Pages

Friday, August 30, 2013

மாதவம்



மங்கையராய் பிறப்பதற்கே
நல் மாதவம் செய்திருக்க
வேண்டும்ம்மா

சாத்திரம் பேசியே சிறை பட்டு விடாமல்
சிறகை விரித்தே பறந்து விட்டாய்

பறக்க வேண்டும் என்று நீ 
நினைத்து விட்டபோது
எல்லைக்கோடு எல்லாம்
இடலாகுமா?

மகளிர் மசோதா 33 க்கே
முக்கிக் கொண்டு இருந்தால்
50 ஆவது எப்போது.?

நீ எண்ணிவிட்ட எண்ணங்களை எல்லாம்
எய்திடவே –இயக்கம்
போராட்டம் என்னும் போர்க்கொடியைத்
தந்து விட்டது

பெண்ணே. வெற்றி என்ற மகுடம் சூட்ட
நீ விரைந்தே வந்திடுவாய்
புறப்படுவாய் போர்களத்திற்கு.

சி.பிரபா.மாநில பொதுக்குழு உறுப்பினர். த.தொ.ஆ.கூட்டணி. நாகப்பட்டின

No comments:

Post a Comment