SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, September 30, 2013

புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு



 "புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 30,2013,10:54 IST


காரைக்குடி: "புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
குடியிருப்பு பகுதிகளில், மக்கள் தொகை 300 பேருக்கு, ஒரு தொடக்க பள்ளி அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடந்தாண்டு, கள ஆய்வு செய்தனர். ஆய்வில், 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப்பள்ளி இல்லாதது கண்டறியப்பட்டது.
இப்பகுதிகளில், புதிய தொடக்க பள்ளிகளை விரைந்து துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான, ஆசிரியர்கள் சம்பள விபரங்களை தொடக்க கல்வி இயக்குனர், அரசிடம் வழங்கினார். அதன்படி, 2013-14ல் துவங்க உள்ள, தொடக்க பள்ளிகளுக்கென தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நிர்ணயம், தர ஊதியம் குறித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், புதிதாக துவங்கும் 54 பள்ளிகளுக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.5200-20200+2800; தலைமை ஆசிரியருக்கு ரூ.9300-34,800+4500 என்ற தர ஊதியமும் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய பள்ளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

TET RESULTS DELAY

Saturday, September 28, 2013

ஏனிந்த விதித்தளர்வு?


First Published : 27 September 2013 01:27 AM IST
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, பயன்படுத்துவோரும் அந்த நிதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்கிற புகார்களும் மேலதிகமாக எழுந்து வரும் நிலையில், நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான தகுதியை மேலும் மேலும் தளர்த்திக் கொண்டே போகிறது மத்திய அரசு.
தற்போதைய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, பள்ளிகளுக்குத் தேவையான மேசை, நாற்காலிகள் வாங்க, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், கூட்டுறவு சங்கங்கள் பொதுநலப் பயன்பாட்டுக்காக அசையாச் சொத்து உருவாக்கிட ரூ.1 கோடி வரையிலும் எம்.பி.க்கள் நிதி ஒதுக்கலாம்.
இதுநாள்வரை, "அரசு மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அசையும் சொத்தான தளவாடச்சாமான்கள் (ஃபர்னிச்சர்) ஆய்வுக்கூடக் கருவிகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்க இயலாது' என்ற வாசகத்தில் தற்போது, "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நீங்கலாக' என்று சேர்த்துள்ளனர்.
அதேபோன்று, பதிவுபெற்ற அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்கள் (டிரஸ்ட்/ சொசைட்டி) ஆகியவை மட்டுமே எம்.பி. மூலம் நிதிபெறத் தகுதியுடையவை என்ற வாசகத்தில் தற்போது "மூன்றாண்டுகளுக்கு மேலாக செயல்படும் கூட்டுறவு சங்கங்களும்' என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது பள்ளிக்குத் தேவையான மேசை, நாற்காலிகள், ஆய்வுக்கூடத்துக்கு தேவையான கருவிகளை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்குவது நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த அசையும் சொத்துகள், கொடுக்கப்பட்ட கமிஷன் போக, மீதி தொகையில் தரமற்ற பொருள்களால் தயாரிக்கப்பட்டவையாக இருக்காது என்பது என்ன நிச்சயம்? இவையும்கூட கோப்புகளைப் போல கால்முளைத்துக் காணாமல் போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
எல்லா அரசுப் பள்ளிகளிலும், அங்குள்ள மேசை, நாற்காலி, பீரோக்களுக்கு பள்ளித் தலைமையாசிரியரிடம் கணக்கு இருக்கும் என்றாலும், தலைமையாசிரியர் இடமாறுதல் பெறும் போது, புதிதாக வருபவரிடம் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மேசை நாற்காலிகளை கணக்குப் பார்த்து ஒப்படைக்கும் வழக்கம் எங்குமே கிடையாது.
வகுப்பறை, சுற்றுச் சுவர் போன்ற அசையா சொத்துகள் தரமற்ற பொருள்களால் கட்டப்பட்டிருந்தாலும் அவை அங்கே இருக்கும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெறப்பட்ட தளவாடச் சாமான்கள் காணாமல் போவதை நிரூபிக்க எந்தவிதமான தடயமும் இருக்காது.
அதேபோன்றுதான் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் நிகழும்!. அரசு விதிமுறைப்படி நிதிஒதுக்கீடு செய்யப்படும் அறக்கட்டளை, சொசைட்டி, கூட்டுறவு சங்கங்களில் பரிந்துரை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் எத்தகைய பொறுப்பிலும் இருத்தல் கூடாது என்பதில் அர்த்தமில்லை. இன்றைய அரசியல் சூழ்நிலையில், அரசியல்வாதியின் குடும்பங்கள்தான் கூட்டுறவு அமைப்புகளை ஆக்கிரமித்துள்ளன. எல்லா பதவிகளிலும் அவர்கள் இருக்கிறார்கள்.
கூட்டுறவுச் சங்கங்கள் பொதுநலன் கருதி, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு திருமண மண்டபம் கட்டலாம்; முதியோர் இல்லம் கட்டலாம். அந்தக் கட்டடத்தைப் பராமரிக்கும் செலவை அந்த சங்கமே ஏற்க வேண்டும். அரசிடம் நிதி கேட்க முடியாது என்பது மட்டுமே நிபந்தனை. இதன் மூலம் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் அனைத்து வாசல்களையும் திறந்து வைக்கிறார்கள்.
1993-94 நிதியாண்டில் இந்தத் திட்டம் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தொகுதி மேம்பாட்டு நிதி வெறும் ரூ.5 லட்சம்தான். அடுத்த ஆண்டே அது ஒரு கோடி ரூபாயாக உயர்ந்தது. 1998-99 நிதியாண்டில் 2 கோடியானது. 2011-12 நிதியாண்டில் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ.5 கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய நாடாளுமன்றமும், அதை முறையாகச் செலவழிக்க நிர்வாக இயந்திரமும் என்பதுதான் முறையான ஆட்சியின் செயல்பாடாக இருக்க முடியும். நாடாளுமன்றத்தில் தொடங்கி, சட்டப்பேரவை, மாநகராட்சி உறுப்பினர்கள் வரை தொகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் நிதி ஒதுக்கும் போது, அது முறைகேடுகளுக்கு வழிகோலும் என்பது சொல்லியா தெரிய வேண்டும்?
தொகுதி மேம்பாட்டு நிதியால் எந்தத் தொகுதியும் மேம்பட்டுவிடவில்லை என்பதுதானே நிஜம். இதில் எதற்காக மேலும் மேலும் விதித் தளர்வு? யாரைத் திருப்திப்படுத்த இந்தச் சலுகை?

FIRST TERM HOLIDAYS ISSUE


DINAKARAN PHOTO


வெற்றி கிட்டும் வரை போராட்டம்


ARPATTAM CONTINUES


HMS SHOULD BE IN SCHOOLS DURING HOLIDAYS

Friday, September 27, 2013

HMS THINK TO PULL BACK

ENGLISH MEDIUM IN ALL SCHOOLS

SSA FUND REDUCED

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2013/09/27/Article//006/27_09_2013_006_013.jpg

CHENNAI MARIYAL 26.09.2013

imggallery

A GOOD START FROM GANDHI JAYANTHI

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல்




 


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த சாலை மறியலால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும் 30ஆம் தேதி வரை தங்கள் போராட்டத்தை தொடருவோம் என்றும், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து மறியல் செய்தவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.

Sunday, September 22, 2013

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்


திருநெல்வேலி: பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளும் தலா 3 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகள் 5 ஆயிரம் ரூபாய் டி.டியாக எடுத்து சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இந்த டி.டிக்களை அனுப்ப வேண்டாம் என்றும், இக்கட்டணத்தை பள்ளி மானிய தொகையில் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கமிஷன் தொகையுடன் டி.டி எடுத்தவர்கள் மீண்டும் மானிய தொகையில் செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
எனவே, வருங்காலங்களில் இதுபோன்ற குளறுபடிகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Saturday, September 21, 2013

தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிக் கூடங்களாக தரம் உயர்வு: அரசு ஆணை வெளியீடு


சென்னை,
சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

NAGAPATTINAM DEEO LETTER ABOUT AIDED SCHOOL TEACHERS SOCIETY



மாநகராட்சி பள்ளியில் பெற்றோர் முற்றுகை

எண்ணூர் காமராஜர் நகரில் மாநகராட்சி தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, சுகாதாரமற்ற கழிப்பிடம், பழுதடைந்த சமையல் அறை போன்ற குறைபாடுகள் உள்ளன. 
இப்பள்ளி தலைமை ஆசிரியர், கடந்த 3 மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால், மாணவ, மாணவிகளால் படிக்க முடியவில்லை. இது பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் பெற்றோர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணகுமாரிடம், அடிப்படை வசதி இல்லை. இலவச புத்தகம், பைக்கு தலைமை ஆசிரியர் பணம் கேட்கிறார், இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் புகார் கூறினர். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தபின் கலைந்து சென்றனர்.

DINAMALAR NEWS ABOUT NAGAI KOOTTANI BLOCK GENERAL BODY MEETING


Thursday, September 19, 2013