SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, September 25, 2012

7% D.A HIKE FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES


மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7சத டிஏ உயர்வு; ரூ. 7ஆயிரத்து 400 கோடி தான் கூடுதல் செலவு
புதுடில்லி: சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

72 சதமாக உயரும் :



அமைச்சர் குழு முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை 7 சதம் உயர்த்தப்பட்டு சம்பள விகிதப்படி அகவிலைப்படி 58 முதல் 65 சதமாக உயர்ந்தது. தற்போது மீண்டும் 72 சதமாக உயர்கிறது. இதன் மூலம் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 400 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஆகும். 


அதிக எதிர்பார்ப்பில் ஊழியர்கள்:



இப்போது இருக்கும் விலைவாசி உயர்வில் மத்திய அரசு 7 சதம் உயர்த்தினாலும் எங்களுக்கு போதாது என்றும் கூடுதலாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்றும் மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனராம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பள விகிதப்படி 65 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 72 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், விலைவாசி உயர்வின் அடிப்படையில் தற்போது 7 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு 2012 ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு மூலம், இந்த நிதியாண்டுக்கு, கூடுதலாக 7 ஆயிரத்து 408 கோடி ரூபாய் கூடுதல் செலவு மத்திய அரசுக்கு ஏற்படும். ஆறாவது ஊதியக்குழு வகுத்த நெறிமுறைகளை பின்பற்றி இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2006 ஜனவரிக்கு முன்பாக பணியில் இருந்து ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு அந்த தேதிக்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வூதியத்திற்கு சமமான சலுகைகளை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

No comments: