SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, January 02, 2015

ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்தப்படுமா?

ஆசிரியர் வருகை பதிவேடு 



கண்காணிப்பு திட்டம் 



முறைப்படுத்தப்படுமா?ஜனவரி 02,2015,12:11 IST


கோவை: அரசு பள்ளிகளில், ஆசிரியர் வருகையை முறைப்படுத்த அறிவிக்கப்பட்ட, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்த, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டில், பள்ளி மேலாண்மை தகவல் மையத்தின் ஒரு பகுதியாக, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, இரண்டு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2012 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம், அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின்படி, தலைமையாசிரியர், ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் வருகை குறித்து, காலை 10:00 மணிக்குள் மாவட்ட கலெக்டர், கல்வி அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள இயலும்.
தலைமையாசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பணிச் சுமையை கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிவிப்போடு, விரிவுப்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு தாமதமாக வருதல், இடையில் அறிவிப்பு இன்றி வெளியிடங்களுக்கு செல்லுதல், அறிவிப்பு இல்லாமல், அட்ஜெஸ்மென்ட் என்ற பெயரில் விடுமுறை எடுத்தல் போன்றவை, பல்வேறு அரசு பள்ளிகளில் சாதாரணமாகியுள்ளது.
பள்ளி கண்ணாடி என்ற பெயரில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை எழுதும் பழக்கமும் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் செயல்படுத்தப்படுவது இல்லை.
மாணவர்களின் நலன் கருதி, இத்திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சில தனியார் பள்ளிகள் போன்று, வகுப்பு ஆசிரியர் மூலம் வாரத்துக்கு ஒரு முறையாவது, மாணவர்களின் வருகை குறித்து பெற்றோருக்கு போனில் தெரிவிக்க வேண்டும். பாதை மாறும் மாணவர்களை, இம்முறையில் எளிதாக அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க இயலும்.
தொடக்கக் கல்வி அதிகாரி காந்திமதி கூறுகையில், "கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களால், தினமும், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கல்வி அதிகாரிகள் குழு, திடீர் ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
வருகை பதிவேடுகளில், முறைகேடுகள் நடப்பது ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டுமின்றி, தலைமையாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

No comments: