SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, May 03, 2013

கோடை விடுமுறைக்குள் கழிவறை, குடிநீர் வசதிகளை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை




tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: கோடை விடுமுறைக்குள் எல்லா தனியார் பள்ளிகளிலும் கழிவறை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் ஆய்வுக்குழுவினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

* தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட விடுமுறை காலத்தில் அந்தந்த பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

* பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவுக்கு இருபாலர் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பல தனியார் பள்ளிகளில் தேவையான அளவுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்பது ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் பெற்ற பள்ளிகள் உடனடியாக தேவையான வசதிகளை செய்ய வேண்டும்.

* மாணவ மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதிகள், வகுப்பறையில் மேஜை, நாற்காலி வசதிகள், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் போன்றவற்றை பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நியமித்தல் வேண்டும்.

* இந்த வசதிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அந்தந்த மாவட்ட அளவில் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறையினர் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள ஆய்வுக்குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொள்வார்கள்.

* அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை முறை குறித்து தகவல் பலகையில் தெரியப்படுத்த வேண்டும். அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இடத்தை ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments: