SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, November 30, 2014

அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்

அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்

அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; இப்படி அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் சென்னையில் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
மாணவர் எண்ணிக்கை சரிவு
தமிழகத்தில் 1978-ல் மெட்ரிக் பள்ளி துவக்கிட மாநில அரசு அனுமதி அளித்தது. 2001-ல் 2983 மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439 மாணவர்கள் இருந்தனர். 2014ல் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 11,462 ஆக உயர்ந்து, மாணவர்கள் எண்ணிக்கை 36,17,473 அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 13 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. 2013-2014ல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 87,68,231. தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 36,17,473. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
மாணவர் சேர்க்கை - ஆரம்பக்கல்வி (2012-13 - மானியக்கோரிக்கை அறிக்கையில் அளிக்கப்பட்ட விபரம் - லட்சங்களில்)
ஆரம்பப்பள்ளி
1-5 வகுப்புகள் 2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 குறைவு/அதிகம்
அரசு பள்ளிகளில் 43.67 40.75 38.56 37.75 36.58 -7.09ரூ புள்ளிகள்
அரசு உதவி பெறும் பள்ளிகள் 21.83 20.95 20.24 19.83 17.99 -3.84ரூ புள்ளிகள்
தனியார் பள்ளிகள் 34.5 38.3 41.18 42.92 45.4 +10.9ரூ புள்ளிகள்
நடுநிலைப்பள்ளி
6-8 வகுப்புகள் 2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 குறைவு/அதிகம்
அரசு பள்ளிகளில் 50.46 47.68 46.77 40.36 45.03 - 5.43 ரூ
உதவி பெறும் பள்ளிகள் 29.03 28.30 28.21 28.04 26.45 - 2.58 ரூ
தனியார் பள்ளிகள் 20.52 24.02 25.02 25.61 28.50 + 7.98 ரூ
மேற்கண்ட சரிவை சரி செய்து விட்டதாக மாநில அரசின் கல்வி மானியக்கோரிக்கை அறிக்கை கூறியது. ஆனால், நிலைமை வேறானது.
1000 அரசுப் பள்ளிகள் மூடல்
கடந்தாண்டும், இந்தாண்டும் (2013-2014, 2014-2015) மானியக்கோரிக்கை அறிக்கையின்படியே அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 55,774 குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1000 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தொடர்ச்சியாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கும், இதையொட்டி ஒருபகுதி பள்ளிகள் மூடப்படுவதற்கும் காரணங்கள் என்ன ?
காரணம் என்ன?
அரசுப் பள்ளிகளில் கழிப்பிடம், குடிநீர், பரிசோதனைக்கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் இல்லாதது; கல்வித்தரம் உயராதது; ஆசிரியர் பற்றாக்குறை, அரசுப்பள்ளிகளை ஊக்குவிக்க அரசு தலையீடு இல்லாதது; இவற்றால் கற்பித்தலில் உள்ள குறைபாடு போன்ற காரணங்களினால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மூடக்கூடிய நிலைக்கு சென்று விடுகின்றது. இதனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழை குடும்பங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
ஆங்கில வழிக்கல்வி தீர்வல்ல
ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை தக்க வைப்பதோடு, எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க முடியும் என அரசு கருதுகிறது. இது தவறான முடிவு. இன்றைய சூழலில் ஆங்கில மொழி கற்பது அவசியம். மாணவர்களுக்கு ஆங்கிலத்தை சரியாகக் கற்பிப்பதற்கு திட்டமிட வேண்டும்.
ஆனால், தாய்மொழி கல்வியே சிறந்தது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகு, அரசுப்பள்ளிகளை பாதுகாக்க சரியான காரணங்களை கண்டறிவதற்குப் பதிலாக, ஆங்கில வழிக்கல்வியை தீர்வாக முன்மொழிவதும், அறிமுகப்படுத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல.
ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்?
அரசுப்பள்ளிகள் மூடப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் எங்கே போவார்கள்? உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உள்ள வேளாண் பண்ணை, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கூத்தப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி வலசு, குப்பண்ண வலசல், புளியம்பட்டி, குருவப்ப நாயக்கன் வலசல் போன்ற கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன. இக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, வேளாண் பண்ணை கிராமத்தில் உள்ள பளியர் என்ற மலைவாழ் இனத்தைச் சார்ந்த ஏழைக்குழந்தைகள் அங்கிருந்த அரசுப்பள்ளி மூடப்பட்ட பிறகு, அவர்களின் கல்வி தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்திலும் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்ய இயலவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. சுமார் 140 பள்ளிகளில் 20-க்கும் குறைவாகவே மாணவர்கள் தற்போது உள்ளனர். தொடர்ச்சியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து இந்த நிலையை இந்தப்பள்ளிகள் அடைந்துள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்பள்ளிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது.
மழலையர் பள்ளி துவங்குக!
அரசுப்பள்ளிகளை பாதுகாத்து, ஏழை, எளிய குடும்பங்களைக் சார்ந்த குழந்தைகளுடைய பள்ளிக்கல்விக்கு உத்தரவாதம் செய்திட மாநில அரசு திட்டமிட வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாவதற்கு அங்கு மழலையர் பள்ளிகளில் துவங்கி, தொடர்ச்சியாக குழந்தைகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள். எனவே, அரசே மழலையர் பள்ளிகள் துவங்கி நடத்திட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைக்க முடியும்.

GOVERNMENT SCHOOLS PRIVATISATION


அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்
சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம் அறைகூவல்
சென்னை, நவ. 29-
தமிழகத்தில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட, அரசே மழலையர் பள்ளிகளைத் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்தியது.‘அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம், அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வோம்’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் சனிக்கிழமை சென்னையில் மாபெரும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தலைமையேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார்.



கல்விக்கு அரசே பொறுப்பு
அனைவருக்கும் தரமான கல்வி, சமமான கல்வி அளிக்காமல் நாடு வளராது. மக்கள் வாழ்க்கைத்தரம் உயராது. ஏழ்மை ஒழியாது. “அனைவருக்கும் கல்வி, வேலை” என்பதை ஆட்சியாளர் களும் முன்வைத்து அவ்வப்போது முழக்கமிடுகிறார்கள். ஆனால் நடப்பது என்ன? சரியான முழக்கத்தை முன்வைத்தால் மட்டும் போதாது. ஆள்வோர் உறுதியான திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.
உண்மையாக அதைஅமலாக்கிட வேண்டும். அரசுக்குத் தான் கல்வி அளிக்கும் பொறுப்பு உள்ளது. அரசுப்பள்ளிகள் மூலமாகத்தான் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி அளிக்க முடியும். ஒருபுறத்தில் சுயநிதி தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் ஒரு அரசு, அரசுப்பள்ளிகளை பாதுகாக்க முடியுமா? என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
இக்கருத்தரங்கில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ம.ப.விஜயகுமார், தமுஎகச கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன், கல்வியாளர் பேராசிரியர் ச.மாடசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.



அரசு செய்ய வேண்டியது என்ன?
இக்கருத்தரங்கில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட ; தாய்மொழி பயிற்று மொழியாக தொடர ஊக்குவித்திட வேண்டும்; ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு தேவை; அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும்; மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்; கல்வித்தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும் ; வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும்; ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்;
மாநிலஅரசு உரிய நிதியை ஒதுக்கிட வேண்டும் ; பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும்; மத்திய கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும். இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்ப்பந்தித்து பெற வேண்டும் என்பன போன்ற நடவடிக்கைகளை எடுத்து அரசுப்பள்ளிகளை பாதுகாத்து ஏழை, எளிய, நடுத்தர குடும்பங் களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வியை உத்தரவாதப்படுத்திட வேண்டுமென இக்கருத்தரங்கம் மாநில அரசை வலியுறுத்துகிறது.




தனியார் லாப வெறியை தடுத்து நிறுத்துக!
ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டு, அரசுப்பள்ளிகளை காவு கேட்கும் பல்வகை தனியார் பள்ளிகளின் வணிக மயத்தையும், லாப வெறியையும் தடுத்து நிறுத்தி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிப்பதை உத்தரவாதப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டின் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய அரசுப்பள்ளிகள் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கின் றன.




இத்தருணத்தில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், கல்விப்பற்றும் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அரசுப்பள்ளிகளை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் முன்வர வேண்டும் என இச்சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

Sunday, November 23, 2014

வருமான வரி உச்சவரம்பு உயர வாய்ப்பு சம்பளதாரர்களுக்கு வரிச்சுமை ஏற்படுத்த விரும்பவில்லை

4 மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்பு மாணவர்களின் விவரம் சேகரிப்பு பயிற்சி முகாம்

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு

திருப்பூர்: குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. துவக்கப் பள்ளிகள், நடு நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், படிப்பில் பின்தங்கியவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டமாக, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 1,164 அரசு பள்ளிகள் மற்றும் 62 அரசு உதவிபெறும் பள்ளிகள் என 1,226 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 14 ஒன்றியங்களில் குறிப்பிட்ட பள்ளிகளை மட்டும் தேர்வுசெய்து நடத்தப்பட்ட இத்தேர்வில், 60 முதல் 70 சதவீதம் வரை, வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.
அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், போதிய பயிற்சி அளிக்க, திருப்பூர், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில், ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்புற மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
பல குழந்தைகளின் பெற்றோர், வெளி மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களாக இருப்பதால், அடிக்கடி வசிப்பிட மாற்றம் அவர்களின் கல்வியை பாதிக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது, படிப்பை விட்டு கவனம் சிதறுகிறது. நெருக்கடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள அமைதியற்ற வாழ்விட சூழலால், வீடுகளில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர்.
சினிமா நடிகர்கள் மீதான ஆர்வம், டிவி பார்க்கும் பழக்கம், கிரிக்கெட் போன்றவற்றில் இருக்கும் அபரிமிதமான ஆர்வம், படிப்பில் மாணவர்களின் கவனத்தை குறைத்து விடுகிறது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், மாணவர்களை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லும் மனநிலை, சில ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜாமணி கூறுகையில், "வாசிப்பு திறன் குறைந்த மாணவர்களுக்கு, பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையான ஈடுபாட்டுடனும், மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையோடும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

Tell the facts to the students

DIRECT PAYMENT CANCELLED IN CHENNAI AIDED SCHOOL

YOGA WILL BE MADE COMPULSORY IN SCHOOLS

Friday, November 21, 2014

அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை

அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை


கோவை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் லேப்டாப்க்கு சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு, கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு வண்ண பென்சில், அட்லஸ், கணித உபகரணங்கள், காலணி, லேப்டாப் உட்பட, 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இலவச லேப்டாப்க்கு ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், தமிழக பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆனால், 95 சதவீத மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் அதன் பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சிகள் இல்லை. பெரும்பாலான பெற்றோர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இன்மையால், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக விற்பனை செய்கின்றனர்.
லேப்டாப், 5000 முதல் 8000 ரூபாய் வரை சந்தையில் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்லூரியில் பயிலும் மாணவர்கள், விலை கொடுத்து வாங்க அலைமோதி வருகின்றனர். கேரளா மாணவர்கள் இலவச லேப்டாப்களை வாங்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
லேப்டாப் விற்பனை செய்யப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, ’லேப்டாப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரி களில் பாடம் கற்பிக்க வேண்டும்; மாணவர்களுக்கு லேப்டாப் பயன்படுத்தி பாடத்திட்டம் சார்ந்த பணிகள் வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.
ஆனால், இலவச லேப்டாப் மாணவர்கள் பள்ளியை முடித்து சென்ற பிறகும், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்து சென்ற மாணவர்களையும் அழைத்து வழங்கும் அளவுக்கு கால தாமதமாக வழங்குவதால், வகுப்பறையில் லேப்டாப் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால், தாமதமாக வழங்கப்படும் லேப்டாப் மாணவர்களுக்கு கிடைத்த சில நாட்களிலேயே, விற்பனைக்கு சந்தைக்கு வந்துவிடுகின்றது. சில கல்லூரி மாணவர்களே, லேப்டாப் விற்பனை சந்தையில் புரோக்கர்களாக செயல்படுகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ’லேப்டாப் உரிய நேரத்தில் கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்க முடியும். ஆனால், மிகுந்த காலதாமத்ததுடன் கிடைப்பதால், இதுகுறித்து அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்த இயலவில்லை.
மேலும், பள்ளி முடித்து செல்லும் அனைத்து மாணவர்களும், தனது கல்விக்காக லேப்டாப் பயன்படுத்துகின்றனரா அல்லது விற்பனை செய்கின்றனரா என்பதை கண்காணிப்பது இயலாத காரியம். பிளஸ்2 மாணவர்களுக்கு பதிலாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கினால், தொழில்நுட்ப பயிற்சி இரண்டு ஆண்டுகள் வழங்கலாம். விற்பனை செய்வதையும் எளிதாக தவிர்க்கலாம்’ என்றனர்.

DONT COLLECT MONEY FROM STUDENTS

தமிழக அரசு அறிவிப்பு 2015ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள்

Wednesday, November 19, 2014

ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!

ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!

கோவை: ஆபாச வலைதளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அடிமைகளாகி வருவதாக, ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி எண்ணற்றோருக்கு சாதகமாக இருந்தாலும், பெரும்பாலோனோருக்கு பாதகமாக உள்ளது. இணையதளங்களில் மட்டுமல்லாமல், ஐ பாட், மொபைல்போன் உள்ளிட்ட வடிவங்களில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் நிலவுகிறது.
இதனால் இளைய தலைமுறையினர் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர். பள்ளி பருவ மாணவர்களும் ஆபாசப்படங்களை பார்ப்பதில் ஆர்வம் செலுத்தி வருவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கோவை டவுன்ஹால் பகுதியில் பள்ளி சீருடையில் இருந்த நான்கு மாணவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல், பிரவுசிங் சென்டரில் அமர்ந்திருந்தனர். அருகில், அமர்ந்த முதியவர் ஒருவர் மாணவர்களை கண்காணித்ததில், ஆபாச வலைதளங்களை பார்த்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
அம்மாணவர்களை அழைத்து, கண்டித்ததுடன் பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நோக்கில், பிரவுசிங் சென்டர் வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. பெரும்பாலான நடுத்தர மற்றும் உயர்தர பெற்றோர்கள், மாணவர்களுக்கு பள்ளி பருவத்தில் வாங்கி பரிசளிக்கும் மொபைல் போன், லேப்-டாப் போன்றவை மாணவர் களை எளிதில் ஆபாச வலைதளங்களுக்கு அடிமைகளாக்கி விடுகின்றன.
இதுபோன்ற, விஷயங்களில் மாணவர்களின் கவனம் செல்வதால், படிப்பில் கவனம் சிதறி, தடுமாறும் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சமூகத்தில், வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. ஆபாச வலைதளங்களை முடக்க ஆலோசித்து வரும் மத்திய அரசு இதுகுறித்த முடிவை உடனடியாக மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறுகையில், "இன்றைய தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற விஷயங்களை பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதலே மாணவர்கள் இதுபோன்ற விஷயங்களுக்கு அடிமைகளாகி விடுகின்றனர். பாடத்திட்டம் வாயிலாக விழிப்புணர்வு அவசியம்.
மேலும், புத்தகம் வாசித்தல், விளையாட்டு போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவது இதுபோன்ற தவறுகளிலிருந்து விலகிவைக்க உதவும். பெற்றோர்கள், பணம் ஈட்டுவதை குறிக்கோளாக கொள்ளாமல் பிள்ளைகளை நண்பர்களாக பாவித்து, அவர்களது மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து, உரிய தீர்வு காண்பது அவசியம்" என்றார்.

BEWARE :DONT ALLOW STUDENTS TO USE SAFETY PINS

திருச்சி,40 மாணவ, மாணவிகள் காயம்

Tuesday, November 11, 2014

நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி!  நன்றி!!
மயிலாடுதுறை ஒன்றியத்தில் மாப்படுகை திருமங்கலம் காளி கேசிங்கன் மணல்மேடு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மயிலாடுதுறை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரால் முறைகேடாக வழங்கப்பட்டிருந்த மாற்றுப்பணி உத்தரவுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டக்கிளை விடுத்த  கோரிக்கையையும் போராட்ட அறிவிப்பையும் அடுத்து ரத்து செய்ய உத்தரவிட்ட நாகை மாவட்டத் தொடக்க க்கல்வி அலுவலர் திருமதி.சா.நில ஒளி அவர்களுக்கு நாகை மாவட்டக்கிளை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

      மீதமுள்ள ஒரு மாற்றுப்பணி உத்தரவையும் இன்று ரத்து செய்வதாகவும் உறுதியளித்தள்ளமைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தினகரன் செய்தி-11.11.14மயிலாடுதுறை உதவி தொடக்கக்கல்வி அலுவலக நிர்வாக குறைபாடு கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி

Saturday, November 08, 2014

Friday, November 07, 2014

What about other government offices? But this school is compensating on saturday.

அரசுப்பள்ளியில 5 வயசு முடிஞ்சு போய் புள்ளைங்கள தேடுனா எங்க கிடைக்கும்? வீட்டில வெறும் பாட்டிங்க தான் இருக்கு

விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள்

First Published : 05 November 2014 12:52 PM IST
கோவை நகரிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்துவதாகவும், கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது. தற்போது அந்நிலை மாறி, தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் (ஐசிஎஸ்இ) கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தவிர, இப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ள நகரமாக கோவை மாவட்டம் உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 275-க்கு மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்களின் கீழ் 50-க்கு மேற்பட்ட பள்ளிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
"சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்படுவார்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான முதற்கட்டப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
"தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கோவையில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கும் வகையில் தற்போது விண்ணப்பங்களை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தின் கீழ் அல்லாமல் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகவும், எல்கேஜி வகுப்புக்கு கல்விக் கட்டணம், நன்கொடை என சுமார் ரூ. 1 லட்சம் வரை வசூல் செய்வதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள்: அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய விதிகளின்படி, பள்ளிகளுக்கு முதல் வகுப்பில் இருந்து 12- ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த மட்டுமே இணைப்பு வழங்கப்படுகிறது.
சிபிஎஸ்இ விதிமுறைகள் இவ்வாறிருக்க, எல்கேஜி, யுகேஜி போன்ற மழலையர் வகுப்புகளுக்கு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை என்பது, அந்த வருடத்தின் தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதே நேரத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து தான் வகுப்புகளை நடத்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு எந்த அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இயக்குநர் விளக்கம்: இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, "சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்

Thursday, November 06, 2014

தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு......

 அனைவருக்கும் கல்வி இயக்க பராமரிப்பு நிதியை பள்ளியை துாய்மைபடுத்த பயன்படுத்திக்கொள்ளலாம்

Wednesday, November 05, 2014

அனைத்து சென்னை பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை

அனைத்து சென்னை பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை

  
சென்னை மாநகராட்சி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
துளிர் மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி கல்வித்துறை இணைந்து கொளத்தூர் மாநக ராட்சி பள்ளியில் பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந் தைகள் தங்களை பாது காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். கல்வித்துறை அலுவலர் பேரின்பராஜ், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மாநகராட்சி கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
இந்திய அரசு தேசிய அளவில் நடத்திய ஆய்வு ஒன்றில் 53.22 சதவீத குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
நவம்பர் 19-ம் தேதி உலக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் 284 பள்ளிகளிலும், குழந்தைகள் பாலியல் வன்கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டோம்.
இந்நிகழ்ச்சியை கொளத்தூர் பள்ளியில் தொடங்கியுள்ளோம். மற்ற பள்ளிகளில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவர் என்றார் அவர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து துளிர் நிறுவனத்தின் திட்ட மேலாளர் நான்சி கூறியதாவது: குழந்தைகள் பாதுகாப்பின்மையை உணரும்போது அவர்களின் மற்ற உரிமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. அது அக்குழந்தையை மட்டுமல்லாது சமுதாயத்தையே பாதிக்கக் கூடியதாக இருக்கும். குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை பள்ளிகளிலேயே செலவிடுகின்றனர். எனவே பள்ளிகளே குழந்தை பாதுகாப்புக்கான முன்னோடி இடமாகும்.
குழந்தைகளுக்கு பொதுவான பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுப்பதைப் போல ‘குழந்தைகள் பாலியல் வன்முறை’ குறித்த விழிப்புணர்வுகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இம்மாதிரியான கற்றல் நிகழ்வுகள் குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பை வளர்த்துக் கொள்வதுடன், எந்தச் சூழ்நிலைகளிலும் கவனமாக இருக்கவும், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

ஜெ.கு.லிஸ்பன் குமார்
COMMENT (1)   ·   PRINT   ·   T+  
கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கின்றனர்.
பள்ளிகளை ஆய்வு செய்வது, மாணவர்களின் கல்வி நிலை மற்றும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், ஆசிரியர்களின் சம்பளம், அட்வான்ஸ், லோன் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது, பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎஃப்), பங்களிப்பு ஓய்வூதிய நிதி (சிபிஎஃப்) மற்றும் ஓய்வூதிய கணக்கு வழக்குகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்கிறார்கள்.
உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனத்தில் 60 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 40 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
இப்பணிக்கு முன்பு 100 சதவீதமும் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. நேரடி நியமன முறை கடந்த 2009-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கு நேரடியாக 67 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2-வது நேரடி நியமனம் 2012-ம்ஆண்டு 34 பேர் (2010-2011-ம் ஆண்டுக்கான காலியிடங்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நேரடி நியமனம் நடைபெறவில்லை. இதனால், பிஎட் பட்டதாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். 2011-2012, 2012-2013, 2013-2014 என 3 கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டையும் (2014-2014) சேர்த்தால் 4 ஆண்டுகள் ஆகிவிடும்.
பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல் என வெவ்வேறு பாடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பிட்ட பாடத்தில் பிஏ அல்லது பிஎஸ்சி பட்டப் படிப்புடன் பிஎட் பட்டம் பெற்றிருப்பவர்கள் தேர்வெழுதலாம்.
வயது 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மட்டும் 40 வயது வரை அனுமதிக்கப்படுகிறார்கள். 4 கல்வி ஆண்டுகளுக்குரிய நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

பள்ளித் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரிக்கை-DINAMANI NEWS

பள்ளித் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரிக்கை

First Published : 05 November 2014 04:05 AM IST
நாகை ஊராட்சி ஒன்றியப் பள்ளித் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அலுவலர்களுக்கு அனுப்பிய கோரிக்கை
மனு: நாகை ஒன்றியத்தில் 27 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளும், 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், 18 பள்ளிகளில் மட்டுமே துப்புரவுப்
பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 150-ல் ரூ. 30 குடும்பநல நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு ரூ. 120 மட்டுமே வழங்கப்படுகிறது. இதுவும் கடந்த 20
மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால், மன உளைச்சலுக்குள்ளான துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பணியை மேற்கொள்ள மறுப்பதோடு, போராடும்
மனநிலையிலும் உள்ளனர்.
நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து உரிய காலத்தில் இவர்களின் ஊதியப் பட்டியலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பாததே துப்புரவுப்
பணியாளர்களின் ஊதியப் பிரச்னைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, துப்புரவுப்
பணியாளர்களின் ஊதிய நிலுவையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், துப்புரவுப் பணியாளர்களுடன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்

Monday, November 03, 2014

நாகை ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 20 மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை

நாகை ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 20 மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை
·         JhŒikahd பாரதம் என்ற கோஷத்தை நமது பாரதப்பிரதமர் முன்வைத்துள்ள நிலையில் நாகை ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 20 மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை.

·         நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும் 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுமாக கூடுதல் 36 பள்ளிகள் உள்ளன. . இவற்றில் 18 பள்ளிகளில் மட்டுமே கூட்டுநர்கள் உள்ளனர். மீதமுள்ள 18 பள்ளிகளில் கூட்டுநர் பணியிடம் காலியாக உள்ளது.

·         நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் இந்தப்பள்ளி கூட்டுநர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாதம் ஒன்றுக்கு வெறும் ரூபாய் 150 மட்டுமே. இதில் ரூபாய் 30 குடும்பநலநிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. கையில் கிடைப்பது ரூபாய் 120 மட்டுமே. ஒரு நாளைக்கு ரூபாய் 4 மட்டுமே. இன்று ஒரு தேநீரின் விலையே ரூபாய் 7 ஆகிவிட்டது. இந்த ஊதியேமே 20 மாதங்களாக வழங்கப்படவில்லை. கீழ்வேளுர் ஒன்றியத்தில் மாத ஊதியம் ரூபாய் 350 வழங்கப்படுகிறது.

·          
·         ன்படி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஊராட்சி மன்றத்தலைவரும் துப்புரவு பணியாளர்களை பள்ளிகளை சுத்தம் செய்ய அனுப்புவதில்லை.
·         ன்படி எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு முழுவதும் பள்ளியை சுத்தப்படுத்த இந்த பராமரிப்பு மானியத்தொகை போதவே போதாது.

·         நாகப்பட்டினம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் நேரத்தோடு சம்பளப்பட்டியலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பாத காரணத்தாலும் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலகப்பணியாளர்களின் அலட்சியத்தாலும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

·         இதைப்பற்றிய செய்தி 31.08.2014 தேதியிட்ட தினகரன் நாளிதழில் வெளிவந்தள்ளது. 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

·         20 மாதங்களாக ஊதியம் கிடைக்கப்பெறாத காரணத்தால் துப்புரவு பணியாளர்கள் பள்ளியையும் வகுப்பறைகளையும் சுத்தம் செய்ய மறுக்கின்றனர். போராடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளியின் சுத்தம் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதினால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


·         நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாகை உதவித்தொடக்க க்கல்வி அலுவலரையும் வட்டார வளர்ச்சி அலுவலரையும் அறிவுறுத்தி பள்ளி துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி மாதந்தோறும் வழங்கிட ஆவண செய்யுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக்கிளை கேட்டுக்கொள்கிறது.