SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, June 19, 2013

IS ENGLISH MEDIUM IN GOVERNMENT SCHOOLS A BOON?

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி: கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமா?ஜூன் 18,2013,09:26 IST

எழுத்தின் அளவு :
சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்ட பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற விதத்தில், இடை நிற்றலை குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்; நான்கு ஜோடி இலவச சீருடைகள், இலவச நோட்டுப்புத்தகங்கள், சிறப்பு கல்வி உபகரணங்கள், புத்தகப்பை, ஜியோமெட்ரி பாக்ஸ் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புத்தகங்களை சுமந்து சென்று படிப்பதற்கு பதிலாகவும்; தேர்வு பயத்தினால், பள்ளியில் இடைநிற்றல் அதிகரிப்பதை தவிர்க்கும் வகையிலும், பருவமுறையில் கல்வி கற்பிக்கும் திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறை அமல்படுத்தி உள்ளது.தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி முறை மாற்றம், விலையில்லா பொருட்கள் வழங்கினாலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவில்லை.
ஏனெனில், குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை நாடி வருவதை கண்கூடாக பார்க்கலாம். ஆங்கில மொழிக்கல்வி என்பது இன்றியமையாததாக மாறியுள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கில வழியில் கல்வி பயிலும் வகையில், ஆங்கில வழிக்கல்வியினை கொண்டு வர அரசு திட்டமிட்டு, தற்போது அதை செயல்படுத்தி உள்ளது. அந்தந்த ஒன்றியங்களில் மாணவர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு முதல் வகுப்புகளில் இதைத் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் மாணவர்கள் விருப்பத்தினை கேட்டு, தமிழ் வழியில் படிக்க விரும்பினால், தமிழ் வழியிலும், ஆங்கில வழியில் படிக்க விரும்பினால் ஆங்கில வழியிலும் படிக்க வைக்கலாம் என அறிவுரைகளும் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன.
தாய்மொழியான தமிழ்மொழியில் கற்பது நல்லதா? ஆங்கிலத்தில் கற்பது நல்லதா? என பட்டிமன்றமே நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தமிழ் மொழிக்கு எதிராக ஆங்கில வழி கல்விமுறையை கொண்டு வந்துள்ளதாக நினைக்க வேண்டாம்; கால மாற்றத்திற்கு ஏற்றாற் போன்று, இம்முடிவை எடுக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.
வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆங்கில மொழி தெரிந்திருப்பது அத்தியாவசியமாகும். தாய்மொழியான தமிழ் தெரிந்திருப்பதுடன் மற்ற மொழியான ஆங்கிலமும் தெரிந்திருப்பது நல்லதுதான் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.
இக்கல்வி முறை கொண்டு வந்தாலும், அரசுப் பள்ளிகளில் முறையாக இதற்கென தனியாக ஆசிரியர்கள் நியமனம், வகுப்பறை கட்டங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டம் முறையாக செயல்படுகிறதா என கண்காணித்தால் மட்டுமே அரசுப்பள்ளிகளில் இம்முறை வெற்றி பெற செய்ய முடியும் என்பதே கல்வி ஆர்வலர்களின் கருத்தாகும்.
லெனின் பாரதி (தனியார் பொறியியல் கல்லூரி துணைப்பேராசிரியர்) :அரசுப் பள்ளிகளில் ஆங்கிலமும் பயிற்று மொழியாக இருக்கும் என்பது வரவேற்கதக்கது. உலகமயமாக்கப்பட்ட சமூகம், பொருளாதார சூழ்நிலையில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆங்கிலம் பொதுமொழியாக மாறியுள்ளது.
குறிப்பாக உலக தகவல் தொடர்புகள், வாணிபம் அனைத்தும் ஆங்கிலத்தின் மூலம் நடைபெறும் சூழ்நிலையில், இம்மொழி மூலம் பாடங்களை கற்பது அவசியமாகும். தாய்மொழி மூலம் கல்வி கற்பது என்பது மறுப்பு எதுவும் இல்லை. அதுதான் ஆரோக்கியமான கல்வியாகும் என்பதில் சந்தேகமில்லை.
அரசின் இந்த அறிவிப்பு இன்றைய சூழ்நிலையின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை. தற்போது அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளிகளும் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் மொழியாக பார்க்கும் பார்வை இல்லாமல் வெறும் மதிப்பெண் பெறும் பாடங்களாக மட்டும் பார்ப்பதால் சரியாக கற்க தவறுகின்றனர். இந்த நிலை மாற்றி தாய்மொழி வழியாகவும், ஆங்கிலம் வழியாகவும் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் திறனுடைய மாணவர்களை உருவாக்கினால் மட்டுமே இத்திட்டம் வெற்றி பெற முடியும். தாய்மொழி நமது அடித்தளம், ஆங்கிலம் நமது எதிர்காலம்.
அடித்தளத்தை பாதுகாத்துக் கொண்டே நமது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எனவே, ஆங்கில வழி கல்விமுறையை வரவேற்கலாம்.
ராஜா (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்): மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தாய் வழிக்கல்வியே சிறந்தது என அறிஞர்கள் சொல்வது மட்டுமல்ல; அனுபவம் உள்ளது.
இயற்கைக்கு முரணாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் ஆங்கிலத் திணிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழை இரண்டாம் பட்சமாக ஆக்கி வருகின்றனர். ஆங்கிலத்தில் படித்தால் தான் வேலைவாய்ப்பு, மேற்படிப்புகளுக்கும், பிறநாடுகளுக்கு செல்லும் போது தொடர்புக்கு என காரணங்கள் ஆங்கில வழிக்கு காரணமாக சொல்லப்படுகின்றன.
ஆனால் இவற்றில் எதுவும் உண்மையில்லை. ஆங்கில அறிவு படைத்த பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். உலகின் ஒரு சில நாடுகளை தவிர ஏனைய நாடுகளில் ஆங்கிலத்திற்கு வேலையே இல்லை.
மொழி என்பது பேச்சு மட்டுமல்ல; நம் மனிதர்களின் பண்பாடு, கலாசாரம் சம்பந்தப்பட்ட செயல். ஒரு மொழியின் அழிவு அந்த இன மக்களின் ஆன்மாவை அழிப்பது என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எப்போது புரியப்போகிறது என தெரியவில்லை. தாய்மொழியான தமிழ் வழி கல்வியே சிறந்தது.
வெற்றி வேல்செழியன், உடுமலை: தாய் மொழியில் கல்வியே சிறந்ததாகும். தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளிட்ட எந்தமொழி வேண்டுமென்றாலும் கற்கலாம். ஆனால், தாய்மொழியான தமிழ்மொழியிலேயே கற்றால் தான் சுயமாக சிந்திக்கும் திறன் மேம்படும். இங்கு படித்துச்செல்லும் மாணவர்களும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கே சென்று பணியாற்ற விரும்புகின்றனர். மற்ற மொழிகளை கற்றாலும், தாய்மொழி வழி கல்வியே சிறந்தது.
சதாசிவம், உடுமலை :அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறைக்கு வரவேற்கத்தக்கது. குறிப்பிட்ட பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைக்க முன்வர வேண்டும்.
கிறிஸ்துராஜ், உடுமலை: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமுறை வரவேற்கதக்கது. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளில் இம்முறையான கல்வி முறை கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
மேல்நிலை படிப்பு முடித்து கல்லூரி செல்லும் போது ஆங்கில மொழி அவசியமாகிறது. ஆங்கிலமொழி தெரியாவிட்டால், கல்லூரி படிப்பு படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆங்கிலம் கற்பது தற்போது இன்றியமையாததாக மாறி உள்ளது.
வினோதா, கோமங்கலம்புதூர்: பொள்ளாச்சியில் மொத்தம் உள்ள பள்ளிகளில், 20 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி கற்றல் அறிமுகமாகியுள்ளது. இத்திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தனியார், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களுக்கும் நம்பிக்கையளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
வைஷ்ணவி, ராசாக்காபாளையம்: ஆங்கில வழிக்கற்றல் முதல் வகுப்புகளில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளிலும் விரைவில் துவங்க வேண்டும். முன்னிருந்த ஆர்வத்தை காட்டிலும் தற்போது மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அதிக விருப்பம் காட்டுகின்றனர். இத்திட்டம் மக்களிடையேயும், மாணவர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர வேண்டும்.
பிரகாஷ், கிணத்துக்கடவு: ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் ஆங்கில வழியில் படிக்க முடியாத அளவிற்கு, கட்டணம் வசூலிக்கப்படுவதால், அவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இதுவரையிலும் இருந்து வந்தது. தற்போது, அரசு துவக்கப்பள்ளி முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை ஆங்கில வழி கல்வியை தமிழக அரசு துவக்கியுள்ளது வரவேற்கதக்க ஒன்று.
கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை துவங்க துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலுச்சாமி (உதவிப் பேராசிரியர்): அரசு கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வி திட்டத்தினால் ஏழை, எளிய மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவர். இதனால், மேலைநாடுகளில் உயர்பதவிகளை பெறவாய்ப்புள்ளது. குழந்தை பருவம் முதலே இந்த கல்வி முறை செயல்படுத்தப்படுவதால் எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறும். பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி மூலம் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அஸ்வதி (கல்லூரி மாணவி): வால்பாறை மலைப்பகுதியில் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். குறிப்பாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆங்கிலவழிக்கல்வி திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அவர்களின் கல்வித்தரம் உயரும்.
மனோகரன், மண்ணூர்: அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்தது மிகவும் வரவேற்கதக்கது. அதிகம் செலவழித்து தனியார் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாதவர்களுக்கு, இது நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். அரசின் இம்முயற்சி வெற்றிப்பெற, ஆங்கில வழிக்கல்விக்கென தனியாக, ஆங்கிலப்புலமை வாய்ந்த தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்.
தனியார் பள்ளிக்கு நிகராக, ஆங்கில வழிக்கல்வியில் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக, கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பயனடைவர்.
சுப்பிரமணியன் (ராமச்சந்திராபுரம்): அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. ஏழை, எளியவர்கள் புத்தகம், சீருடை, பள்ளிக் கட்டணம் ஆகியவற்றுக்கு அதிக பணம் செலவழித்து தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் ஆங்கில வழிக் கல்விக்காக நீண்ட தூரம் பயணம் செய்து நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அரசின் இந்த அறிவிப்பால் கிராமத்திலேயே ஆங்கில வழிக் கல்வியை பெற முடியும். இதனால், தனியார் பள்ளி மாணவர்களோடு, அரசு பள்ளி மாணவர்கள் போட்டி, போட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
பச்சையப்பன் (தாத்தூர்): அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தி உள்ளதால், கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் மிகுந்த பயனடைவர். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் எதிர்காலத்தில் வரும் போட்டியை சமாளிக்கவும், வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை போக்க முடியும்.
ஆங்கில வழிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தும் போது இக்கல்வி முறைக்கென தனியாக ஆசிரியர்களை நியமித்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
ஈஸ்வரன்; கல்விக்குழு உறுப்பினர் அனுப்பர்பாளையம் துவக்கப் பள்ளி: அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகமானது வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பலரும் திறமையானவர்களாக இருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது டி.இ.டி., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருப்பார்கள்.
இந்த ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்து கல்வி கற்பிக்க வேண்டும். இதன் மூலம் தனியாருக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயரும். இதனால் பெற்றோரும் ஆர்வத்துடன் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.
கிருஷ்ணகுமார்; தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்: பொதுவாக நம் மாணவர்களுக்கு கம்யூனிக்கேஷன் ஸ்கில் குறைவாக உள்ளது. அதனால் திறமையிருந்தும் நம் மாணவர்களால் சாதிக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். திறமையையும், மொழியாற்றலையும் கொண்டு வருவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
இது வரவேற்கத்தக்கது. இதே போல் இந்தி மொழியையும் உட்புகுத்த வேண்டும். அப்போது தமிழகம் தன்னிகரில்லா மாநிலமாக உயரும்.
ஆனந்தி, மண்ணூர்: அரசுப் பள்ளியில் ஆங்கிலக் கல்வியின் வருகையால், இனி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அடித்தட்டு மக்கள் கூட, தங்களுடைய பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் அரசுப் பள்ளியில் சேர்ப்பர்.
வருமானத்தில் பெரும்பங்கை, பிள்ளைகளின் கல்விக்கே ஒதுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், அரசு ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வந்ததால், வீட்டின் பொருளாதாரமும் சற்று மேம்படும்

DROP OUT STUDENTS DATA IN ONLINE

TET APPLICATION SALES DISTURBS GOVERNMENT SCHOOL FUNCTIONING

Tuesday, June 18, 2013

DEMAND FOR EXEMPTING WORKING TEACHERS FROM TET

STUDENTS AGAINST PRIMARY SCHOOL HM

தலைமை ஆசிரியரை கண்டித்து கோயிலில் மாணவர்கள் தஞ்சம்


ஆலங்குளம்: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தில் நெல்லை திருமண்டல நிர்வாகத்துக்கு உட்பட்ட டிடிடிஏ துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து 10ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக பால்ராஜ் என்பவர் பொறுப்பேற்றார். பள்ளியில் 4, 5ம் வகுப்புக்கு அவர் பாடம் எடுக்க வேண்டும். ஆனால் பொறுப்பேற்றதில் இருந்து அவர் வகுப்புக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி 4, 5ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, அருகிலுள்ள கோயிலில் தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு ஆதரவாக பிற வகுப்பு மாணவர்களும் கோயிலுக்கு சென்றனர். இதனால் பணிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “புதிதாக நியமிக்கப்பட்ட  தலைமையாசி ரியர் சரியாக பள்ளிக்கு வந்து பாடம் எடுப்பதில்லை. காலையில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே சென்று விடுகிறார். மாலையில்  மீண்டும் வந்து கையெழுத்து போடுகிறார். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வரை குழந்தை களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்“ என்றனர். இதுகுறித்து தகவலறிந்த விகேபுதூர் போலீ சார் வந்து பேச்சு நடத்தினர். இது குறித்து ஆலங்குளம் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 

REAL STATUS OF GOVERNMENT SCHOOL TEACHERS

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
Posted Date : 08:06 (15/06/2013)Last updated : 10:06 (15/06/2013)
பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!

சமீபத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டேன். 'அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.

அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா? அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்?

அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா? அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்!

ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில்கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா? அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா? அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்?

நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்; சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே? இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?

அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா?

தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்? ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும்

குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே!

தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா?

காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து, வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும், அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையாவது அறிந்ததுண்டா?

வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனரே... அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா?

பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்பதையாவது அறிவார்களா?

கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதே இடிப்பது, செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது, தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்?

அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை? பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்?

இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual  imprisonment)-க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர். அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.

- டாரத்தி

SFI AGITATION AGAINST PRIVATE SCHOOL FEES HIKE

Monday, June 17, 2013

ONLY FEMALE TEACHERS IN GIRLS SCHOOL....IS IT A SOLUTION?

பெண்கள் பள்ளிக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே... தேவையா இந்த அரசு ஆணை?
Posted Date : 12:06 (09/06/2013)Last updated : 12:06 (09/06/2013)
அரசாணை (1டி) எண்.129, பள்ளிக்கல்வித்துறை, நாள் 09.05.2013-ல் கீழ்க்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது:-

"15) 2013 -14 ஆம் கல்வி ஆண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பாணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலைப்பணியிடங்களுக்கு பொது மறுதல் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். தற்போது பணிபுரியும் ஆசிரியர்/ தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது"

பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசு ஆணையில் மேற்கண்ட திருத்தத்தை வெளியிட்டுள்ளது.பெண்கள் பள்ளியில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர்கள், பெண் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்திற்கு எவ்வித காரணமும் கூறப்படவில்லை. ஆனால் ஊடகங்கள் கூறும் காரணம் பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்களால் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்கவே இத்தகைய ஆணை என்பதாக இருக்கிறது. அதுதான் உண்மையான காரணம் என்றால், நம் கல்வி முறை எங்கே செல்கிறது? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டியது ஒவ்வொரு கல்வியாளரின் கடமையாகும்.

பெண்கள் பள்ளிக்கு பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிப்பதால் பாலியல் வன்கொடுமைகள் தீர்ந்துவிடுமா? வயிற்று வலி வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறியாமல் வலி நிவாரண மாத்திரை உண்பதைப்போல் உள்ளது இந்த ஆணை. எந்த ஒரு பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் அதன் மூல காரணத்தை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பள்ளிகளில் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று பிரிப்பதே இந்த பிரச்னைகளுக்கான மூல காரணம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆண், பெண் என்று பாலியல் பாகுபாடு கற்பிக்கப்பட்டு அவர்களைப் பிரித்து வைத்து வளர்ப்பதே தவறு. இவ்வாறு செய்வதன் மூலம் பால்வேறுபாடு கற்பிக்கப்படுவதோடு எதிர் பாலின் மீது ஒரு இனம்புரியத ஈர்ப்பு ஏற்படுகிறது. போலி ஒழுக்க நெறிகளால் மனத்துக்குள் அமுக்கப்படும் இந்த கவர்ச்சி உணர்வுகளே, ஒழுக்க நெறிகளை மீறச் செய்வதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.  

நம் கல்வி முறை இன்றும் ஆதிக்க சக்திகளுக்குத் தேவையான கூலிகளை உருவாக்குவதாகவே உள்ளது. சமூகத்துக்கு பயன்படக்கூடிய மனிதர்களை உருவாக்குவதாக இல்லை. இதையெல்லாம் சிந்தித்து நம் நாட்டு பண்பாட்டுச் சூழலுக்கேற்ற ஒரு கல்விமுறையை உருவாக்கி நம்மிடமுள்ள மனித வளத்தை நாம் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும்.

இன்றைய ஆசிரியர்களை நேற்றைய பள்ளிகள்தான் உருவக்கித் தந்திருக்கின்றன. நாம் உருவாக்கிய மாணவர்கள்தான் ஆசிரியர்களாகி இத்தகைய பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். இதற்கு யார் பொறுப்பேற்பது? பெண் என்பவள் ஆணுக்குக் கீழானவள் என்பதை குடும்பம், பள்ளி, சமூகம் என அனைத்துத்தரப்பும் சேர்ந்தே நம் குழந்தைகளுக்குக் காலகாலமாகக் கற்பித்து வருகின்றன. குடும்பத்தில் அப்பாதான் எல்லாம், அம்மா இரண்டாம் நிலைதான்.பள்ளி பாடநூலிலும் அப்பாதான் செய்தித்தாள் படிப்பார் அம்மா வீட்டைப் பெருக்குவார். சமூகத்திலும் பெண்களின் நிலை இன்று வரை முற்றிலும் மாறிவில்லை. என்றாலும் மெல்ல மாறுவதற்கான சூழள் உருவாகிவருகிறது. இந்நிலையில் இதுபோன்ற பால்பாகுபாடுகளை மீண்டும் கடைபிடிக்கத் தொடங்கினால்  பழய நிலைக்கே மனித சமூகம் திரும்பும்.  

எனவே பாலியல் வன்கொடுமைகள் மிகுதியாக சமுகத்தில் நிகழ நம் கல்வி முறையும் ஒரு காரணம். பாலியல் கல்வி நம் நாட்டிற்குத் தேவை என்பதை நாம் ஏதோ ஒழுக்கக்கேடானது எனக் கருதுகிறோம். இது ஒரு புறமிருக்க ஏதோ ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்ததற்காக இப்படி ஒரு ஆணையை வெளியிட்டு ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சமூகத்தையே இழிவு படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

பாலியல் வன்கொடுமைச்செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.  அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால் இப்படி ஒரு ஆணை தேவையில்லை.

- இரத்தின புகழேந்தி