SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, July 21, 2012

STUDENT FORCED TO DRINK URINE IN PERAMBALUR

பள்ளி விடுதியில் கொடுமை

 

சிறுநீர் குடிக்க சொல்லி மாணவனை அடித்ததாக 3 ஆசிரியர் மீது புகார்

கருத்துகள்


கும்பகோணம் : பள்ளி விடுதியில் சிறுநீர் குடிக்க சொல்லி அடித்ததாக 3 ஆசிரியர்கள் மீது 9ம் வகுப்பு மாணவன் புகார் செய்துள்ளான். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தஞ்சை மவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகை பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் பரத்ராஜ் (14). பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூரில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறான். 

நேற்று முன்தினம் இரவு விடுதியில், படிக்கும் நேரத்தில் ஆசிரியர்களிடம் மாணவன் பரத்ராஜ் சிறுநீர் கழிக்க செல்ல அனுமதி கேட்டானாம். இதற்கு ஆசிரியர்கள், ‘படிக்கும் நேரத்தில் எப்படி உனக்கு சிறுநீர் வரும். உனது சிறுநீரை பிடித்து குடிÕ என கூறி கம்புகளால் மாறி மாறி பரத்ராஜை அடித்ததாகக் கூறப்படுகிறது.  இதில் மாணவனின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இரவு முழுவதும் வலியால் துடித்த பரத்ராஜ், அதிகாலையில் புறப்பட்டு ஊருக்கு வந்துள்ளான். வீட்டில் நடந்ததை கூறியதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பரத்ராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த கும்பகோணம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், பரத்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்

மாணவன் பேட்டி

மருத்துவமனையில் பரத்ராஜ் கூறும்போது, “ நேற்று முன்தினம் இரவு Ôஸ்டடிÕ நேரத்தில் ஆசிரியர்களிடம் சிறுநீர் கழிக்க செல்ல அனுமதி கேட்டேன். அனுமதி மறுத்து, அந்த சிறுநீரை நீயே பிடித்து குடி என முதுகு, கை, தொடைகளில் கம்பால் சரமாரியாக  3 ஆசிரியர்கள் அடித்தனர். அடி தாங்க முடியாமல் அழுதேன். 
மேலும் அடிப்பார்கள் என்ற பயத்தில் காலையில் விடுதியில் இருந்து வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன் என்றான்.
பெரம்பலூரில் 9ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த சோலமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு ராஜா. இவரது மகன் பரத் ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இன்று பரத் ராஜ் செய்த தவறு ஒன்றிற்காக அவனது விடுதி வார்டன் சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பிய பரத் ராஜ், சொந்த ஊர் திரும்பி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். தற்போது சிறுவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மாணவனுக்கு நேர்ந்த அவலம் - ஆசிரியர்களை திருத்துவது எப்படி?-21-07-2012

எழுத்தின் அளவு :
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது.
அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்த அதற்குள் சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுநீர் கழித்து வர அனுமதிக்குமாறு பரத்ராஜ் ஆசிரியரிடம் மீண்டும் கேட்டார். அப்போது ஆசிரியர்கள், சிறுநீரை அதே இடத்தில் கழிக்க வைத்ததுடன் அடித்து உதைத்து பரத்ராஜை சிறுநீர் குடிக்க வைத்தாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பரத்ராஜ் விடுதியிலிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான சோழன்மாளிகைக்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பரத்ராஜை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த ஆசிரியர்கள் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடம் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டது. அதேபோல், இதுமாதிரி மனித தன்மையற்று நடந்துகொள்ளும் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்து, அவர்களின் கல்வித் தகுதிகளையும் செல்லாததாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், தரமான கல்வித்திட்டமே, தரமான ஆசிரியர்களை உருவாக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்

No comments: