDING WORKS


பள்ளி கட்டிட கான்ட்ராக்டா.. தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
‘பள்ளி குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் எதிரொலியா பள்ளியோட அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் வாகன பராமரிப்பு பற்றியும் வாரா வாரம் ஆய்வு செய்யறதுக்காக அம்மாக்கள் கொண்ட குழு அமைக்க அரசு ஆணை பிறப்பிச்சிருக்கு. இந்த குழு கண்டிப்பான குழுவா அமைச்சு கண்காணிச்சா எதிர்காலத்துல இதுபோன்ற உயிரிழப்புகள தடுக்க வாய்ப்பிருக்கு...’ விக்கிரமாதித்தன் தோளிலிருந்த வேதாளம் பேச்சை தொடங்கியது. ‘இதே ஆணைல பள்ளிகளுக்கு விதிச்சிருக்கற மத்த நடைமுறைகளயும் கடைபிடிச்சா பிள்ளைகள அனுப்பும் பெற்றோர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கெடக்கும்.
‘மலைகோட்டை கோயில் இருக்கற ஊர்ல கார்ப்பரேஷன் பள்ளி பலவற்றுக்கு போதிய கட்டிட வசதியில்லாம இருக்காம். இதால மாணவர் சேர்க்கை மந்தமாவே இருக்காம். மாநகராட்சில நிதி நெறய இருந்தும் பள்ளிகளுக்கு செலவு செய்யப்படாம இருக்காம். பள்ளி கட்டிடம் கட்டுனா போதிய லாபம் கெடக்காதாம். கவுன்ஸு தொடங்கி வட்டம் வரை கட்டிங் கொடுக்கணும், கட்டிங் போக மீதமிருக்கும் பணத்துல கட்டிடம் கட்டினா தரமா இருக்காது. பிற்காலத்துல இடிஞ்சு விழுந்தா ரிஸ்க்னு பள்ளி கட்டி கான்ட்ராக்ட்னாலே தலை தெறிக்க ஒப்பந்தக்காரங்க ஓடுறாங்களாம்... ரோடு வேலன்னா மட்டும் போட்டி போட்றாங்களாம். ரோடு வேலைக்கு ஏன் இவ்ளோ போட்டின்னு இந்த மழை காலத்துல பல ரோடுங்க பல்லை காட்டுறதே பாத்தாலே புரிஞ்சிடும்... ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலருங்க செய்யற அக்க போரை பத்தி பிறகு சொல்றேன்...’ என்றபடி பறந்தது வேதாளம்.

TAMILNADU THODAKAPPALLLI ASIRIYAR KOOTTANI-MAAVATTA SIRAPPU PODHUKUZHU -28.10.2012-PHOTOS

--

Saturday, October 27, 2012

ஒன்று கூடுவோம் கோரிக்கைகளை வென்றெடுப்போம்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவின் முடிவின்படி
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நவம்பர் 22 அன்று மாவட்டத் தலைநகர்களில் பேரணியும்
சனவரி 5 அன்று மாவட்டத் தலைநகர்களில் நாள் முழுவதும் கோஷங்கள் எழுப்பி தர்ணாவும்
செய்து கோரிக்கைகளை வென்றெடுக்க உள்ளோம்.
இந்த கோரிக்கைகளை விளக்கிடவும் போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தவும்
அக்டோபர் 28 அன்று நாகை பெருமாள் மேல வீதியில் உள்ள சிவசக்தி மஹாலில் மாலை 3 மணியளவில்
நமது பொதுச்செயலாளர் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொருளாளர் கலந்துக் கொண்டு சிறப்பிக்க நமது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு நடைபெற உள்ளது.
அனைவரும் வருக !

ஒன்று கூடுவோம் கோரிக்கைகளை வென்றெடுப்போம் 

GOVT SCHOOL STUDENTS POOR IN READING TAMIL


தமிழில் தடுமாறும் அரசு பள்ளி மாணவர்கள்-27-10-2012

சென்னை: ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம், தமிழகத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கான கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 9ம் வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிக அளவில் இருப்பதால், அதில் இருக்கும் சிக்கல்களை களைய, "அச்சீவ்மென்ட் டெஸ்ட்&' என்ற சாதனை கண்டறியும் சோதனை, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் தாய்மொழியான தமிழை முழுமையாக வாசிப்பதிலும், எழுதுவதிலும், திறன் இருப்பது கண்டறியப்பட்டது. எந்த அளவுக்கு மாணவர்களின் கற்றல் பயன் அவர்களிடம் சேர்ந்து, அதனால் திறன் பெற்றிருக்கின்றனர் என்பதை கண்டறியும் வகையிலும் வினாத்தாள் அமைக்கப்பட்டது. இதைக் "கற்றல் அடைவு தேர்வு&' என, அழைக்கின்றனர்.
இச்சோதனைகளில், 20 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழை முழுமையாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த, "கற்றல் அடைவு தேர்வு&'களை நடத்தி, தமிழை முழுமையாக எழுதவும், படிக்கவும் முடியாத மாணவர்களை கண்டறியும் பணி, முழு வீச்சாக நடந்து வருகிறது.
தமிழ் மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே, தமிழ்வழி கல்வியில் படிக்கும் மற்ற பாடங்களையும், பிழையின்றி படிக்க முடியும் என்பதால், தமிழ் மொழியை முழுமையாக கற்றுத்தர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கண்டறியப்படும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம், பள்ளி நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமை களிலும், நவீன முறைகளில் தமிழ் மொழி எழுத்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

FEMALE TEACHERS PERCENTAGE INCREASES


அதிகரிக்கும் ஆசிரியைகள்-26-10-2012


இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர்  ஆசிரியைகள்.
சில ஆண்டுகளாக ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008 2009ம் ஆண்டில் 43.46 சதவீதமாகவும், 2009 2010ம் ஆண்டில் 44.83 சதவீதமாகவும், 2010 2011ல் இந்த எண்ணிக்கை 45.51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் ஆசிரியைகளின் பணியிடங்களை அதிகரிக்கும் முயற்சி 1990களிலேயே தொடங்கப்பட்டது.

JHARKANT GOVT RAISED RETIREMENT AGE FOR TEACHERS


ஆசிரியர் ஓய்வு வயது அதிகரிப்பு
ராஞ்சி; ஜார்கண்ட் மாநில பல்கலை.,யில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் அர்ஜூன்முன்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 62 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Friday, October 26, 2012

COMMUNITY INSPECTION IN SCHOOLS -G.O.270


பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்ய அன்னையர் குழு

First Published : 26 October 2012 01:03 AM IST
தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன என்பதை தாய்மார்களே இனி நேரடியாக ஆய்வு செய்யலாம். இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் கொண்ட அன்னையர் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பெற்றோரை வாயிலோடு வெளியே அனுப்பும் அவலமும், அரசுப் பள்ளிகளில் உள்ள வசதி குறைவுகள் குறித்து பெற்றோர் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நேரத்தில் மிக முக்கியமான இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
வாரத்தில் ஒரு நாள் பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நேரத்தில் இந்தக் குழுவைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கான பார்வைப் புத்தகம் ஒன்றையும் பள்ளிகள் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகள், அசம்பாவித சம்பவங்கள் அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, இந்தச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.
அதனையேற்று, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்: அரசு அதிகாரிகள் தவிர, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு(இர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ஐய்ள்ல்ங்ஸ்ரீற்ண்ர்ய்) நடத்த அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது அதிகபட்ச நலம் பயக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த வகையில், மாணவ, மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாள்களில் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.
இவர்களின் பார்வைக் குறிப்புகள் ஒரு பார்வைப் புத்தகத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும். தாய்மார்களைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவாறு பல்வேறு
வகுப்புகளில் இருந்து பிரதிநிதிகள் உள்ளடக்கியவாறு அமைதல் வேண்டும்.
வகுப்புகள்
1. மழலையர் வகுப்பு - 1 நபர்
2. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை - 1 நபர்
3. 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை - 1 நபர்
4. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை - 1 நபர்
5. 11-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை - 1 நபர்
1. ஒருமுறை பார்வையிட்ட குழுவைச் சேர்ந்தவர்களே திரும்பவும் பார்வையிடும் வண்ணம் இருத்தல் கூடாது. பிரதிநிதிகள் குலுக்கல் முறையில் (தஹய்க்ர்ம் ம்ங்ற்ட்ர்க்)தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
2. பள்ளியில் உள்ள கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கணினி வசதி, நூலக வசதி, விளையாட்டு வசதிகள், வகுப்பறை வசதிகள் போன்ற எல்லா வசதிகளையும், பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு இவர்கள் தங்களது பார்வைக் குறிப்பைப் பதிவு செய்ய
வேண்டும்.
இந்தக் குழுவின் பார்வைக் குறிப்புகளை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு குறைபாடுகள் உள்ள இடங்களில் அதனைச் சரி செய்ய தாளாளர், செயலர், முதல்வர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்பு எழுதப்பட்டு, அதில் தாளாளர், செயலர் ஒப்பமிட வேண்டும்.
இந்தக் குழுவினர் பார்வையிடும்போது பள்ளியின் முதல்வரோ அல்லது அவரின் பிரதிநிதியோ உடன் இருக்கலாம்.

பள்ளிகளில் முழுநேர மருத்துவ சேவை
மாணவ, மாணவியரின் நலனைக் காக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய பிற நடைமுறைகள் விவரம்:
* பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1,500-க்கும் அதிகமாக இருந்தால் முறையான முழுநேர மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* பள்ளிகளில் முதலுதவி பெட்டிகள் அனைத்து மருந்துப் பொருள்களுடன் அமைக்கப்பட வேண்டும்.
* பள்ளி மாணவர்களின் ரத்தவகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள், மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை வைத்திருக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி கிணறு, கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டி ஆகியன நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.
* 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். அவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
* அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகள், ஸ்விட்ச் போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மின் சாதனங்களில் உள்ள பழுதை நீக்கி பாதுகாப்புத் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
* உடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறுந்த, துண்டித்த நிலையில் உள்ள மின்சார ஒயர்கள் போன்றவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.
* வீர விளையாட்டுகள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுகள் விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு மற்றும் முதலுதவி வசதியுடன் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.
* வகுப்பில் உள்ள வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியைவிட்டுச் சென்றுள்ளனர் என்பதை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதிசெய்த பிறகே பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

G.O 270 FOR SCHOOL AREA BUILDING REG

தமிழக பள்ளிகளுக்கு இந்நாள் வெகு தொலைவில் இல்லை

"வெத்து' பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள்


கிருஷ்நகர்: மேற்கு வங்கத்தில், ஒரு மாணவர் கூட படிக்காத, இரண்டு பள்ளிகளில், 12 ஆசிரியர்களும், இரண்டு ஊழியர்களும், மாதம்தோறும் தவறாமல் சம்பளம் வாங்கி வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த, மேற்கு வங்கத்தில், அடிப்படை வசதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது.


நாதியா மாவட்டத்தில், இரண்டு பள்ளிகள் உள்ளன. உமா ஷாஷி நிம்னதரோ உச்சா பாலிகே வித்யாலயா என்ற பெண்கள் பள்ளியும், தாரக் தாஸ் சிக்ஷா சதன் என்ற உயர்நிலைப் பள்ளியும், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன.நல்ல கட்டடம், மின் வசதி, கழிவறை வசதி, காம்பவுண்ட் சுவர், ஆசிரியர்கள், அவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் என, அனைத்தும் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் தான், ஒருவர் கூட கிடையாது. பெண்கள் பள்ளியில், ஏழு ஆசிரியைகளும், இரண்டு உதவியாளர்களும் உள்ளனர்.அதுபோல, உயர்நிலைப் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.

விளையாடுவர்:ஆசிரியர்கள், ஊழியர்கள் என, அனைவரும் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வந்து விடுவர். கையில் கொண்டு வரும் செய்தித் தாள்களைப் பிரித்து, உலக நடப்புகளை அலசுதல் அல்லது அவிழ்த்து விட்டிருக்கும் தலை முடியைப் பின்னுதல், ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடுதல் என, நேரத்தைப் போக்குகின்றனர்.மாலை, 5:00 மணி ஆனதும், தங்கள் பையைத் தூக்கி, வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விடுகின்றனர். இப்படியே, 2009ம் ஆண்டிலிருந்து, கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, தவறாமல் மாதச் சம்பளம் வந்து விடும். விடுமுறை, விடுமுறை கால பலன்கள், ஓய்வு, கோடை விடுமுறை என, அனைத்தும் கிடைத்து விடுகிறது.
சிக்கிக் கொண்டனர்:ஆனால், மாணவர்களை மட்டும், இவர்களால் சேர்க்க முடியவில்லை. "மாணவர்கள் இல்லாத பள்ளியில், எத்தனை காலம் தான் சும்மா பொழுது போக்குவது, வேறு பள்ளிகளுக்கு மாற்றி விடுங்கள்' என, அவர்கள், மாநில கல்வித்துறைக்கு எழுதிய வண்ணமாகவே உள்ளனர்; ஆனால், அது, இன்னும் கேட்கப்படவில்லை.கடந்த, 2007ம் ஆண்டிலிருந்து, படிப்படியாக, மாணவர்கள் வருகை குறைந்து வந்துள்ளது. அப்போதே, உஷாரான சில ஆசிரியர்கள், ஊழியர்கள், வேறு பள்ளிகளுக்கு, இட மாறுதல் கேட்டுச் சென்று விட, விவரம் இல்லாத ஆசிரியர்கள் மட்டும் சிக்கிக் கொண்டனர்.

இந்த இரு, மாணவர் இல்லாத பள்ளிகள் குறித்து, நாடியா மாவட்ட கல்வி அதிகாரி, பிஸ்வஜித் பிஸ்வாஸிடம் கேட்டபோது, ""எங்களுக்கும் தெரியும், வேறு என்ன செய்வது; ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். அவர்களாக பார்த்து, ஏதாவது செய்தால் தான் உண்டு. என்னால் எதுவும் முடியாது,'' என்றார்.இது குறித்து, மாவட்ட கலெக்டர், அபினவ் சந்திராவிடம் கேட்டபோது, ""அப்படியா... எனக்குத் தெரியாதே! நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்று கூறினார்.
 கருத்து:
4)

26-அக்-201206:53:21 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இதுபோல படிக்க மாணவர்கள் இல்லாததால் சென்னையில் பல மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.குடிசை வாசிகள் அப்புறப்படுத்தப்பட்டு, கண்ணகி நகர் போன்ற வெளியிடங்களுக்கு விரட்டப் பட்டதால் வந்த வினை இது, சரி அந்தப் புது இடத்திலாவது நல்ல பள்ளிகளைத் துவக்கினார்களா என்றால் இல்லை.அது சரி ..ஏழைகள் படித்துவிட்டால் அரசியல் இயக்கங்களுக்கு எங்கிருந்து ரவுடிகள் கிடைப்பர்?

Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
26-அக்-201202:20:51 IST Report Abuse
Sentamil karthikதமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் மட்டும் என்ன வாழுதாம் ??? ஆசிரியர்கள் பெயருக்கு தான் வருகின்றனர் , எதோ நடத்த வேண்டுமே என்று தான் அரைகுறையாக சொல்லி கொடுகின்றனர் .. அதனாலையே தனியார் பள்ளியில் தான் பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்கின்றனர் .. இதிலும் சில அரசு பள்ளிகள் விதிவிலக்குகள் .. நான் அரசு பள்ளி - மங்களபுரம் - 2006 ல் பத்தாம் வகுப்பில் படித்து பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றேன் .. எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் அப்படி .. அவர்களெல்லாம் தான் உண்மையான தெய்வம் ... பொது அறிவு முதல் ஏட்டில் உள்ள கல்வி வரை எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தனர் .. ஆனால் 12 ஆம் வகுப்பில் சிறந்த ஆசிரியர்கள் இல்லாததால் - தனியார் பள்ளியை நாட வேண்டிய கட்டாயம் , இந்த வருடம் மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடித்த எஸ்கேவி (skv) பள்ளி -திருச்செங்கோடு தான் படித்தேன் ...வெறும் புத்தக அடிமை ஆனேன் , ஆளாக்க பட்டேன்... . தேர்வில் .. அதனால் என்ன பயன் ??? ஒன்றுமில்லை .. மதிப்பெண் எப்படி எடுக்க வேண்டும் என்று தான் சொல்லி கொடுத்தார்களே தவிர அவற்றை எப்படி சமுதாயத்திற்கு பயன்படுமாறு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி தரவில்லை .இந்த நிலைமை இன்னும் தமிழகத்தில் பல பள்ளிகளில் மாறவில்லை ..எனவே தினமலர் தலைப்பு படி - இவர்களும் "வெத்து&39 பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள் தான் .... :

Sunday, October 21, 2012

TET COMPULSORY FOR AIDED SCHOOL APPOINTMENT



கல்வியாளர்களுக்கு இரண்டு ப/பாடங்கள்…

கல்வியாளர்களுக்கு இரண்டு ப/பாடங்கள்….

..

இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம் வித்யாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்.
ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் இவை. ஹிந்தி சினிமாவின் பெரிய ஹீரோக்களாகக் கருதப்படும் ஆமீர் கான், ஷாருக் கான், அபிஷேக் பச்சன் போன்றவர்கள் கூட இந்த படங்களில் நடிக்க முன்வருகிறார்கள். ஆமீர்கான் தானே அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கிறார்.
தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் சாத்தியப்படவில்லை. இங்கே மல்ட்டிப்ளெக்ஸ் எனப்படும் பல திரைக் கொட்டகைகள் இன்னும் பரவவில்லை. எனவே அவற்றை மட்டும் நம்பிப் படம் எடுப்பது இயலாது. வெகுஜன அளவில் வித்யாசமான முயற்சிகளை செய்ய முற்படும்போது, வணிகம் சார்ந்த ரசனைக்கும், படத்தின் கருத்து சார்ந்த அழகியலுக்கும் சமரசம் செய்யவேண்டிய சிக்கல் ஏற்படுகிறது. இந்த சமரசத்தைத் தயாரிப்பாளருக்குப் புரியவைத்து படம் எடுக்கச் செய்ய இயக்குநர் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். அப்படி எடுத்த படத்தை பார்வையாளர்களில் எல்லா பிரிவினரும் ஆதரித்தால்தான் வசூலில் தப்பிக்கும் என்ற சிக்கலை சந்தித்தாகவேண்டும். மிக முக்கியமாக இங்கே ஆமீர்கான், ஷாருக் கான்களுக்கு நிகரான அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
இந்தப் பின்னணியில்தான் அண்மையில் வந்த சாட்டை பட முயற்சியை நான் முக்கியமான முயற்சியாகப் பார்க்கிறேன். சமூகத்தின் எரியும் பிரச்சினைகளை படத்தின் கருவாக எடுத்துக் கொள்ள எப்போதுமே தமிழ் சினிமா மிக மிகத் தயங்கும். தண்ணீர் தண்ணீர் மூலம் மறைந்த கோமல் சுவாமிநாதன் நாடகத்தில் கொஞ்சம் முயற்சி செய்ததை பாலசந்தர் படமாக்கினார். அதன்பின்னர் அப்படிப்பட்ட படங்கள் கூட அபூர்வமாகிவிட்டன. அண்மையில் அப்படிப்பட்ட முயற்சிகளாக வந்த படங்களில் அங்காடித்தெரு, வாகை சூடவா வரிசையில் சாட்டையை வைக்கலாம்.
சாட்டை இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்பது அது எடுத்துக் கொண்ட பொருளில்தான். பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன் என்பான் பாரதி. அவனுடைய மேற்கோளோடே தன் படத்தைத் தொடங்கும் இயக்குநர் அன்பழகன் முதல் படத்திலேயே முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தை தயாரிக்க முன்வந்த இயக்குநர் பிரபு சாலமன் தன் இயக்குநர் மீது வைத்த நம்பிக்கையும் கொடுத்த ஆதரவுமே இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் செய்யாமல், அந்த மானவர்களின் எதிர்காலத்தையே வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறப்பதில்லை. அந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கும் இடமாற்றல் கோரிக்கைகளுக்கும் குரல் எழுப்பும் சங்கங்கள் , அவர்கள் தன் அடிப்படைக் கடமைகளையே செய்யாமல் திரிவதை சரி செய்ய முயற்சிப்பதே இல்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முன்வருவதே இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் ஓட்டு பற்றிய பயம்தான். எதிர்காலமே பாழாக்கப்படும் ஏழை மாணவர்களின் குடும்ப ஓட்டுகளை, இலவசங்கள் மூலம் கைப்பற்றிக் கொள்ளலாம்.ஆனால் ஆசிரியர்கள் மீது கை வைத்தால் சிக்கல். ஓட்டுக்கும் ஆபத்து.தேர்தல் வாக்குச் சாவடிகளை நிர்வகிப்பதிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்ற பயம் அரசியல்வாதிகளை ஆட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அன்பழகனின் சாட்டை வீசப்பட்டிருக்கிறது. குட்டிச் சுவராக இருக்கிற ஓர் அரசுப் பள்ளியை , மனசாட்சியும் கடமை உணர்ச்சியும், சிறுவர்கள் மீது அன்பும் உடைய ஒரு நல்லாசிரியர் எப்படி மாற்றி அமைக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முற்பட்டிருக்கிறார். அவருக்கு பெரிய பலமாக அமைந்திருப்பது அந்த பாத்திரத்தை நடித்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி. கூடவே வெவ்வேறு ஆசிரியர் பாத்திரங்களை ஏற்ற ஒவ்வொரு நடிகரும், மாணவர்களாக நடித்த ஒவ்வொரு இளம் நடிகரும் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும், கலை இயக்குநரும் கச்சிதமாகத் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள். ( இது பட விமர்சனம் அல்ல என்பதால் நான் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் இங்கே எழுதவில்லை.)
படத்தில் சின்னச் சின்னதாகப் பல குறைகள் இருக்கின்றன – பள்ளியின் மொத்த ஆசிரியர்களும் பொறுப்பற்றவர்கள் என்ற மிகை உட்பட. ஆசிரியர்களின் தவறுகளை சொல்லும் படம் அடுத்த நிலையில் அதற்குப் பொறுப்பான கல்வித்துறை, அரசு பற்றி சொல்லவில்லை என்பது ஒரு குறை. வெகுஜன பார்வையாளருக்காக வைத்திருக்கும் பாடல்கள், ஆட்டங்கள் எல்லாம் இந்தக் கதைக்கு ஒட்டாமல் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளை நம்பி இன்னமும் வரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலை அசலாக இருப்பதை விட சற்றே மேலாக இந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பது ஒரு குறை. இந்தக் குறைகளை மீறிப் படம் எடுத்துக் கொண்ட செய்தியை உரக்க அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கிறது என்பதுதான் முக்கியம்.
இன்று ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வளர் இளம் பருவத்தினரிடையே சினிமாக்களின் தாக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட பொய்யான காதல் உணர்ச்சி. இயக்குநர் அன்பழகன் அதை இந்தப் படத்தில் சுட்டிக் காட்டி விவாதித்திருக்கிறார். மோதல், சண்டை, ஒருதலைக் காதல், வீட்டார் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு இளம் டீன் ஏஜ் ஜோடியை சேர்த்து வைக்கும் வழக்கமான தமிழ் சினிமா களவாணித்தனத்தை செய்யாமல், படிக்கும் வயதில் படிப்புதான் முக்கியம் என்பதை மாணவர்கள் உணரும் விதத்தில் அன்பழகன் சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தை தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் பார்க்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பார்க்க வேண்டும். இதில் காட்டியிருப்பதில் அது தவறு, இது இப்படியில்லை, இது கற்பனை என்றெல்லாம் சொல்லித் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, இந்தப் படம் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளை, அவற்றுக்கு முன்வைக்கும் தீர்வுகளை திறந்த மனதுடன் விவாதிக்க முன்வரவேண்டும். ஏனென்றால் இந்தப் படம் முன்வைக்கும் பிரச்சினை, கற்பனை அல்ல. அசலானது. லட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.
சாட்டை படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிடப்படும் பிரச்சினையே ஹிந்தியில் ஒரு முழுப்படமாக வந்திருக்கிறது. அதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ். இது சாட்டை முயற்சியிலிருந்து வேறுபட்டது. மல்ட்டிப்ளெக்ஸ் பார்வையாளர்களை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பதே இந்தப் படத்துக்கான பெரிய பப்ளிசிட்டி.
இந்தப் படமும் இயக்குநருக்கு முதல் படம்தான். இயக்குநர் கௌரி விளம்பரப் படங்கள் எடுத்துவந்தவர். அவர் கணவரான தமிழர் பால்கியும் விளம்பரப் பட இயக்குநர். இதற்கு முன் பால்கி எடுத்த இரு படங்களிலும் கௌரியும் பணியாற்றினார். அந்தப் படங்களும் வித்யாசமான கருப் பொருள் உடையவை. சீனி கம், முதிர் வயதில் காதல்வசப்படுவது பற்றியது. அடுத்த படம் ‘பா’ சிறு வயதிலேயே வயது ஏறாமலே உடல் மட்டும் முதுமையாகிவிடும் அபூர்வமான நோயால் தாக்கப்பட்ட சிறுவனைப் பற்றியது. இரண்டிலும் அமிதாப் பச்சன்தான் ஹீரோ. பாதிக்கப்பட்ட சிறுவனாக அமிதாப் அற்புதமாக நடித்திருந்தபோதும் அவருக்கு அதற்காக சிறந்த நடிகர் விருது தரப்பட்டது வட இந்திய அரசியல் என்றும் மம்மூட்டிக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும் என்றும் கேரளத்தில் குரல்கள் எழுந்தன.
கௌரி எடுத்திருக்கும் படத்திலும் அமிதாப் நட்புக்காக இரண்டு சீனில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தில் அந்த ரோலில் அஜீத். ( நியாயமாக ரஜினி நடிக்க முன்வந்திருக்க வேண்டும்.)
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மேல்தட்டு குடும்பத்தில் ஆங்கிலம் தெரியாத குடும்பத் தலைவி சசியைப் பற்றியது. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அவள் மகளே அவமானமாகக் கருதுகிறாள். அம்மா சுவையான லட்டுகளை வீட்டிலேயே தயாரித்து விற்று கணிசமாக பணம் சம்பாதிக்கும் பெருமையை விட அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதுதான் மேட்டுக் குடி குடும்பத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
ஒரு முக்கியமான உறவினர் திருமணத்தில் உதவுவதற்காக முன்கூட்டியே சசி தனியாக அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே சசி நான்கு வாரங்களில் ஆங்கிலம் பேசக் கற்றுத் தரும் வகுப்பில் ரகசியமாகச் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு திருமண விழாவில் ஆங்கிலத்தில் பேசி தன் கணவன், உறவினர்கள் எல்லாரையும் அதிரவைப்பதுதான் முடிவு.
ஸ்ரீதேவியின் திறமையை ஹிந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் பெருமளவில் வீணடித்திருக்கின்றன என்பதை இந்தப் படம் அதைப் பயன்படுத்தியதன் மூலம் இன்னொரு முறை பளிச்சென்று சொல்ல்யிருக்கிறது. எவ்வளவு நல்ல பாத்திரங்களையெல்லாம் ஸ்ரீதேவிக்கு அவர் இளமையாக இருந்தபோதே கொடுத்திருக்கலாம் என்ற ஏக்கம்தான் வருகிறது. பால்கி தயாரிப்புகள் அனைத்திலும் இருக்கும் செய் நேர்த்தி இந்தப் படத்திற்கும் ஒரு பலம்.
இயக்குநர் கௌரி இந்தப் படத்தில் இரண்டு நுட்பமான விஷயங்களை அலசியிருக்கிறார். மேல்தட்டுக் குடும்பங்களில் ஆங்கில மோகம் எந்த அளவு ஊறியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலம் அறியாத ஒரு பெண்ணின் இதர திறமைகள் என்னவாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவை மதிக்கப்படாததைப் பேசுகிறார். ஒரு பெண்ணுக்கு அன்பு மட்டுமல்ல, மரியாதையும் தரப்படவேண்டும் என்பதே செய்தி.
நம் சமூகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களின் நிலை என்ன என்பதை நாம் விவாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைக் கருதவேண்டும். படத்தை எடுத்தவர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்த மேட்டுக்குடி பார்வையாளர்களுக்காக இதை எடுத்திருப்பது ஒரு கிண்டல்தான். வெகுஜன அளவிலும் இதே போல இன்னொரு படம் எடுப்பதற்கான அவசியமும் சாத்தியமும் இருக்கிறது. மேட்டுக்குடியல்லாத சாமான்யக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனோ யுவதியோ ஆங்கிலம் தெரியாததால் படும் அல்லல்கள் இன்று நம் சமூகத்தில் நம் கவனத்துக்குரியவை. அந்தப் பற்றாக்குறை அவர்களின் இதர திறமைகள் எல்லாவற்றையும் மறைத்தும் வீணடித்தும் விடுகின்றது. இந்த நிலை எங்கிருந்து தொடங்கி எப்படி மாற்றப்படவேண்டும் என்பதும் நம் கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்களாகும்.
இரண்டு படங்கள் நம் கல்வியாளர்களுக்கான இரண்டு பாடங்களாக வந்திருக்கின்றன. இந்தப் பாடங்களைப் படிக்காமல் விட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான்

Saturday, October 20, 2012

TET SUPPLEMENTARY ANSWER KEYS IN www.testfnagai.blogspot.com

smart class in kovai corporation schools


மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை-20-10-2012


திட்டத்தின் முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், டிஜிட்டல் ஈக்குவலைசர் எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.கோவை: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும் ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல் பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறியதாவது: வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம்.
மாணவர்களின் கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த முடியாது.
இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம்.
"சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும், மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.