Pages

Tuesday, August 28, 2012

RAPE CASE FILED AGAINST HEADMASTER

திண்டுக்கல் : ஆசிரியை கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் அசோக் நகரை சேர்ந்தவர் கோகிலப்பிரியா,33. பூலத்தூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியை. இவருக்கும், இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தமிழக ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகியும், பழம்புத்தூர் ஊராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருமான லாரன்சிடம், கோகிலப்பிரியா தெரிவித்துள்ளார். கடந்த, மே 4ம் தேதி, பிரச்னையைத் தீர்ப்பதாகக் கூறிய அவர், தன்னை கற்பழித்ததாக, திண்டுக்கல் ஜே.எம்.,2 கோர்ட்டில், கோகிலப்பிரியா மனுத்தாக்கல் செய்தார். புகார் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் லதா உத்தரவிட்டார். லாரன்ஸ் மீது இன்ஸ்பெக்டர் அனார்கலி வழக்குப் பதிவு செய்துள்ளார்.


2012
27
Aug
ஆசிரியை பலாத்காரம் : ஆசிரியர் மீது வழக்கு


திண்டுக்கல்: திண்டுக்கல் அசோக் நகரைச் சேர்ந்தவர் திருமலை கண்ணன். இவரது மனைவி கோகில பிரியா(33). தாண்டிக்குடி அருகேயுள்ள பூலத்தூர் அரசுப் பள்ளியில் ஆசிரியை. விவாகரத்து கேட்டு கணவன், மனைவி இருவரும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். குடும்பப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவரான திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடியைச் சேர்ந்த ஆசிரியர் லாரன்ஸ்(34) என்பவரை சந்தித்து உதவி கேட்க கோகிலவாணி சென்றாராம். கடந்த மே மாதம் 4ம் தேதி சென்றபோது ஆசிரியை கோகிலவாணியை லாரன்ஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கோகிலவாணியை, லாரன்ஸ் மிரட்டினாராம். லாரன்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோகிலப்பிரியா திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் லதா வழக்குப் பதிவு செய்ய திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இன்று ஆசிரியர் லாரன்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment