Pages

Friday, August 30, 2013

வெற்றியின் விளைநிலம்



ஆசிரியர் இனத்தையே இழிவாக்கி
போராட்டம் என்ற போர்களத்திலே
நிறுத்திட்டாய்.

போராடி பெற்ற சலுகைகளை எல்லாம்
போராடாமலேயே எங்களிடமிருந்து
பறித்திட்டாய்

இன்று தருவாய், நாளை தருவாய்
எனறு காத்திருக்கச் செய்து
ஏமாற்றி விட்டாய்

துடிக்கும் உணர்வுகளை துா ண்டிவிட்டாய்
தெருவுக்கு வர மாட்டோம் என்றே
கருதிவிட்டாய்

ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி தள்ளி விட்டாய்.
ஆசிரியச் சமுதாயத்தையேஇழிவு படச் செய்து
விட்டாய்

கடமைகளை ஒழுங்காய் முடித்திட்டோம்
உரிமைகளை பெற்று சென்றிடவே
போராட்டக் குரல் ஒலித்திடவே
இயக்க்க் கொடிதனை ஏந்திடவே
வீறுநடையிட்டே வந்திட்டோம்.

வெற்றியின் விளைநிலம் சிறையே யாயினும்
அந்தச் சிறையை நிரப்பியே
வென்றிடுவோம்

சி.பிரபா.மாநில பொதுக்குழு உறுப்பினர். த.தொ.ஆ.கூட்டணி. நாகப்பட்டினம்

No comments:

Post a Comment