SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, August 19, 2013

மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமதி.சி.பிரபாவின் இயக்க உரை


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1946 ல் துவங்கப்பட்டு. பெரிய ஆலம் விருட்சமாய் தன் விழுதுகளை கீழே இறக்கியும்.பல்வேறு கிளைகளை விட்டும் .சூறாவளி வந்தாலும். ஏன் சுனாமியே வந்தாலும. பலமுடன் எதிர்கொள்ளக் கூடிய மிகப் பெரிய ஒரு இயக்கம்.
அவ்வப்போது சில கிளைகள் முறிந்து விழத் தான் செய்கின்றன.கிளைகள் விழுவதால் மரத்துக்கும் ஒன்றும் பாதிப்பில்லை.தன்னுள் மீண்டும் புதிய கிளைகளை விட்டு விட்டு தான் செல்லப் போகிறது.

நமக்கு இயக்கம் என்ன செய்தது என்று பார்க்காமல் இயககத்திற்கு நாம் என்ன செய்து இருக்கிறோம்
என இன்று முதலாவது எண்ணிப் பார்ப்போம்.நாம் உறுப்பினராக இருந்தாலும் சரி. பொறுப்பாளராக இருந்தாலும் சரி.நாம் அங்கு இருந்த சுவடுகளை பதித்து விட்டு செல்லுங்களேன்.

பிறந்தோம். வாழ்ந்தோம். மறைந்தோம் என்று இல்லாமல்
பிறந்தோம்.வாழ்ந்தோம், வாழ்கின்றோம் என்ற எண்ணத்தோடு 
இயக்க வரலாற்றில் இடம் பிடிக்கலாமே?

குடும்பத்தில் குழப்பங்கள் இருக்கலாம். இது சகஜம்.இதற்காக நம்ம குடும்பத்தை விட்டு விடுவோமா?
அப்படின்னு மற்றவர்கள் தவறாக நினைத்தால் அது அவர்களுடைய முட்டாள் தனம்.

நான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்று சொல்லிக் கொள்வதில் நாம் சந்தோஷப்பட வேண்டும்.நாம் இவ்வளவு வசதிகள் இருந்தும் நாம் ஒன்றுபட முடியவில்லை என்றால். அன்று எந்த வசதியுமே இல்லாமல் மாஸ்டர் இராமுண்ணியும். ஜே.எஸ், ஆர் அவர்களும் நமக்காக என்ன கஷ்டப்பட்டு இருப்பார்கள்.எதற்காக? நம் ஊதியத்தை . நம் சலுகைகளை நாம் பெற.

இன்று வயது முதிர்ந்த நிலையிலும் நமக்காக . ஒவ்வொரு மாவட்டமாக. சில கிளைகளாக சென்று தன் உரையால் நம்மை எழுச்சி பெற செய்வதற்காக ஓடோடி வருகிறாரே.நமக்காக.நாம் முழு ஊதியத்தை பெறுவதற்காக.
நாம் சலுகைகள் பெறுவற்காக.

அவருக்கு .நம் இயக்கத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம். செப்டம்பர் 25 ல் இருந்து நடைபெறக் கூடிய தொடர் மறியல் போராட்டத்தில் முழுமையாக . முழு மனதுடன் கலந்து கொள்வோம். 26-ம் தேதி மகளிர் அனைவரும் பங்கேற்று வெற்றி அடையச் செய்வோம்.

சும்மா இருந்திருந்தால் கிடைத்திருக்குமா? சுதந்திரம்.
வீரனுக்கு ஒரு முறை தான் சாவு. கோழைக்கோ தினம் தினம் சாவு. வீர பெண்மணிகள் பலரை பெற்ற நாடு இது.நீ ஊதியம் பெற்றால் அதனால் உன் குடும்பம் தான் சந்தோசப்படப் போகிறது. 2800தர ஊதியம் பெறும் ஆசிரியப் பெருமக்களே.
மாதம் உங்களுக்கு ரூ.8550 தரப்பட வில்லை என்று வீட்டில் சொல்லுங்கள்.

இலட்சக்கணக்காணோர் ஒவ்வொரு ஆசிரியர் பின்னால்இருக்கிறோம் என்பதை எந்த நிலையிலும் மறக்காதே.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - என்பது அன்றைக்கு மட்டுமல்ல. இன்றைக்கும் தான் என்பதை மறந்து விடாதே.

குட்ட குட்ட குனிந்தால் குட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்
நிமிர்ந்து பார்.குட்டுவது நிறுத்தப்படும்.

இறதி வெற்றி நமதாக இருக்கட்டும்
வாழ்த்துக

No comments: