SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, January 21, 2013

M.PHIL INCENTIVE FOR BT ASSISTANTS



எம்.பில், பி.எச்டி பட்டம் பெற்ற

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

கருத்துகள்


நாகர்கோவில் : பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ, எம்.எஸ்சி பட்டப்படிப்புக்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்வுக்கு பின்னர் 2வது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக எம்.எட் உடன் எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டங்களை சேர்த்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி போன்ற முதுநிலைப் பட்டங்கள் தேர்வு பெற்ற பிறகு முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பதவி மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் பணிபுரியும்போது எம்.எட் பட்ட தகுதி பெற்றிருந்தால் 2வது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடையவர் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஒரு ஆசிரியரின் மொத்த பணி காலத்தில் அதிகபட்சமாக இரு ஊக்க ஊதிய உயர்வுகளே அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வித்துறை, பல்கலைக்கழக பாட பகுதியில் இருந்து எம்.எட் படிப்பை நீக்கிவிட்டதால் எம்.எட் கல்வி தகுதியை தொலைதூர கல்வி மூலம் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. எம்பிஎல் அல்லது பிஎச்டி போன்ற உயர் கல்விகளை தொலைதூர கல்வி மூலம் பெறும் நிலை உள்ளது.

இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சிக்கு பெறும் ஊக்க ஊதிய உயர்வை தவிர மேலும் ஒரு ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியான உயர் கல்வியான எம்.எட் பட்டத்தோடு எம்.பில், பிஎச்டி பட்டங்களைச் சேர்க்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
 இதனையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் 2வது ஊக்க ஊதிய உயர்வு பெற எம்.எட் என்பதற்கு பதிலாக எம்.எட் அல்லது எம்.பில் அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments: