குழந்தைகள் படிக்க பெற்றோர் வாய்ப்பு கொடுங்கள்: பெரம்பலூர் கலெக்டர் பேச்சு
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மே 01, 9:07 PM IST


பெரம்பலூர், மே 1-
விழாவில் வேப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமதாஸ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புகழேந்தி, வார்டு உறுப்பினர்கள் கனகராஜ், கதிர்வேல், நல்லதம்பி, நாகராஜன், ஆசைதம்பி, ஆசிரியைகள் பவுஜியா பேகம், சந்திரா, உள்பட துபாய் வாழ் நண்பர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சொய் சொய்ங் சொய் சொய்ங் கும்கி பட பாடலை ரசித்து கேட்டார்.
மேலும் துபாய் வாழ் நண்பர்கள் உள்பட 175 பேர் புலவலராக சேர்ந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் 252 மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.
பெரம்பலூர் அருகே உள்ள பேரளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, மரம் நடும் விழா, கலைஅரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிராம கல்வி குழத் தலைவரும் ஊராட்சி மன்ற தலைவருமான துரைக் கண்ணு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார். ஆசிரியை ஜாய்ஸ் ஸ்டெல்லா ராணி ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ் அகமது புதிதாக கட்டப்பட்ட கலைஅரங்கத்தை திறந்து வைத்தும், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பேசியதாவது:-
பேரளி ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா இவ்வளவு பிரமாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்க்கல்லை இதை பார்த்தவுடன் பிரமிப்பாக உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் எனக்கு பல மீட்டிங் இருந்த தால் என்னால் 6 மணிக்கு வர முடிய வில்லை.
பேரளி இளைஞர்கள் 10 பேர் வந்து தொடர்ந்து நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என்று கூறிய கட்டாயத்தல் மீட்டிங் முடித்து விட்டு 8 மணிக்கு மேல வந்து உள்ளேன். நிகழ்ச்சியில் குழந்தைகள் தாய்மார்கள் இருப்பாங்க நான் 8 மணிக்கு மேல் வந்தால் இன்னும் கால தாமதம் ஆகிவிடும் என்றேன். அதற்கு நீங்கள் தான் வந்து பேச வேண்டும் என்றார்கள்.
உங்கள் ஆர்வத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அரசு பள்ளிகளுக்கு முன் உதாரணமாக பேரளி பள்ளி கூடம் உள்ளது. நான் படித்தது கூட அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்தேன் அந்த பள்ளியில் தான் மாவட்ட ஆட்சியராக அன்று உள்ளேன்.
அரசு பள்ளியில் படித்ததில் எந்த குறையும் எனக்கு இல்லை. நம்முடைய சேவை நம்ம ஊரிலே இருக்க வேண்டும் என்று பேரளி துபாய் வாழ் நண்பர்கள் இங்கு 9 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டி கொடுத்து உள்ளார்கள். இம்மாதரி இளைஞர்கள் ஊர் ஊருக்கு இருந்தால் நன்றாக இருக்கும். பெற்றோர்களுக்கு சில கருத்தை சொல்ல விரும்பு கிறேன் குழந்தை எந்த பள்ளியில் படிக்கின்றது என்பது முக்கியமல்ல.
குழந்தை பள்ளி கூடத்தில் இருப்பது 6 மணி நேரம் தான். மீதி 18 மணி நேரம் உங்களிடம் தான் உள்ளது. எவ்வளவு வசதி படைத்த பள்ளியில் படிக்கின்ற குழந்தைகள் எல்லாம் கலெக்டராகவோ, என்ஜினீயரகவோ, டாக்ட ராகவோ ஆவது இல்லை. எல்லா பெற்றோர்கள் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அப்படி பெற்றோர்கள் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்று தான் நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது டிவியில் சிரியல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் நீங்கள் டிவி பார்த்து கொண்டு அவன் படிக்க சொன்ன அவன் படிக்கமாட்டான் நீங்கள் என்ன செய்கிறீர்களே அதை குழந்தை திருப்பி செய்யும். காலையில் அப்பா பேப்பர் படிச்சா அவனும் பேப்பர் படிப்பான், நீங்கள் புத்தகம் படிச்சா அவனும் படிப்பான் உங்கள் செயலைதான் பிள்ளைகள் திருப்பி செய்யும்.
வாழ்கையில் முன்னேற படிப்பறிவு மிக முக்கியம். பெரிய பள்ளிகளில் அதிக தொகை கொடுத்து பிள்ளை சேர்த்து விட்டால் பொறுப்பு முடிந்தது என்று நினைப்பது தவறு. அது உண்மை இல்லை. மனிதன் வாழ்வதற்கு பல கஸ்டங்கள் உள்ளது. எனவே தவறாமல் பள்ளிக்கு அனுப்புங்கள். படிப்பதற்கு குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் தினமும் செய்திதாள் வாங்கி கொடுங்கல் மாதம் ஒரு புத்தகம் வாங்கி கொடுங்கள். குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும் முன்னேறும். வரும் கல்வி ஆண்டில் இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வி தொடங்கபடும் என இவ்வாறு கலெக்டர் பேசினார்.
விழாவில் வேப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமதாஸ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் புகழேந்தி, வார்டு உறுப்பினர்கள் கனகராஜ், கதிர்வேல், நல்லதம்பி, நாகராஜன், ஆசைதம்பி, ஆசிரியைகள் பவுஜியா பேகம், சந்திரா, உள்பட துபாய் வாழ் நண்பர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சொய் சொய்ங் சொய் சொய்ங் கும்கி பட பாடலை ரசித்து கேட்டார்.
மேலும் துபாய் வாழ் நண்பர்கள் உள்பட 175 பேர் புலவலராக சேர்ந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் 252 மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment