SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, August 29, 2012

GOVERNMENT SHOULD DROP TET: RAMADASS

ஆசிரியர் தகுதித்தேர்வு முறை வேண்டாம்: ராமதாஸ் வலியுறுத்தல்
Posted Date : 13:04 (29/08/2012)Last updated : 13:04 (29/08/2012)
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு முறையை கைவிட வேண்டும் என்று  பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டில் கல்விபெறும்  உரிமைச்சட்ட விதிகளின்படி அண்மையில் நடத்தபட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின்  முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

தேர்வு எழுதிய 6.67 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக 2448 பேர்  மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு தேர்வில் 99.6 விழுக்காட்டினர் தோல்வி  அடைந்திருப்பதை வைத்து பார்க்கும் போது  தேர்வு எழுதியவர்களிடம் குறை  இல்லை.தேர்வுமுறையில் தான் குறை உள்ளது என்பதை உணர முடிகிறது.

இந்தத் தேர்வில் நகர்ப்புற மற்றும் பணக்கார மாணவர்கள் அனைத்து கலைகளையும்  பயன்படுத்தித் தேர்ச்சிப் பெற்றுவிடும் நிலையில், கிராமப்புற மாணவர்களும், முதல்  தலைமுறைப் பட்டதாரிகளும் வெற்றி பெற முடியவில்லை. இன்றைய சூழலுக்கு சற்றும்  ஒவ்வாத ஒரு தேர்வை பெரும் குழப்பங்களுடன் நடத்தி, அதில் 99 விழுக்காட்டிற்கும்  அதிகமானோர் தோல்வி அடைந்துவிட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது,  ஆண்டுக்கணக்காக படித்து பட்டய மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அவமானப்படுத்தும்  வகையில் உள்ளது.

இந்திய ஆட்சிப் பணி மற்றும் காவல் பணி அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்  போன்றவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பிறகே பணியை தொடங்குகின்றனர்.


ஆனால், ஆசிரியர்களுக்கு எந்தப் பயிற்சியும் தரப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு  இத்தகைய பயிற்சிகளை அளிப்பதை விட்டுவிட்டு, ஒன்றுக்கும் உதவாத தகுதித் தேர்வை  நடத்துவது திறமையை வளர்க்கவோ,அளவிடவோ உதவாது.

எனவே, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த  முறைப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை  தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு ஓராண்டு   கட்டாயப்பயிற்சி அளித்து ஆசிரியர் பணியில் அமர்த்தவேண்டும்.அப்போது தான் தரமான  கல்வியை வழங்க முடியும்”என்று கூறியுள்ளார்.

No comments: