Pages

Wednesday, December 05, 2012

புதிதாக தேர்வான 18,000 ஆசிரியர்களுக்கு 13ல் பணி நியமனம்-05-12-2012




சென்னை: கடந்த ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர், பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18,382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். 13ம் தேதி, இவர்களுக்கான பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி..டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்பட்டதாரிஆசிரியர் தேர்வும்டி..டி., தேர்வில் தேர்ச்சி பெற்றுமாநில பதிவுமூப்பு அடிப்படையில்இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர்எனமுதலில் தமிழக அரசு அறிவித்திருந்ததுபின்சென்னைஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி..டி., தேர்வுஒருதகுதித் தேர்வேஅதில்தேர்ச்சி பெறுபவர்களைபணி நியமனம்செய்வதற்குதனி வழிமுறைகளை உருவாக்கிஅமல்படுத்தவேண்டும்" என உத்தரவிடப்பட்டது.
இதனால்இறுதிப்பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது.அமைச்சர் தலைமையிலான குழுபுதியவிதிமுறைகளை உருவாக்கியதும்அதை அமல்படுத்தஅரசு உத்தரவிட்டதுஅதன்படிபிளஸ் 2, பட்டப்படிப்புபி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி எனஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்" மதிப்பெண்நிர்ணயித்துஅதன் அடிப்படையில்இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணிநீண்ட நாட்களாக நடந்துவந்தது.
பணிகள் முடிந்ததை அடுத்துஇறுதி தேர்வுப் பட்டியலைடி.ஆர்.பி., நேற்று வெளியிட்டதுஅதில், 18ஆயிரத்து, 382 பேர்இடம் பிடித்தனர்இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்பட்டதாரி ஆசிரியர்பணிக்கு, 8,718 பேரும்தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர்ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும்,குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில்தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்யமுடியவில்லை எனடி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள்டி.ஆர்.பி.,யின்http://trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில்இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளதுதேர்வு பெற்றவர்கள்பாடப்பிரிவைதேர்வு செய்துபதிவு எண்களைபதிவு செய்தால்இறுதி தேர்வுப் பட்டியலில்இடம் பெற்றுள்ளோமாஎன்பதை அறியலாம்.
அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்குபணி நியமனம் வழங்கும் விழாவை,விமரிசையாக நடத்தபள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுஅமாவாசை நாளான, 13ம் தேதிவிழாநடக்கும் எனவும்அதில்முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றுதேர்வு பெற்ற ஆசிரியர்களுக்குபணி நியமனஉத்தரவுகளை வழங்குவார் எனவும்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதிப் பட்டியல் வெளியான உடன்பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்" வழியாககலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும்விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறுபள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில்விழாவை நடத்திபணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால்,அதிகாரிகள் மின்னல் வேகத்தில்அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.
இதனிடையே, இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர்தேர்வு செய்யப்பட வேண்டும்;ஆனால், 9,664 பேர்தேர்வு பெற்றுள்ளனர்பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவைஆனால், 8,718பேர் மட்டுமேஇறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர்இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு,தகுதியானவர்கள் கிடைக்கவில்லை.
பல லட்சம் பேர் தேர்வு எழுதிய போதிலும்டி..டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்காததால்,இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாகதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment