மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த அரங்கமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்முனி, மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொள்வதாக, மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் குணசேகரன், நலத்துறை தாசில்தார் சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புகார் குறித்து விசாரணை நடத்தி, கலெக்டரிடம் அறிக்கையை சமர்பித்தனர்.அறிக்கையை ஆய்வு செய்ததில், பொதுமக்கள் கூறிய சம்பவங்கள் உண்மை என தெரிய வந்ததைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் வாழ்முனியை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment