SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, April 29, 2012

கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிய 10 பேர் குழு நியமனம்




First Published : 29 Apr 2012 12:30:49 AM IST

Last Updated : 29 Apr 2012 04:53:21 AM IST
சென்னை, ஏப். 28: இப்போதுள்ள கல்வி முறையில் உள்ள குறைகளைக் கண்டறிவதற்காக 10 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: கல்வி முறையில் உள்ள குறைகளைக் கண்டறியவும், அவற்றை சரிசெய்து மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கவும் வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி இந்தக் குழுவின் தலைவராக இருப்பார்.
பள்ளிக் கல்வி செயலாளர் டி. சபீதா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னைப் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் தலைவர் பி.எஸ். பாலசுப்பிரமணியன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் எஸ்.சுவாமிநாதப் பிள்ளை, சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், பள்ளிக் கல்வி இயக்குநர் மணி, தொடக்கக் கல்வி இயக்குநர் சங்கர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்) இயக்குநர் தேவராஜன் குழுவின் உறுப்பினர்-செயலராக இருப்பார்.

ஆற்ற வேண்டிய பணிகள்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் குறைகளைக் கண்டறிந்து மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரை செய்தல்.

இப்போது நடைமுறையில் உள்ள பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து மாற்றங்களைப் பரிந்துரை செய்தல்.

தரமான கல்வியை அளிப்பதற்காக பள்ளிகளுக்குத் தேவைப்படும் இன்றியமையாத கட்டமைப்பு வசதி, தளவாட வசதி, உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தல்.

மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு ஏற்ப தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்தல்.

ஆசிரியர்களுக்குத் தேவையான பணியிடைப் பயிற்சிகள் குறித்துப் பரிந்துரை செய்தல்.

அனைத்துப் பள்ளி செயல்பாடுகளையும் மேம்படுத்த, பள்ளி ஆய்வு முறைகளில் தேவைப்படும் மாற்றங்களைப் பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: