6ம் வகுப்பிலேயே மாணவர்களிடம் புகை பழக்கம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னையில் 6ம் வகுப்பிலேயே மாணவர்களிடம¢ புகை பழக்கம் தொடங்கிவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் தடுப்பு மையம் சார்பில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடையே புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்த சர்வே ஒன்று நடத்தப்பட்டது. மொத்தம் 15,186 மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் வருமாறு:11 வயது மாணவர்களில் 5.8 சதவீதம் பேரும், 12 வயது மாணவர்களில் 3.7 சதவீதத்தினரும், 13 வயது மாணவர்களில் 2.9 சதவீதத்தினரும், 14 வயதினரில் 2.3 சதவீதத்தினரும் புகை பிடிக்கின்றனர் அல்லது புகையிலை சார்ந்த பொருட்களை வகுப்பறை, வீடு மற்றும் பொது இடங்களில் துணிச்சலாக பயன்படுத்துகின்றனர்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பது, கடைகளில் விற்கப்படும் புகையிலை பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு, பெற்றோர்களுக்காக கடைகளுக்கு சென்று பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் வாங்கி வருவதால் நாமும் புகை பிடித்து பார்ப்போம் என்ற உந்துதல், பள்ளியில் சக மாணவர்களோடு ஏற்படும் இறுக்கம் ஆகிய சூழ்நிலைகளால் இளம்பிராயத்தினர் புகை பிடிக்கின்றனர்.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் முன்பாக இயங்கும் பெட்டிக்கடைகளில் புகையிலை தயாரிப்பு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தவும், கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களிடையே புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் தடுப்பு மையம் சார்பில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடையே புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்த சர்வே ஒன்று நடத்தப்பட்டது. மொத்தம் 15,186 மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் வருமாறு:11 வயது மாணவர்களில் 5.8 சதவீதம் பேரும், 12 வயது மாணவர்களில் 3.7 சதவீதத்தினரும், 13 வயது மாணவர்களில் 2.9 சதவீதத்தினரும், 14 வயதினரில் 2.3 சதவீதத்தினரும் புகை பிடிக்கின்றனர் அல்லது புகையிலை சார்ந்த பொருட்களை வகுப்பறை, வீடு மற்றும் பொது இடங்களில் துணிச்சலாக பயன்படுத்துகின்றனர்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பது, கடைகளில் விற்கப்படும் புகையிலை பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு, பெற்றோர்களுக்காக கடைகளுக்கு சென்று பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் வாங்கி வருவதால் நாமும் புகை பிடித்து பார்ப்போம் என்ற உந்துதல், பள்ளியில் சக மாணவர்களோடு ஏற்படும் இறுக்கம் ஆகிய சூழ்நிலைகளால் இளம்பிராயத்தினர் புகை பிடிக்கின்றனர்.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் முன்பாக இயங்கும் பெட்டிக்கடைகளில் புகையிலை தயாரிப்பு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தவும், கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களிடையே புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment