சென்னை தேர்ச்சி விகிதம் 94.61%... வெற்றியின் பின்னணியில் சிறப்புப் பயிற்றுனர் பாலாஜி!
|
Posted Date : 16:05 (31/05/2013)Last updated : 16:05 (31/05/2013)
பத்தாம் வகுப்புத் தேர்வில் வியத்தகு சாதனைகளில் ஒன்றாக, சென்னை வருவாய் மாவட்டம் 94.61 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல... சென்னைப் பள்ளிகளில் ஒன்றிரெண்டு பள்ளிகளே நூறு சதவீத தேர்ச்சி பெறுவது அசாதாரணம் என்ற நிலையில், இப்போது 15 பள்ளிகள் சென்டம் சாதித்திருப்பதும் புதிய வரலாறு.
கடந்த 20 ஆண்டுகால பள்ளிக் கல்வி வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது, இதன் பின்னணியில் சென்னை மேயர் சைதை துரைசாமியும், சிறப்புப் பயிற்றுனர் எஸ்.பாலாஜியும் இருந்திருக்கிறார்.
மதுரையில் தாசில்தாராக இருந்த பாலாஜி, கடந்த 20 ஆண்டுகளாக கல்விச்சேவையாற்றி வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்காக கல்வி அமைப்புகள் மூலம் நல்ல கல்வியைப் பெற வழிவகுத்துள்ளார். அவரது உறுதுணையுடன் கல்வி பெற்ற ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.
தாசில்தார் பாலாஜி பற்றி கேட்டறிந்த சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரை சென்னைக்கு அழைத்துவரும் முயற்சியில் இறங்கினார். பாலாஜியை ஓர் ஆண்டு ஆன் டெபுட்டேஷனில் சென்னையில் சிறப்புப் பயிற்றுனராக நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.
கடந்த ஆண்டு ஜூலையில் சிறப்புப் பயிற்றுனராகப் பொறுப்பேற்ற தாசில்தார் பாலாஜி, சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் கற்பித்தலில் அதிரடி மாற்றங்களையும், புதிய உத்திகளையும் கொண்டுவந்தார்.
அதன்படி, அரசு மாநகாரட்சிப் பள்ளிகளில் கற்றல் திறன் மிகுந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கும் தனித்தனியாக சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன.
அரசு அளித்த ஒரு காரை எடுத்துக்கொண்டு காலை 7 மணிக்கு கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்படும் பாலாஜி, அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று மாலை 6 மணிக்குத் திரும்புவார். தினமும் சில பள்ளிகளில் தானே சிறப்பு வகுப்புகளை நடத்துவார். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உத்திகளைச் சொல்லித் தருவதுடன், அவர்களைப் பின்னால் அமரவைத்துவிட்டு, தானே பாடங்களை நடத்தி, எப்படி நடத்த வேண்டும் என்பதை நேரடியாகச் சொல்லித் தருவார்.
மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்காக 15 பக்கங்கள் கொண்ட கையேடு ஒன்றை இவர் உருவாக்கினார். அதுவே மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
மாநகராட்சிப் பள்ளி மட்டுமின்றி, தனியார் பள்ளிகளும் பாலாஜி உருவாக்கியக் கையேட்டை மாணவர்கள் பயன்படுத்த வைத்ததால், அவர்களாலும் நல்ல ரிசல்ட் கொடுக்க முடிந்திருக்கிறது.
தற்போது மீண்டும் மதுரையில் பணியைத் தொடர்ந்துள்ள பாலாஜியிடம், சென்னைப் பள்ளிகளின் இந்தச் சாதனையில் அங்கம் வகித்தது குறித்து கேட்டபோது, "சென்னையில் ஓராண்டு காலம் சிறப்புப் பயிற்றுனாராகச் சிறப்பாக செயல்பட்டதற்கு சென்னை மேயரின் ஊக்கமும் ஆதரவும் மிக முக்கியக் காரணம்.
சமச்சீர் கல்வி தொடங்கி ஓராண்டுதான் ஆனதால், சிறப்பு புக்லெட் ஒன்றை மாணவர்களுக்காக உருவாக்கினேன். ஓராண்டுக்கான கேள்வித் தாள்கள் மட்டுமே கொண்டு கையேடு உருவாக்க முடியாது. எனவே, அனைத்துப் பாடங்களையும் முழுமையாக உள்வாங்கி, முக்கியக் கேள்விகளையும், அதற்கு எளிதாக விடையளிக்கும் வழிமுறைகளையும் சேர்த்தேன். அதனை சென்னைப் பள்ளிகளின் மாணவர்கள் பயன்படுத்தினர். அதுவே, தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற துணைபுரிந்தது.
சென்னை மாணவர்களின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. சனி, ஞாயிறுகளில் என் கெஸ்ட் ஹவுஸுக்கே பலர் வந்துவிடுவார்கள். சிறப்பு வகுப்புகளுக்குத் தவறாமல் கலந்துகொள்வார்கள். ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். இந்தக் கூட்டு முயற்சியால்தான் இத்தகைய வெற்றி சாத்தியமானது.
சென்னை மாணவர்கள் பலரும் திணரும் கணிதம், ஆங்கிலம் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தினேன். ஆங்கிலத்துக்கு 7 மணி நேரம் பேசி, ஒரு சிடியை உருவாக்கினேன். அதை அனைத்துப் பள்ளிகளுக்கு மேயர் கொண்டு சேர்த்தார். அதன்மூலம் ஆசிரியர்கள் எளிய முறையில் பாடங்களை நடத்தி, மாணவர்கள் புரிந்து படிப்பதற்கு உதவியாக இருந்தது.
ஒரு நிகழ்ச்சியில் சென்னைப் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில், என்னைப் பற்றி ஃபீட்பேக் தெரிந்துகொள்வதற்காக, மாணவர்களைக் கருத்துகூறச் சொன்னார் மேயர். அப்போது, பல மாணவர்கள் எழுந்து உற்சாகமாகப் பேசத் தொடங்கினர். நம் மாணவர்கள் அப்படி பேசுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பயங்கர ஆச்சரியம். அதில் ஒரு ஸ்டூடன்ட் ஸ்டேட் லெவல் மார்க் எடுப்பேன் என்று சொன்னார். அந்த மாணவர் இப்போது 491 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்ற செய்தி கேட்டபோது, என் பணியியில் நிறைவு அடைகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் பாலாஜி.
|
Todays Educational News
- - 7/1/2020
- தினம் ஒரு புத்தகம் -வீடில்லாப்புத்தகங்கள் - 3/30/2020
- ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் - 9/21/2019
- நவம்பர்- 2018 மாத பள்ளி நாள் காட்டி - 10/27/2018
- திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி - நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்... - 10/27/2018
கல்வி செய்தி
- EER primary and upper primary - Format - 2025
- நாளை RL விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை
- School Morning Prayer Activities - 16.04.2025
- 2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025...
- 10th Social Science - Public Exam April 2025 - Question And Answer
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
- பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது: இபிஎஸ் - Dinamani
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி மறுப்பு - News18 Tamil
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த குரியன் ஜோசப் - Maalaimalar
- திருநெல்வேலி: பென்சில் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவர் - பின்னணி என்ன? - BBC
- அண்ணாமலைக்கு புதிய பதவி: பாஜக இளைஞர் பிரிவின் தலைவராக நியமிக்க தேசிய தலைமை ஆலோசனை - Hindu Tamil Thisai
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
- NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் 12.04.2025 அன்று வெளியாக உள்ளது. - 4/11/2025
- DSE - Annual Exam Timetable 2025 - 4/3/2025
- CEO INCHARGE ORDERS - DATED 28.03.2025 - 4/2/2025
- DEO INCHARGE ORDERS - DATED 28.03.2025 - 4/2/2025
- NMMS Final Key Answer Released by DGE!!! - 4/2/2025
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
- பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
- இல்லம் தேடி கல்வி; பள்ளிக்கு செல்லாமல் கற்கத் தவறியதை கற்றுக்கொடுக்க உதவும்; அன்பில் மகேஷ் பேட்டி
- நவ.1-ம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடக்கம்; சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- கடந்த ஆண்டை விட பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரிப்பு
- கற்றலே வாழ்வுக்கு நலமளிக்கும்
தமிழ் முரசு செய்திகள்
Error loading feed.
தினகரன் முக்கிய செய்திகள் --
- ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
- விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் மாற்றம்
- ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே
- அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டி.ராஜா
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்
TEACHER TamilNadu
- Flash News - தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு. - 9/17/2018
- ஒரு நாள் ஊதியம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்க அனைத்து அரசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அரசாணை வெளியீடு. - 8/28/2018
- கேரளா வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு!* - 8/25/2018
- வேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை! - 8/17/2018
- முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார் (1924 - 2018) - 8/16/2018
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Error loading feed.
Dinamani
- புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கக் கவசம் அணிவிப்பு: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
- ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- அமெரிக்க ஓபன்: நடால் அதிர்ச்சித் தோல்வி!
- டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்!
- ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் பொறுப்பேற்பு
Daily Thanthi
Error loading feed.
கல்வி அஞ்சல்
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2025
- Classes 4 & 5 - 100 days challenge Assessment - மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்
- Last working day of AY 2024-2025, DEE Proceedings
- நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
- வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த DEE தகவல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Friday, May 31, 2013
BALAJI KEY PERSON FOR CHENNAI DISTRICT S.S.L.C. RESULTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment