SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, March 17, 2012

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு





வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு

First Published : 17 Mar 2012 12:34:03 AM IST


புது தில்லி, மார்ச் 16: மாதாந்திர சம்பளதாரர்கள் ஓரளவு பயனைடயும் வகையில் ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.
 மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2012-13-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
 இதன்படி ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை உள்ளவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.
 அத்துடன் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.
 ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 20 சதவீத வரி செலுத்த வேண்டும். ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஊதியம் பெறுவோர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றார் முகர்ஜி.
 பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையான தொகைக்கு வரி கிடையாது. ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
 நேரடி வரி வரைவை (டிடிசி) அமல்படுத்தும் நோக்கில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக முகர்ஜி தெரிவித்தார்.
 ஆனால் நேரடி வரி வரைவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழு வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதை முகர்ஜி செயல்படுத்தவில்லை.
 மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதியை 60 வயது முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்கள் பெறலாம். ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.
 நேரடி வரி வரைவு (டிடிசி) தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
 இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள வரி விதிப்பு முறைக்கு மாற்றாக அமையும்.
 சேமிப்புகளின் மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் வரை தொகை பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.


No comments: